25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


இன்றைய தினம்

Dec 29, 2024

அனுமன் ஜெயந்தி.

மார்கழி மாதத்தில் அமாவாசை திதியும், மூலம் நட்சத்திரமும் இணையும் நாளில் அவதரித்தவர் அனுமன். இந்நாளே அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. பக்தி, பணிவு, பலம் நமக்கு ஏற்பட, அவற்றின் அடையாளமான அனுமனை அனுமன் ஜெயந்தி நாளில் வழிபடுவது மிகவும் சிறப்பு. அனுமன் காயத்ரி மந்திரம்- ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே ,வாயுபுத்திராயதீமஹி ,தன்னோ ஹனுமத் ப்ரசோதயாத்.

Dec 24, 2024

கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்

கிறிஸ்துமஸ் உங்களுக்கு புதிய தொடக்கங்களை, மகிழ்ச்சியான நினைவுகளை, மற்றும் அன்பான தருணங்களை கொண்டுவரட்டும்.

Dec 12, 2024

கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை அன்று விளக்கேற்றும் முறை.

திருக்கார்த்திகையன்று காலையில் குளித்ததும், 7:30 மணிக்குள் குலதெய்வத்தை மனதில் நினைத்து பூஜை செய்ய வேண்டும். சிவனுக்கும், முருகனுக்கும் உரிய பாடல்களைப் பாட வேண்டும். அன்று மாலை வரை மனதிற்குள் அண்ணாமலைக்கு அரோகரா, நமசிவாய, சிவாயநம, சரவணபவ ஆகிய மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். மாலை ஆறு மணிக்கு விளக்கேற்ற வேண்டும். திரியை வெறும் கைகளால் தூண்டக் கூடாது. ஏதாவது தீக்குச்சி, பூவின் காம்பு ஆகியவற்றை பயன்படுத்தி தான் திரியை தூண்ட வேண்டும். அல்லது விளக்கு தூண்டு திரியை பயன்படுத்தி விளக்கை தூண்ட வேண்டும்.திருக்கார்த்திகை அன்று விளக்கேற்றும் போது அகல் விளக்காக இருந்தாலும் வெறும் தரையில் வைக்கக் கூடாது. வாழை இலை, அரசு இலை,செம்பருத்தி இலை, வெற்றிலை என சுபிட்சத்தை தரும் ஏதாவது ஒரு இலை மீது வைத்து தான் ஏற்ற வேண்டும்.முதலில் வாசலில் கோலத்தின் மீது வைத்த விளக்கு,பிறகு நிலை வாசலில் வைத்த விளக்கை ஏற்ற வேண்டும். அங்கிருந்து ஒரு அகல் விளக்கை எடுத்து வந்து வீட்டின் பூஜைஅறையில் விளக்கேற்றி விட்டு, அதற்கு பிறகு தான் மற்ற இடங்களில் விளக்கேற்றவேண்டும்.விளக்கை மலையேற்றும் போது, தூண்டு திரியை பயன்படுத்தி திரியை பின்னோக்கி இழுத்து விளக்கை மலையேற்றலாம். அல்லது பூவை பயன்படுத்தி தீபத்தின் சுடரை அழுத்தி, மலையேற்றலாம்.வாயால் ஊதியோ, கையை வைத்து விசிறியோ விளக்கை குளிர வைக்க கூடாது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என யார் வேண்டுமானாலும் தீபம் ஏற்றலாம்.

Dec 11, 2024

கார்த்திகை மாதத்தின் சிறப்புகள்!! கார்த்திகை தீப திருவிழா:

கார்த்திகை மாதத்தில் தினமும் விளக்கேற்ற முடியாவிட்டாலும், துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய இந்த 3 தினங்களிலாவது தீபம் ஏற்றி வழிபடவேண்டும். விளக்கேற்றும்போது, ஒரு முகம் ஏற்றினால், நினைத்த செயல்கள் நடக்கும் என்பார்கள். இரண்டு முகம் ஏற்றினால் குடும்ப ஒற்றுமை கிட்டும். மூன்று முகம் ஏற்றினால். புத்திரதோஷம் நீங்கும். நான்கு முகம் ஏற்றினால் பசு, பூமி, செல்வம் சேரும். சர்வ பீடை நிவர்த்தி ஆகும். ஐந்து முகம் ஏற்றினால், சகல நன்மையும், ஐஸ்வரியமும் பெருகும்.கார்த்திகை மாதத்தில் சிவலிங்கத்தை நெய்யினால் அபிஷேகம் செய்து வில்வம் மற்றும் மரிக்கொழுந்தால் அர்ச்சனை செய்து வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். விருச்சிக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் இம்மாதத்தில் மனசேர்க்கை, உடல் சேர்க்கை, கர்ப்பதானம் ஆகிய இவற்றில் பிரச்சினைகள் வராது. எனவே, கார்த்திகை மாதத்தைத் திருமண மாதம் என்று இந்து சாஸ்திரம் கூறுகிறது.கார்த்திகை மாதத்தில் நாள்தோறும் சூரிய உதயத்தின் போது நீராடுபவர்கள், சகல புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிய புண்ணிய பலனை அடைவார்கள். விஷ்ணு பகவானை கார்த்திகை மாதத்தில் புஷ்பங்களால் அர்ச்சித்து பூஜை செய்பவர்கள் தேவர்களும் அடைய அரிதான மோட்ச நிலையை அடைவார்கள்.10-ந்தேதி மகா தேரோட்டம் நடைபெறுகிறது. ஒரே நாளில் 5 தேர்கள் வலம் வரும். தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 13-ந் தேதி காலை பரணி தீபமும், மாலை 6 மணிக்கு, 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. மலையில் ஏற்றப்படும் மகா தீபம்தொடர்ந்து 11 நாட்களுக்கு காட்சியளிக்கும். தொடர்ந்து 11 நாட்களும் மலையில் தீபம் ஏற்றப்படும். அதற்காக, 4,500 கிலோ தூய நெய் ஆவினிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டு, 1,500 மீட்டர் திரியும் தயார் நிலையில் உள்ளது. 

Nov 27, 2024

நூற்றாண்டு விழா காணும் 0.386 பூபதிராஜு கூட்டுறவு நாணய வங்கி லிட், 0.386 பூபதிராஜு கூட்டுறவு கடன் வங்கி லிமிடெட் , இராஜபாளையம்

விவசாயம்,வணிகம் மற்றும் தனிநபர் நிதிச்சேவைகள் மூலம் இராஜபாளையம் நகரின் வளர்ச்சியில் தன் நூற்றாண்டு பங்களிப்பை கொண்டாடும்,இந்நாளில் (28.11.2024) வங்கியின் நிறுவனர்,ஒரிசா மாநில முன்னாள் ஆளுநர்,சென்னை மாகாண முன்னாள் முதலமைச்சர் “தியாகத் திருமகனார்" அமரர் திரு பி.எஸ்.குமாரசாமி ராஜா அவர்களை போற்றி வங்கியின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை பாராட்டுகிறோம்.வங்கியின் சேவைகள் பல நூற்றாண்டுகள் சிறப்பாக தொடர வாழ்த்துகிறோம்.

Nov 13, 2024

குழந்தைகள் தினம்

 குழந்தைகளை அங்கீகரிப்பதற்காக இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இது "பால் திவாஸ்" என்றும் அழைக்கப்படுகிறது. இந்த தேதியில் தான் நம்முடைய இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால்  பிறந்த நாளும் அமைகிறது. ஜவஹர்லால் நேரு குழந்தைகள் மீது அதிக பிரியம் கொண்டவர். ஒவ்வொரு குழந்தையையும் அவர் இந்தியாவின் எதிர்காலமாகவே பார்த்தார்.குழந்தைகள் ஒரு தோட்டத்தில் உள்ள மொட்டுகளை போன்றவர்கள், அவர்களை மிகவும் கவனமாகவும்,அன்புடனும் நாம் பரமரிக்க வேண்டும். ஏனெனில் அவர்கள்தான் இந்த நாட்டின் எதிர்காலம், நாளைய குடிமக்கள்” என்று நேரு ஒருமுறை அவருடைய உரையாடலில் கூறியிருந்தார். எனவே இவருடைய பிறந்தநாளையே குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறோம்.

Nov 07, 2024

பழமுதிர்ச்சோலை கோவிலின் சிறப்பு

அறுபடை வீடுகளில் மூலஸ்தானத்தில் தம்பதிகளுடன் முருகன் காட்சி தரும் கோயில் சோலைமலை மட்டுமே. கந்தசஷ்டி விழாவின் தொடர்ச்சியாக இங்கு திருக்கல்யாணமும், முருகன் அவ்வையாரிடம் சுட்ட பழம் வேண்டும்? சுடாத பழம் வேண்டுமா? என கேட்ட திருவிளையாடலும் நடத்தப்படுகிறது.முருகப்பெருமானின் ஆறாவது படைவீடாக போற்றப்படும் பழமுதிர்ச்சோலைக்கு, "சோலைமலை" என்ற பெயரும் உண்டு. இங்குள்ள முருகப்பெருமான் வெற்றிவேல் முருகன் என்று அழைக்கப்படுகிறார். பழமுதிர்ச்சோலை என்பதற்கு பழங்கள் உதிர்க்கப் பெற்ற சோலை" என்று பொருள் எடுத்துக்கொள்ளலாம்.கந்தபுராணத் துதிப்பாடலில், வள்ளியம்மையைத் திருமணம் செய்ய விநாயகரை யானையாக வந்து உதவும்படி முருகப்பெருமான் அழைத்த தலம் பழமுதிர்ச்சோலை என்று கூறுகிறார் கச்சியப்ப சிவாச்சாரியார். எனவே ஆறாவது படை வீடாகிய பழமுதிர்ச்சோலை, வள்ளி மலையைக் குறிக்கும் என்று ஒருசாரார் தெரிவிக்கின்றனர்.

Oct 30, 2024

HAPPY DEEPAWALI

தீபாவளியை சூழ்ச்சிகளும், தீமைகளும் தறிகெட்டு ஓட, நன்மையும் அன்பும் நாடிவர இன்பமாய் கொண்டாடுவோம். தீபாவளியைபெரிய சப்தத்துடன் கூடிய வெடிகளை வெடித்து மற்றவர்களை துன்பப்படுத்தாமல், சுற்றுப்புறச் சூழலை நாம் பாது காக்க வேண்டும். இந்த தீபாவளி திருநாள் ஒரு புதிய ஆரம்பம்புதிய கனவுகள் மற்றும் நம்பிக்கைகளுடன் உங்கள் வாழ்க்கையை தொடங்குங்கள்.சகலவிதமான சந்தோஷங்கள், உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் வந்தடைய இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

Oct 27, 2024

உள்நாட்டில் ராணுவ விமான தயாரிப்பு ” டாடா அட்வான்ஸ் சிஸ்டம்ஸ்” இன்று துவக்கம்

குஜராத்தில் வதோதராவில் 2022ம் ஆண்டு அக்டோபரில், பிரதமர் மோடி முன்னிலையில் இந்த ஆலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு பின், இன்று முதல் இந்த ஆலை செயல்பாட்டுக்கு வர உள்ளது. குஜராத்தின் வதோ தராவில் அமைக்கப் பட்டுள்ள ஆலையில், இன்று முதல் துவங்க உள்ளது. பிரதமர் நரேந் திர மோடி மற்றும் ஸ்பெ யின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் இணைந்து, இந்த ஆலையை துவக்கி வைக்க உள்ளனர்.இந்திய விமானப் படை கடந்த 1960-களில் இருந்து “அவ்ரோ ஹாக்கர் சிட்டிலே எச்.எஸ்.748 “ரக விமானங்களை பயன்படுத்தி வருகிறது. இந்த விமானங்கள் பல ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ள நிலையில், இவற்றுக்கு மாற்றாக ஸ்பெயனின் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 56 C- 295 ரக விமானங்களை வாங்க. 2021-ம் ஆண்டு” ஏர்பஸ் டிபன்ஸ் அண்டு ஸ்பேஸ்” நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது.21,000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தின்படி, ஸ்பெயினில் உள்ள ஏர்பஸ் ஆலைகளில் இருந்து 16 விமானங்கள் இந்தியாவுக்கு தயாரித்து அனுப்பப்படும் என்றும், மீதமுள்ள 40 விமானங்களை இந்தியாவிலேயே” டாடா அட்வான்ஸ் சிஸ்டம்ஸ்” நிறுவனத்துடன் இணைந்து ஏர்பஸ் தயாரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது., இன்று முதல் இந்த ஆலை செயல்பாட்டுக்கு வர உள்ளது

Oct 24, 2024

" JOY ALLUKAS "இன் நகைக் கண்காட்சி

புகழ் பெற்ற நகைக் கடையான JOY ALLUKAS இன் நகைக் கண்காட்சி இராஜபாளையத்தில் இன்று முதல் 3 நாட்கள் ( 25, 26, 27)-ம் தேதி வரை நடைபெறுகிறது 

1 2 ... 5 6 7 8 9 10 11 ... 15 16

AD's



More News