மண் தரையால் நெல் மூடைகள் கொள்முதல் நிலையங்களில் பாதுகாப்பு இன்றி பாதிப்பு .
மாவட்டத்தில் செயல்படும் தற்காலிக அரசு நெல்கொள்முதல் நிலையங்களிலும் சுமார் 600 முதல் 800 மூடைகள் வரை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு வரும் நிலையில் இவற்றிற்கு அருகிலேயே தகுந்த சேமிப்பு கிடங்கு வசதியில்லை. மழைக் காலங்களில் நெல் மூடைகள் நனைந்து சேதம் அடைவதால் தகுந்த நடவடிக்கை எடுக்காமல் விவசாயிகள் பாதிப்படைந்து வருகின்றனர்.
கொள்முதல் செய்யப்படும் நெல் மூடைகள் தேக்கி வைக்கப்பட்டு லாரிகள் மூலம் தொலைவில் உள்ள கிடங்குகளுக்கு அனுப்பப்படுகிறது. இந்நிலையில் நெல் கொள்முதல் மூடைகள் கூலி பிரச்சினை, லாரி கிடைப்பதில் தாமதம், விடுமுறை என பல்வேறு காரணங்களால் கொள்முதல் செய்யும் இடங்களிலேயே தேக்கி வைக்கப்படுகிறது.திறந்த வெளி மண் தரையாக உள்ளதால் மழை நேரங்களில் தார்ப்பாய் மூடி இருந்தும் தரையில் சிமெண்ட் தளம் இல்லாததால் தண்ணீர் தேங்கி அடியில் வைக்கப்படும் நெல் மூடைகள் சேதம் அடைகின்றன. தொடர் மழை காலங்களில் இது போன்ற சிக்கலை தீர்க்க தகுந்த சிமெண்ட், கான்கிரீட் தரைதளம் கொண்ட இடங்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
0
Leave a Reply