பள்ளிக்குச் செல்ல வேண்டிய வயதில் வேலைக்குச் செல்லும் குழந்தைகளின் நிலையை மாற்றி, அனைவருக்கும் கல்வி மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்ய 2002 முதல் சர்வதேச தொழிலாளர் அமைப்பால் இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. வறுமை, குடும்ப சூழ்நிலை மற்றும் பெற்றோர்களின் விழிப்புணர்வின்மையே குழந்தைகள் வேலைக்குச் செல்ல முக்கிய காரணங்களாகும். கடைகள் அல்லது தொழிற்சாலைகளில் குழந்தைகள் வேலை செய்வதைக் கண்டால் 1098 என்ற இலவச எண்ணிற்குத் தொடர்பு கொள்ளலாம். ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்யலாம்.குழந்தைகளின் கைகளில் இருக்க வேண்டியது புத்தகமே தவிர வேலைக்கருவிகள் அல்ல. குழந்தைத் தொழிலாளர் இல்லாத உலகைப் படைப்போம்!
'விளையாட்டைப் பாதுகாப்போம், குழந்தைப் பருவத்தைப் பாதுகாப்போம்' என்ற மையக்கருத்துடன் இன்று உலக விளையாட்டு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. விளையாட்டின் மூலம் கற்பனைத் திறன், தலைமைப் பண்பு மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் திறன் வளர்வதாக ஐ.நா சபை தெரிவித்துள்ளது. உலகின் 71% குழந்தைகள் விளையாட்டு தங்களுக்கு மகிழ்ச்சி தருவதாகக் கூறியுள்ளனர்.
: பூமியையும் இயற்கையையும் பாதுகாக்க வேண்டும் என்ற உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்த, ஐக்கிய நாடுகள் சபையால் 1973 முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5-ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது.: காடுகள் அழிப்பு, பிளாஸ்டிக் பயன்பாடு ஆகியவற்றால் பூமி வெப்பமயமாகி வருகிறது. இதைத் தடுக்க, ஒவ்வொருவரும் தங்கள் பிறந்தநாளில் ஒரு மரக்கன்றையாவது நட்டு வளர்க்க வேண்டும்.நாம் செய்ய வேண்டிய எளிய மாற்றங்கள்:பிளாஸ்டிக் பைகளைத் தவிர்த்து, துணிப்பைகளைப் பயன்படுத்துவது.தேவையில்லாத போது மின்விசிறி, விளக்குகளை அணைத்து மின்சாரத்தைச் சேமிப்பது.குப்பைகளைக் குப்பைத் தொட்டியில் மட்டுமே போடுவது மற்றும் தண்ணீரை வீணாக்காமல் சேமிப்பது."மரம் வளர்ப்போம், மழை பெறுவோம், பூமியைக் காப்போம்!" என்ற உறுதியோடு, வருங்காலத் தூண்களான குழந்தைகள் நினைத்தால் பசுமையான உலகை உருவாக்க முடியும்.
பகிர்ந்து உண்ணும் பழக்கத்தை போதிக்கும் நாள். தியாகத்தின் உன்னதத்தை உணர்த்தும் நாளான பக்ரீத் தின நல்வாழ்த்துக்கள்..சகோதரத்துவமும் ஈகை குணமும் அருட்கொடையாக உலகில் நிலவிட அனைத்து இஸ்லாம் மக்களுக்கும் பக்ரீத் நல்வாழ்த்துக்கள்|பக்ரீத் தினத்தில் உங்களின் முகத்தில் சிரிப்பும் உள்ளத்தில் அமைதியும் நிலைத்திரட்டும்.
ஐ.நா., சார்பில் மே 20ல் உலக தேனீக்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இவற்றை பாதுகாக்க வலியுறுத்தி, தேனீக்கள் இல்லையெனில் உயிரினங்களின் சூழலியல் சுழற்சி பாதிக்கப்படும். தேன் முக்கிய உணவு. மருத்துவத்திலும் முக்கிய பங்காற்றுகிறது. உழைப்பை தேனீக்களிடம் இருந்து சுறுசுறுப்பு, கற்றுக்கொள்ளலாம். இவை பல வழிகளில் மனிதர்களுக்கு உதவுகிறது. தேனீக்கள் வளர்ப்பு, விவசாயத்துக்கும் உதவுகிறது. 'மக்கள், பிரபஞ்சத்துக்காக தேனீக்கள் ஒன்றிணைதல்; இந்த கூட்டு நம் அனைவரையும் பாதுகாக்கிறது' என்பது இந்தாண்டு கருத்து.
விளையாட்டு போட்டிகளில் முக்கியமானது தடகளம். மே 7ல் உலக தடகளதினம் கடைபிடிக்கப்படுகிறது. சர்வதேச தடகள கூட்டமைப்பு 1996ல் இத்தினத்தைஉருவாக்கியது. இது ஓடுதல், நடைபயிற்சி, குதிப்பது, ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல்உட்படபல்வேறுபிரிவுகளை உள்ளடக்கியது.பள்ளி,கல்லுாரிகளில்தடகளவிளையாட்டுபோட்டிகளில் மாணவர்கள், இளைஞர்களின் பங்கேற்பை ஊக்கப்படுத்தும் விதமாக, இளைஞர்கள் உடல்நலனை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது.
முயன்றால் முடியாதது இல்லைமுயற்சிப்போம் முடிவுக்காக அல்லநம் முன்னேற்றத்திற்காகவீட்டை உயரத்திட நாட்டை வளரத்திட நாளை உருவாக இன்று உழைத்திடும் உன்னத கரங்களேஅனைவருக்கும் தொழிலாளர் தின வாழ்த்துக்கள்..! உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்தும்; நம்பிக்கையோடு உழைத்தால்வாழ்வில் வெற்றி பெறுவது நிச்சயம். தனக்கென்று சேமிக்காமல் தன் குடும்பத்திற்காக ஓய்வின்றி உழைக்கும் ஒவ்வொரு அம்மாவிற்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள். அனைவருக்கும் உழைப்பாளர் ,தொழிலாளர்கள் 'மே' தின வாழ்த்துக்கள்..! உலக வளர்ச்சியில் உலகின் சமூக. பொருளாதார தொழிலாளர்களின் அர்ப்பணிப்பு, உழைப்பை அங்கீகரிக்கும் விதமாக தொழிலாளர் அமைப்பு சார்பில் மே 1ல் உலக தொழிலாளர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. தொழிலாளர்களுக்கு '8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர துாக்கம்' என்ற வகையில் இருக்க வேண்டும் என்பதைஇத்தினம் வலியுறுத்துகிறது 19ம் நுாற்றாண்டில் வளர்ந்த நாடுகளில் 12-18 மணி நேரம் கட்டாயம் வேலை என இருந்தது. இதை எதிர்த்து தொழிலாளர்கள் போராட்டங்களை நடத்தினர். இந்தியாவில் 1923ல் இத்தினம் தொடங்கப்பட்டது.
புதிய வருடம் ,புதிய கனவுகளின் தொடக்கம்,தைரியத்துடன் நகருங்கள்,வெற்றி உங்களையே தேடிவரும்.எண்ணங்களில் தெளிவு,செயல்களில் நம்பிக்கை,வாழ்க்கையில் நிறைவு தரும் ஒரு புத்தாண்டாக மலரட்டும்.
26 ஆம் ஆண்டில் இராஜபாளையம் டைம்ஸ் .4 ஆம் ஆண்டில் இராஜபாளையம் டைம்ஸ். E . paper.தினமும் 5000 பார்வையாளர்களை கொண்ட E. Paper
மகாவீரரின் 2624வதுபிறந்தநாள் கொண்டாடுவதை முன்னிட்டு,மகாவீர் ஜெயந்தி மார்ச் 31ல் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் சமணர்களின் 24 வது மற்றும் கடைசி தீர்த்தங்கரரின் பிறப்பை குறிப்பதுடன் அகிம்சை,சத்தியம், கருணை ஆகிய அடிப்படை கோட்பாடுகளை வலியுறுத்துகிறது. ராஜபாளையம் ராஜூக்கள் கல்லுாரி வரலாற்று துறை பேராசிரியர் கந்தசாமி ,தொல்லியல் ஆய்வாளர் கூறியதாவது, திருச்சுழி, அருப்புக்கோட்டையில் சமணம் செழித்திருந்ததற்கான ஆவணங்கள் கிடைத்தாலும், ராஜபாளையம் அடுத்த சேத்துாரில் சமணர் சிற்பமும், புத்தூரில் சமண முனிவர்களின் கற்படுகைகளும், மீனாட்சிபுரம் குகை களும் சமண முனிவர்கள் அதிகமாக இப்பகுதியில் வாழ்ந்து வந்துள்ளதை பிர திபலிக்கின்றது.இத்தகைய வரலாற்று இடங்களை பாதுகாத்து ஆவணப்படுத்தி பள்ளி, கல்லுாரி மாணவர்களை அழைத்துச் சென்று நமது பாரம்பரியத்தின் முக்கியத்துவம் உணர்த்த வேண்டும் என்றார்.