25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Jun 15, 2026

சிறுபான்மையினருக்கான நலத்திட்டங்கள் மற்றும் வக்ஃபு வாரிய செயல்பாடுகள் குறித்துஅமைச்சர் பெருமக்கள் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (13.06.2026) பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.பி.செல்வம் அவர்கள், திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.கார்த்திக் அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி அவர்கள் மற்றும் சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான்,I A S., அவர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற ஆய்வுக்கூடத்தில்,  தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் மற்றும்  சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு.ஏ.எம்.ஷாஜஹான் அவர்கள் ஆகியோர் சிறுபான்மையினருக்கான நலத்திட்டங்கள் மற்றும் வக்ஃபு வாரிய செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.இக்கூட்டத்தில் முஸ்லீம் மற்றும் கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கங்களின் செயல்பாடுகள், உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத்தின் செயல்பாடுகள் மற்றும் வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள், உலமா பணியாளர்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் மானியத்திட்டத்தின் செயல்பாடுகள், கிறிஸ்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியர்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத்தின் செயல்பாடுகள், கிறிஸ்துவ தேவாலயங்கள் பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள், கிறித்தவர்/முஸ்லிம்களின் பயன்பாட்டிற்காக கல்லறைத்தோட்டம்/கபர்ஸ்தான் அமைத்தல், சிறுபான்மையின மாணவிகளுக்கான கிராமப்புற பெண்கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டம், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம்(TAMCO) மூலம் வழங்கப்பட்ட கடனுதவிகள், சிறுபான்மையினருக்கு மின் மோட்டாருடன் கூடிய விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டம், பிரதான் மந்திரி ஜன்விகாஸ் கார்யகிராம் திட்டம்(PMJVK) உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.பின்னர், முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த ஆதரவற்ற மற்றும் ஏழ்மை நிலையிலுள்ள மகளிருக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலும், சுயதொழில் செய்து வருமானம் ஈட்ட வழிவகை செய்யும் பொருட்டு, 160 முஸ்லீம் மகளிர்களுக்கு ரூ15.78 இலட்சம் மதிப்பீட்டில் கல்வி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, சிறுதொழில் விரிவாக்க உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும், 15 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பயனாளிகளுக்கு ரூ.80,980/- மதிப்பீட்டில் விலையில்லா தையல் இயந்திரம், விலையில்லா தேய்ப்புப் பெட்டிகளையும், 4 உறுப்பினர்களுக்கு உலமாக்கள் நல வாரிய அட்டைகளையும், 1 உறுப்பினருக்கு கிறிஸ்துவ உபதேசியர் நல வாரிய அட்டையையும் என மொத்தம் 180 பயனாளிகளுக்கு ரூ.16.59 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் மற்றும்  சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு.ஏ.எம்.ஷாஜஹான் அவர்கள் ஆகியோர் வழங்கினார்கள். இந்த ஆய்வுக் கூட்டத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:          தமிழக அரசு மக்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக சிறுபான்மையின மக்களை பாதுகாக்கவும் அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் அவர்களுக்கான கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூக மேம்பாட்டை நோக்கமாக கொண்டு பல்வேறு அரசு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.ஒரு மாநிலத்தின் உண்மையான வளர்ச்சி என்பது தொழில்துறை வளர்ச்சியில் மட்டுமல்ல அந்த மாநிலத்தில் வாழும் விளிம்புநிலை மற்றும் சிறுபான்மையின மக்களின் பொருளாதார வளர்ச்சியிலும் தான் அடங்கியுள்ளது. அதை மிகச்சரியாக உணர்ந்த அரசுதான் நமது அரசு.ஆதரவற்ற, ஏழை இஸ்லாமிய மற்றும் கிறித்துவ மகளிரின் வாழ்வாதாரத்தை உயர்த்த இஸ்லாமிய/கிறித்துவ 'மகளிர் உதவும் சங்கங்கள்' மூலம் தையல் இயந்திரங்கள், சிறுதொழில் மற்றும் கல்வி நிதியுதவிகள் பெருமளவில் வழங்கப்பட்டுள்ளன. சமூகத்திற்கு வழிகாட்டும் உலமாக்கள் மற்றும் கிறித்துவ உபதேசியார்கள், பணியாளர்கள் நல வாரியங்கள் மூலம் பல்வேறு சமூகப் பாதுகாப்பு உதவிகள் வழங்கப்படுகின்றன.அதன்படி, இன்றைய தினம் 180 பயனாளிகளுக்கு ரூ.16.59 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக பெண்களின் வாழ்வாதாரத்திற்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.          அரசு நலத்திட்ட உதவிகளைப் பெற்றுள்ள அனைத்துப் பயனாளிகளுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த உதவிகளை நல்வழியில் பயன்படுத்தி உங்கள் வாழ்வை நீங்கள் வளமாக்கிக் கொள்ள வேண்டும்.இத்தகையதொரு சிறப்பான ஆய்வுக்கூட்டத்தை ஒருங்கிணைத்த சிறுபான்மையின நலத்துறைக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.சிறுபான்மை சமுதாயத்தினுடைய கல்வி, பொருளாதாரம் போன்ற நிலைகளை உயர்த்துவதற்காக நீதியரசர் ஸ்ரீ ராஜிந்தர் சச்சார் அவர்களுடைய பரிந்துரையின் அடிப்படையிலே சிறுபான்மையினர் நலத்துறை என்று ஒரு துறை பிரிக்கப்பட்டு, இஸ்லாமிய, கிருஸ்துவ சமுதாயத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களையும், வளர்ச்சித் திட்டங்களையும், கல்விக்கான திட்டங்களையும் அரசு தொடர்ச்சியாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.அந்த வகையிலே விருதுநகர் மாவட்டத்திலே 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சுமார் 11 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கக்கூடிய இந்த மொழி வழி, மத வழி சிறுபான்மையின மக்களுக்கு அரசின் உதவிகள், நலத்திட்டங்கள் சரியான முறையில் சென்று சேர்கிறதா என்பதை ஆய்வு செய்வதற்காகத்தான் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இன்று தமிழகத்திலே முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கக்கூடிய  தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் ஒட்டுமொத்த தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், அனைத்து மக்களின் நன்மைக்காகவும், அதிலும் குறிப்பாக சிறுபான்மை மக்களின் நலனுக்காகவும் மிகுந்த அக்கறை கொண்டுள்ள காரணத்தினால், வரக்கூடிய நிதிநிலை அறிக்கையிலே பல்வேறு சிறப்பான திட்டங்களை அறிவிக்க இருக்கிறார்கள்.அதிலும் குறிப்பாக வரக்கூடிய ஐந்து ஆண்டுகளை கணக்கில் எடுத்துக்கொண்டு, தொலைநோக்கு திட்டங்களை அறிவிக்க இருக்கிறார்கள். அந்த திட்டங்களை மேலும் செம்மைப்படுத்தக்கூடிய வகையிலே இந்த கலந்துரையாடக்கூடிய வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு, நீங்கள் அளிக்கக்கூடிய தகவல்களை, கோரிக்கைகளை உள்வாங்கிக்கொண்டு, அந்த திட்டங்களை மேலும் சிறப்பாக செயல்படுத்துவதற்கு உதவும் என்ற அடிப்படையில் தான் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியும் இங்கே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.மிகக் குறிப்பாக, இந்தத் துறையின் சார்பிலே பல்வேறு உதவித்தொகை வழங்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் போன்ற வழிபாட்டுத் தலங்கள் புதுப்பித்துக் கொள்ளக்கூடிய வகையிலும், சேதமடைந்திருக்கக்கூடிய இது போன்ற தலங்களை புனரமைக்கக்கூடிய வகையிலும் இந்தத் துறையின் சார்பிலே நிதி ஒதுக்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது.அதுபோலவே, உலமாக்களுடைய நல வாரியத்திலே பதிவு செய்திருக்கக்கூடிய உலமாக்களுக்கும், தேவாலயத்திலே பணிபுரியக்கூடிய அந்த உபதேசியார்கள் என்று சொல்லக்கூடியவர்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்களும் இந்தத் துறையின் சார்பிலே செயல்படுத்தப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. இறந்தவர்களை அடக்கம் செய்வதற்காக இருக்கக்கூடிய கல்லறைத் தோட்டம், கபரஸ்தான் போன்றவைகளுக்கு எல்லா இடங்களிலும் அதற்கான இடங்களைத் தேர்வு செய்து, இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு வழிவகை செய்யக்கூடிய வகையிலே தமிழகத்திலே இருக்கக்கூடிய அனைத்து மாநகராட்சியிலும் இடம் ஒதுக்க வேண்டும் என்ற அடிப்படையிலும், 38 மாவட்டங்களிலும் இதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்ற அடிப்படையிலும் கிட்டத்தட்ட 90-க்கும் அதிகமான இடங்களிலே அதற்கான பணிகள் முடிவு பெற்றுவிட்டது.அந்த வகையிலே விருதுநகர் நகராட்சியிலும், சிவகாசி மாநகராட்சியிலும் அதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, விருதுநகர் நகராட்சி கோட்டைப்பட்டியில் இடம் தேர்வு செய்யப்பட்டு நகராட்சியால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. சிவகாசி மாநகராட்சி பகுதியில் விரைவில் அதற்கான இடம் கையகப்படுத்தப்பட இருக்கிறது.அதுபோலவே, தமிழகத்திலே இருக்கக்கூடிய பள்ளிவாசல்களை நிர்வகிக்கக்கூடிய வக்ஃபு வாரியமும் சிறுபான்மைத் துறைக்கு கீழே வருவதால், அந்த பள்ளிவாசலினுடைய செயல்பாடுகளும், வரவு செலவுகளும், அந்த பள்ளிவாசலினுடைய புதுப்பிக்கும் பணிகளும், நிதி ஒதுக்கீடு செய்யக்கூடிய பணிகளையும் இந்தத் துறை செய்து வருகிறது.அதுபோலவே தேவாலயங்களுக்கும் குறிப்பிடத்தக்க அளவிலே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. 100 ஆண்டுகளைக் கடந்திருக்கக்கூடிய பழமைவாய்ந்த தேவாலயங்களுக்கு ₹2 கோடி அளவுக்கு நிதி உதவி அளித்து, அது புனரமைக்கக்கூடிய பணிகளும் இந்தத் துறையின் மூலம் செய்யப்பட்டு வருகிறது. உலமாக்களுக்கு இருசக்கர வாகனங்கள் ஏற்கனவே ₹25,000 ஆக இருந்து தற்போது ₹50,000 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதுவும் இந்த மாத இறுதிக்குள் சுமார் 1,000 உலமாக்களுக்கு அந்த வாகனத்தை அளிக்க வேண்டும் என்ற அடிப்படையிலே அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.மேலும், முஸ்லிம் உதவும் சங்கங்கள், கிறிஸ்துவ உதவும் சங்கங்கள் ஒரு பங்கு நிதியை அளித்தால், அதனுடன் கூடுதலாக 2 பங்கு நிதியுடன் சேர்த்து நலத்திட்ட உதவிகளை இந்த சிறுபான்மை சமுதாயம் பெறக்கூடிய வகையிலே ஒரு திட்டம் இருக்கிறது.ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகபட்சமாக இரண்டு உதவும் சங்கங்களை நாம் நிறுவிக் கொள்ள முடியும். இரண்டாவது சங்கம் தொடங்கப்பட வேண்டும் என்று சொன்னால், இந்த முதலாவது சங்கம் முழுமையாக செயல்பட்டு, அதனுடைய பயன்கள் முழுமையாக அந்த பயனாளிகளுக்கு கிடைக்கக்கூடிய வகையில் செயல்படுமேயானால், மேலும் ஒரு சங்கத்தைத் தொடங்கி இந்த ஏழை எளிய மக்களுக்கு உதவக்கூடிய வகையிலே திட்டங்களை செயல்படுத்த முடியும்.அதேபோலவே, நிதிநிலை அறிக்கையிலே இந்தத் துறை சார்ந்து இதுவரை ஒதுக்கீடு செய்த தொகையை விட ஒரு சிறப்பான முறையிலே தொகையை ஒதுக்கீடு செய்து, இந்த சிறுபான்மை சமுதாயம் கல்வி, வேலைவாய்ப்பு, தொழிற்பயிற்சி போன்றவற்றிகளில் அடுத்த நிலைக்கு உயர்த்த வேண்டும் என்ற அடிப்படையிலே,  தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான அரசு ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறது.அந்த வகையிலே நிச்சயமாகச் சொல்ல முடியும், உறுதியாகச் சொல்ல முடியும், வரக்கூடிய நிதிநிலை அறிக்கையிலே இந்த சிறுபான்மை சமுதாயத்திற்கான நிதிகள் உயர்த்தி வழங்கப்பட இருக்கிறது.எனவே, சிறுபான்மையினருக்கான நலத்திட்டங்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதோடு, இந்தத் திட்டங்கள் சென்று சேராத அனைவருக்கும் இந்தத் திட்டங்களை கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் வைப்பதோடு, இந்தத் திட்டங்கள் மூலம் எல்லா நிலையிலும் பின்தங்கி இருக்கக்கூடிய சமுதாயம் அடுத்த நிலைக்கு உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படக்கூடிய அரசிற்கு அனைத்து நிலைகளிலும் நீங்க அனைவரும் ஒத்துழைப்போடு இருக்க வேண்டும் என தெரிவித்தார். பின்னர், இக்கூட்டத்தில் கலந்து கொண்ட கிருஸ்துவ, இஸ்லாமிய, பௌத்தர், சீக்கியர், ஜெயின் உள்ளிட்ட சிறுபான்மையின பிரதிநிதிகள் கலந்து கொண்டு,     தங்கள் கோரிக்கைகள் மற்றும் கருத்துக்களை அமைச்சர் அவர்களிடம் தெரிவித்தனர். இந்த கோரிக்கைகளை முறையாக பரிசீலனை செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்தார்.

Jun 13, 2026

1435-ஆம் பசலிக்கான வருவாய்த் தீர்வாயம், வருவாய்த் தீர்வாய அலுவலர் ,மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1435-ஆம் பசலிக்கான வருவாய்த் தீர்வாயம் இன்று (12.06.2026) வருவாய்த் தீர்வாய அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., தலைமையில் நடைபெற்றது.விருதுநகர் மாவட்டத்தில் 1435-ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) 2026-ம் ஆண்டு ஜூன் 12 தொடங்கி, ஜூன்16 முதல் ஜூன் 19 வரை மற்றும் ஜூன் 23 முதல் ஜூன் 25 வரை ஆகிய நாட்களில் சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.அதன்படி, சாத்தூர் வட்டத்தில், ஜூன் 12 முதல் (சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள் நீங்கலாக) 5 நாட்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையிலும், சிவகாசியில் ஜூன் 12 முதல் (சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள் நீங்கலாக) 5 நாட்கள் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தலைமையிலும், திருவில்லிபுத்தூரில் ஜூன் 12 முதல் (சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள் நீங்கலாக) 3 நாட்கள் சார் ஆட்சியர், சிவகாசி அவர்கள் தலைமையிலும்,  விருதுநகரில் ஜூன் 12 முதல் (சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள் நீங்கலாக) 7 நாட்கள் வருவாய் கோட்டாட்சியர், சாத்தூர் அவர்கள் தலைமையிலும்,காரியாபட்டியில்       ஜூன் 12 முதல் (சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள் நீங்கலாக) 6 நாட்கள் அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் தலைமையிலும்,அருப்புக்கோட்டையில்       ஜூன் 12 முதல் (சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள் நீங்கலாக) 7 நாட்கள் உதவி ஆணையர் (கலால்), விருதுநகர் அவர்கள் தலைமையிலும், இராஜபாளையத்தில் ஜூன் 12 முதல் (சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள் நீங்கலாக) 5 நாட்கள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், விருதுநகர்     அவர்கள் தலைமையிலும்,வெம்பக்கோட்டையில் ஜூன் 12 முதல் (சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள் நீங்கலாக) 5 நாட்கள் தனித்துணை ஆட்சியர்(ச.பா.தி), விருதுநகர் அவர்கள் தலைமையிலும்,திருச்சுழியில் ஜூன் 12 முதல் (சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள் நீங்கலாக) 8 நாட்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், விருதுநகர் அவர்கள் தலைமையிலும்,வத்திராயிருப்பில் ஜூன் 12 முதல் (சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள் நீங்கலாக) 3 நாட்கள் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், விருதுநகர் அவர்கள் தலைமையிலும், வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெற உள்ளனஅதன்படி, முதல் நாளான இன்றைய தினம், சாத்தூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய்த் தீர்வாயத்தில், பொதுமக்கள் கலந்து கொண்டு பட்டா மாறுதல் (முழுப்புலம்) தொடர்பாக 4 மனுக்களும், அத்துமால் அளத்தல் தொடர்பாக 3 மனுக்களும், பட்டா மேல்முறையீடு தொடர்பாக 36 மனுக்களும், கணினி திருத்தம் தொடர்பாக 4 மனுக்களும், வீட்டுமனை பட்டா தொடர்பாக 11 மனுக்களும், நில ஆக்கிரமிப்பு தொடர்பாக 3 மனுக்களும், நில ஒப்படை தொடர்பாக 1 மனுவும்,கணினி சிட்டா/புட்டா நகல் புலப்பட நகல் தொடர்பாக 2 மனுக்களும், நத்தம் சிட்டா/புட்டா நகல் தொடர்பாக 3 மனுக்களும், குடும்ப அட்டை தொடர்பாக 1 மனுவும், சான்றுகள் தொடர்பாக 3 மனுக்களும், 6 இதர மனுக்களும், பிற துறைகள் சார்பாக 3 மனுக்களும் என மொத்தம் 80 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட அனைத்து மனுக்களையும் உரிய காலக்கெடுவிற்குள் விரைந்து முடிக்குமாறு வருவாய்த் தீர்வாய அலுவலர் / மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.தொடர்ந்து, சாத்தூர் வட்டம், பெத்துரெட்டியாபட்டி கிராமத்தைச் சேர்ந்த 14 பயனாளிகளுக்கு கணினி இணைய வழி பட்டாக்களையும், மாண்புமிகு முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு ரூ.38 ஆயிரம் மதிப்பில் திருமண உதவித்தொகைக்கான ஆணைகளையும் வருவாய்த் தீர்வாய அலுவலர் / மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.இந்த ஜமாபந்தியின் நோக்கமானது வருவாய் / கிராம கணக்குகள், நில ஆவணங்கள் கணக்கு, பயிர் கணக்கு போன்றவை கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், புள்ளியியல்துறை அலுவலர்கள் எவ்வாறு பராமரித்து வருகின்றனர் என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.எனவே பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக எழுதி, தங்களது கிராமத்திற்கான ஜமாபந்தி நடைபெறும் நாட்களில் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று தங்களது மனுக்களை வழங்கி கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்வில் வட்டாட்சியர், வருவாய்த்துறை அலுவலர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Jun 13, 2026

சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்  (12.06.2026) ஜீன்-12 சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, பள்ளிக்கல்வித்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் வேல்டு விசன் இணைந்து நடத்திய பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, நான், குழந்தை மற்றும் இளம் பருவத்தொழிலாளர் எவரையும் பணியில் அமர்த்த மாட்டேன். குழந்தை மற்றும் இளம் பருவத்தொழிலாளர் முறையை அகற்றிட - குழந்தை தொழிலாளர்களை ஈடுபடுத்தி தயார் செய்யும் எந்த பொருளையும் உபயோகப்படுத்த மாட்டேன் என்றும் உறுதியளிக்கிறேன் என்ற  விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்.பின்னர், குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு தகவல்கள் அடங்கிய விழிப்புணர்வுப் பிரச்சார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்அதனைத்தொடர்ந்து, சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, “இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன் எனவும், அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன் எனவும், குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், தமிழ்நாட்டை குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் எனவும் உளமார உறுதி கூறுகிறேன்.” என்ற விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் எடுத்துக்கொண்டனர்.முன்னதாக, விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில், குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு குறித்து குறும்படம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட மின்னனு விளம்பர திரையினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைத் தொழிலாளர் ஒருங்கிணைப்பு அலுவலர்கள், பள்ளிக் கல்வித் துறை, தொண்டு நிறுவனமான வேல்டு விஷன் இந்தியா உட்பட அரசு அலுவலர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Jun 13, 2026

அருப்புக்கோட்டை நகரட்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் கள ஆய்வு.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (12.06.2026)  நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் ஆய்வு:மேலரத வீதி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவின் தரத்தினை ஆய்வு செய்தார்.சமூக நீதி விடுதி ஆய்வு:உள்கட்டமைப்பு மற்றும் தூய்மை (Infrastructure & Cleanliness), வளாகத் தூய்மை, மின்சார வசதி, உணவு மற்றும் குடிநீர் பராமரிப்பு (Food & Drinking Water) குறித்தும், மாணவர்களுக்கு வழங்கப்படும் அடிப்படை உபகரணங்கள் குறித்தும், விடுதியில் முதலுதவி பெட்டி (First Aid Box) இருப்பு நிலை குறித்தும்  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும், மாணவர்களுக்கு கால அட்டவணைப்படி, சமைக்கப்படும் உணவுகளின் பதிவேடு குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.நகராட்சி அலுவலக ஆய்வுக் கூட்டம்:நகராட்சி நிர்வாகத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் விநியோகம், தெருவிளக்கு வசதிகள் மற்றும் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளின் தற்போதைய நிலை குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது நகராட்சி அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்து தீர்வுகாண வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.பாப்பன்குளம் கண்மாய் சீரமைப்புப் பணி:கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் (KNUD) கீழ், ரூ.89 இலட்சம் மதிப்பீட்டில் பாப்பன்குளம் கண்மாய் சீரமைக்கப்படும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கம்மாயைச் சுற்றி தடுப்புச் சுவர் கட்டும் பணிகள் மற்றும் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகள் நடும் பணிகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு, பணிகளின் தரத்தினை ஆய்வு செய்தார்.தூய்மைப் பணி  ஆய்வு:          தொடர்ந்து, பாளையம்பட்டி பகுதியில் நடைபெற்று வரும் தூய்மைப் பணிகளை (Cleanliness Drive) மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு சுற்றுப்புறத் தூய்மையை உறுதி செய்தார்.குப்பைகளை ஈரக்கழிவு, உலர்க்கழிவு, சுகாதார கழிவு மற்றும் சிறப்பு கவனக் கழிவு என நான்கு வகைகளாக பிரித்து திடக்கழிவு மேலாண்மை பின்பற்றுவதை ஆய்வு செய்தார்.          பாளையம்பட்டி, SBK வீடு தெருவில், முதன்மை பணிகள் சேமிப்பு நிதி 2025-2026 திட்டத்தின் கீழ், ரூ.10 இலட்சம் மதிப்பில் பேவர் பிளாக் அமைக்கப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்நிகழ்வின் போது, நகராட்சி ஆணையர், நகராட்சிப் பொறியாளர்கள், அரசு உயர் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

Jun 12, 2026

ந.சுப்பையாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 7-மாணவியர்கள் சாதனை நிகழ்வு நடத்தும் விதமாக 1330 திருக்குறளை தலைகீழாக எழுதும் நிகழ்வினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் துவக்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், ந.சுப்பையாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் (11.06.2026)  7-மாணவியர்கள் சாதனை நிகழ்வு நடத்தும் விதமாக 1330 திருக்குறளை 15 மணி நேரம் தலைகீழாக எழுதும் நிகழ்வினை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார். சாத்தூர் வட்டம், ந.சுப்பையாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 8 ஆம் வகுப்பில் பயிலும் மு.யாசினி, மா.பவித்ரா, கு.சாருமதி மற்றும் சு.மது ஸ்ரீ மற்றும் 9 ஆம் வகுப்பில் பயிலும் மு.அனுஷா, மா.மாதவி  மற்றும் 10 ஆம் வகுப்பில் பயிலும் கி.ஸ்ரீவர்ஷினி ஆகிய 7-மாணவியர்கள் சாதனை நிகழ்வு நடத்தும் விதமாக 1330 திருக்குறளை மனனமாக 15 மணி நேரம் தலைகீழாக எழுதும் நிகழ்வினை தொடங்கியுள்ளனர். சாதனை நிகழ்வு: 1330-வது திருக்குறளிலிருந்து தொடங்கி 1-வது திருக்குறள் வரை தலைகீழ் வரிசையில் (Reverse Order) முழுமையாக மனனம் செய்து, 15 மணி நேரத்தில் எழுதி முடிக்கும்  சாதனை முயற்சி. சிறப்பு நிகழ்வு: மாவட்ட ஆட்சியர் அவர்களின் நேரடி ஆய்வு மற்றும் ஊக்கப்படுத்துதல். இச்சாதனை நிகழ்வினை, ஆல் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம், தமிழ் வளர்ச்சித் துறை, கரிசல் இலக்கியக் கழகம், மகிழ்வோர் மன்றம், கோவில்பட்டி, ரோட்டரி சங்கம், கோவில்பட்டி போன்ற இயக்கங்கள் கண்காணிக்கின்றனர்.மாணவியர்களின் சாதனை முயற்சியினை பாராட்டும் விதமாக, பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.ராஜ்மோகன் அவர்கள், வாழ்த்துச் செய்தியினை அனுப்பி வாழ்த்தினை மாணவியர்களுக்கு தெரிவித்துள்ளார்.

Jun 12, 2026

சாத்தூர் நகராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் குடிநீர்த் திட்டப் பணிகள்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் நகராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (11.06.2026) நேரில் சென்று பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார்.முன்னதாக சாத்தூர் நகராட்சி அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் அரசு திட்டங்கள் மற்றும் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக அரசு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.பின்னர், பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் வழங்கும் நீர் ஏற்ற நிலையத்தின் கட்டுப்பாட்டு அலகினை (Control Unit) பார்வையிட்டு அதன் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு செய்தார்.நுண் உர மையம் ஆய்வு:தூய்மை இந்தியா திட்டம் 2018-2019 ன் கீழ் சாத்தூர் நகராட்சி மேலக்காந்தி நகரில் அமைக்கப்பட்டுள்ள நுண் உர செயலாக்க மையத்திற்குச் (Micro Composting Centre)* சென்ற மாவட்ட ஆட்சியர், அங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளை உரமாக மாற்றுவதைப் பார்வையிட்டார்.விவசாயம் மற்றும் மண்ணிற்கு நன்மை பயக்கும் இயற்கை உரம் தயாரிக்கும் பணிகளை எவ்விதத் தொய்வுமின்றி (தடையின்றி) தொடர்ந்து செயல்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் ஆய்வு:தொடர்ந்து, S.H.N. மேரி தொடக்கப்பள்ளி மற்றும் படந்தால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவின் தரத்தினை ஆய்வு செய்தார்.குழந்தைகளுக்குக் கால அட்டவணைப்படி சத்தான மற்றும் சுவையான உணவினைத் தடையின்றி வழங்கவும் பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் சமையலர்களுக்கு அறிவுறுத்தினார்.உள்கட்டமைப்பு மேம்பாடு (புதிய பேருந்து நிலையம்) ஆய்வு:கலைஞர் மேம்பாட்டுத்திட்டம் 2025-2026-ன் கீழ், ரூ.6.79 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏதுவாக இந்த பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை மிக விரைவாகவும், தரமாகவும் முடிக்குமாறு உத்தரவிட்டார்.பசுமைத் திட்டம் & ஊரக வேலைவாய்ப்பு (மரக்கன்றுகள் நடுதல்) :தொடர்ந்து, படந்தால் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (MGNREGS) ன் கீழ்,  ₹2.10 இலட்சம்* மதிப்பில் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.நெகிழி கழிவு மறுசுழற்சி மையம் ஆய்வு:பின்னர், படந்தால் ஊராட்சியில் மகளிர் சுய உதவிக் குழு மூலம் ஊராட்சிகளில் இருந்து சேகரிக்கப்படும் நெகிழி கழிவுகள் மறுசுழற்சி செயல்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்தார்.ஊராட்சிமன்ற அலுவலகம் ஆய்வு:படந்தால் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் ஊராட்சிகள் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கான கோப்புகளை ஆய்வு செய்தார்.இந்நிகழ்வின் போது, நகராட்சி ஆணையர், நகராட்சிப் பொறியாளர்கள், அரசு உயர் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர், மற்றும் மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Jun 12, 2026

விருதுநகர் மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 19.06.2026 அன்று காலை 11.00 மணியளவில் நடைபெறவுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில்  ஜீன் -2026 மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 19.06.2026 அன்று காலை 11.00 மணியளவில்; விருதுநகர்  புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் கூட்ட அரங்கில்  மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.மேற்படி கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொள்வதுடன் விவசாயம் தொடர்பான பொதுவான கோரிக்கைகளை மட்டும் மனு மூலம் அளிக்கவும், விவசாயிகள் வட்டாரத்திற்கு இருவர் வாரியாக பொதுவான கோரிக்கைகள் மட்டும் விவாதிக்கவும், சிறந்த முறையில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தினை நடத்திட முழு ஒத்துழைப்பு தருமாறு மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jun 12, 2026

முதலமைச்சர் மாநில இளைஞர் விருது-2026 க்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சமுதாய வளர்ச்சிக்குத் தன்னலமின்றிப் பங்காற்றும் இளைஞர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில், ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று *3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு* "முதலமைச்சர் மாநில இளைஞர் விருது" வழங்கப்படுகிறது.விருதின் மதிப்பு:ரூ.1,00,000/- ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம்.விருது வழங்கப்படும் நாள்: 15.08.2026 (சுதந்திர தின விழா)விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் & நிபந்தனைகள்:வயது வரம்பு:15 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். (01.04.2025 அன்று 15 வயது நிரம்பியிருக்க வேண்டும். 31.03.2026 அன்று 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.)சேவைக் காலம்:கடந்த நிதியாண்டில் (*01.04.2025 முதல் 31.03.2026 வரை*) செய்யப்பட்ட சமூகச் சேவைகள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும்.இருப்பிடம்:விண்ணப்பிக்கும் முன்பாக, குறைந்தபட்சம் *5 ஆண்டுகள் தமிழகத்தில்* குடியிருந்தவராக இருத்தல் வேண்டும் (இதற்கான சான்று அவசியம்).சேவையின் தன்மை: செய்த தொண்டு சமுதாய நலனுக்கானதாகவும், வெளிப்படையாகக் கண்டறிந்து மதிப்பிடக்கூடிய அளவிலும் இருக்க வேண்டும்.பணி நிபந்தனை:மத்திய/மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பள்ளி/கல்லூரி/பல்கலைக்கழகப் பணியாளர்கள் *விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள்.கூடுதல் தேவைகள்:விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு பரிசீலிக்கப்படும்.மாவட்ட காவல் நிலையத்திலிருந்து பெறப்பட்ட *நன்னடத்தை சான்றிதழ்* சமர்ப்பிக்கப்பட வேண்டும்.விண்ணப்பிக்கும் முறை & கடைசி நாள்:விண்ணப்பிக்கும் தளம்:தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான *www.sdat.tn.gov.in* ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.கடைசி நாள் மற்றும் நேரம்: 06.07.2026 அன்று மாலை 5.45 மணி வரை என மாவட்ட ஆட்சியர் மரு. என்.ஓ. சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார். 

Jun 11, 2026

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் உயர் கல்வி நிறுவனங்களுக்கான “நிமிர்ந்து நில்” திட்டம் தொடர்பாக கல்லூரி முதல்வர்களுடனான ஆய்வுக் கூட்டம்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்(10.06.2026)  தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் உயர் கல்வி நிறுவனங்களுக்கான “நிமிர்ந்து நில்” திட்டம் தொடர்பாக கல்லூரி முதல்வர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள்  தலைமையில் நடைபெற்றது.தமிழ்நாடு அரசு தொழில் முனைவோர் மற்றும் மாணவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. உயர்கல்வி பயிலும் மாணவர்களின் புத்தாக்க திறனை மேம்படுத்துவதற்காக புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு(IEDP)திட்டத்தை 2016ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.இளைஞர்களிடையே புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவிற்கான சிந்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் “நிமிர்ந்து நில்” என்ற தமிழ்நாடு இளைஞர் புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம்(TNYIEDP) செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டத்தின் நோக்கம் 5 ஆண்டுகளில் 10,000 மாணவர்களை தொழில்முனைவோர்களாக (Student Entrepreneurs) உருவாக்குவது, அறிவியல், புதுமை மற்றும் தொழில்நுட்பத்திறன் வளர்ப்பு, செயற்கை நுண்ணறிவு, இ-காமர்ஸ் மற்றும் உற்பத்தித் துறை போன்ற துறைகளில் பயிற்சி அளிப்பது ஆகும்.இத்திட்டத்தின் கீழ் ரூ.19.57 கோடி மாணவர் தொழில்முனைவோர்களுக்கும், ரூ.2 கோடி அடுக்கு-1 மற்றும் அடுக்கு-2 (Tier-2 and Tier-3) நகரங்களிலுள்ள 9,000 இளைஞர்களுக்கான தொழில்நுட்ப பயிற்சி வழங்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மாணவர்களுக்கு முயற்சி உணர்வை ஏற்படுத்துதல், தொழில்முனைவோர் திறன், புதுமை சிந்தனை வழங்கல், திட்ட முன்வைப்பு, பயிற்சி, கையேடு, வழிகாட்டுதல் போன்றவை இத்திட்டத்தின் முக்கிய அம்சங்களாகும்.தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனமானது நிமிர்ந்து நில் திட்டத்தை மையக்கல்லூரி மற்றும் உறுப்பு கல்லூரி நிறுவனங்கள் (Hub and Spoke) முறையில் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனமானது மாவட்ட மையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட மையமாக தேர்வு செய்யப்பட்டுள்ள உயர்கல்வி நிறுவனங்கள் நிமிர்ந்து நில் திட்டத்தை செயல்படுத்துவார்கள். மற்ற உயர் கல்வி நிறுவனங்கள் உறுப்புக்கல்லூரிகளாக செயல்படுவார்கள். விருதுநகர் மாவட்டத்தில் கலசலிங்கம் நிகர்நிலை பல்கலைக்கழகம் மைய கல்லூரியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிமிர்ந்து நில் திட்டத்தை கலசலிங்கம் நிகர்நிலை பல்கலைக்கழகம் செயல்படுத்தும்.தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் அனைத்து செயல்பாடுகளையும் குறிப்பாக தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி(Entrepreneurship Development Programme), கட்டண பயிற்சி(paid Programmes), பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டம்(School Innovation Development Project), தமிழ்நாடு இளைஞர் புத்தாக்க மற்றும் தொழில் முனைவோருக்கான பயிற்சி(TNYIEDP), புத்தாக்க பற்று சீட்டு திட்டம்  மற்றும் Innovation Voucher Programme A&B, அறிவுசார் காப்புரிமை (Intellectual Property Facilitating Centre), தொழில் முனைதல் மற்றும் புத்தகத்திற்கான சான்றிதழ் படிப்பு (Certificate Programme in Entrepreneurship and Development) உட்பட பல்வேறு செயல்பாடுகளை மிகச் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.நிமிர்ந்து நில் என்ற திட்டமானது மாணவர்களுடைய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் செயல்படும் மாணவர்கள் சமுதாயத்தில் அல்லது வேறு தொழில்களில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை கண்டறிந்து அவற்றிற்கான தீர்வுகளை மாதிரி வடிவம் கொண்டு விளக்கம் பட்சத்தில் அந்த யோசனைகளுக்கு ரூ.1 இலட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும்.மாணவர்களுக்கு ஐடியேசன் கேம்ப்(ideation Camp) இரண்டு நாள் பயிற்சியும், பூட் கேம்ப்(Boot Camp) மூன்று நாள் பயிற்சியும் வழங்கப்படும். இறுதியாக சென்னையில் நடைபெறக்கூடிய இறுதி சுற்றில் வெற்றி பெறும் 30 நபர்களுக்கு தலா ரூ.1 இலட்சம் வழங்கப்படும். மேலும், வெற்றி பெற்ற மாணவர்களை தொழில் முனைவோராக மாற்றுவதற்கான வளர் தொழில் மையங்களோடு (Incubation Centre) அவர்களுக்கு இணைப்பு ஏற்படுத்தி வசதிகள் செய்து தரப்படும்.எனவே, இத்திட்டத்தின் நோக்கம் குறித்து அறிந்து ஒவ்வொரு கல்லூரியிலும் இத்திட்டத்தை முன்னெடுத்து மாணவர்களிடத்தில் எடுத்துச் செல்ல அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இக்கூட்டத்தில், தமிழ்நாடு இளைஞர் கண்டுபிடிப்பு தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் நோக்கங்கள் மற்றும் தொலைநோக்கு பார்வைகள் குறித்தும், கல்லூரிகளுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்தும், மாநிலத்தின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோரின் பங்களிப்பு குறித்தும், இந்த புதுமையான நவீன உலகில் மாணவர்கள் தொழில்முனைவோராக எவ்வாறு சிந்திக்க வேண்டும் என்பது குறித்தும், மாணவர்களை தொழில்முனைவோர்களாக உருவாக்குவதற்கு கல்லூரிகளின் பங்களிப்பு குறித்தும் கலந்து கொண்ட 40 க்கும் மேற்பட்ட கல்லூரி  முதலவர்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திருமதி பிர்தௌஸ் பாத்திமா, விருதுநகர் மாவட்ட திட்ட மேலாளர்(தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்) திரு.பிலிப் மில்டன், திருநெல்வேலி மாவட்ட திட்ட மேலாளர்(தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்) திரு.சிவபாரதி, மைய கல்லூரி ஒருங்கிணைப்பாளர்(கலசலிங்கம் பல்கலைக்கழகம்) டாக்டர்.அறிவரசன் உட்பட 40 க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த முதல்வர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Jun 11, 2026

திருவில்லிபுத்தூர் நகராட்சியில் பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் குடிநீர்த் திட்டப் பணிகள் ,திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் நேரில் கள ஆய்வு.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் நகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசு திட்டங்கள் மற்றும் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.கார்த்திக் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (10.06.2026) நேரில் சென்று பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார்.முன்னதாக, திருவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகத்தில் அரசு திட்டங்கள் மற்றும் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் (KNMT) 2025-26 திட்டத்தின் கீழ், ரூ.9.85 கோடி மதிப்பீட்டில் புதிய கிணறுகள்: பின்னர், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் (KNMT) 2025-26 திட்டத்தின் கீழ், ரூ.9.85 கோடி மதிப்பீட்டில் மூன்று இடங்களில் புதிதாக கிணறுகள் அமைக்கப்பட்டு வரும் நிலையில் செண்பகத்தோப்பு பேயனாற்றுப் படுகையில் கட்டப்பட்டு வரும் திறந்த வெளி கிணற்றினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.திருவில்லிபுத்தூர் நகராட்சியின் எதிர்காலக் குடிநீர்த் தேவையைச் சமாளிக்க, இந்த உயர் கொள்ளளவு கிணறுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. பேயனாற்றுப் படுகை கிணற்றின் கட்டுமானப் பணிகளைப் பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே, அதாவது திட்டமிட்ட காலக்கெடுவிற்குள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவிட்டார். திருவில்லிபுத்தூர் பழைய பேருந்து நிலையக் கட்டுமானப் பணி (KNMT 2024-25):கலைஞர் மேம்பாட்டுத் திட்டம் 2024-25 திட்டத்தின் கீழ், ரூ.3.25 கோடி மதிப்பீட்டில் பழைய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பேருந்து நிலைய தரைத்தளம், பயணிகள் நிழற்குடை, வணிக வளாக கடைகள் மற்றும் கழிவறைகளின் கட்டுமானத் தரத்தை (Structural Stability) பொறியாளர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பொதுமக்களுக்கான குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி மற்றும் பேருந்துகள் வந்து செல்வதற்கான விசாலமான அணுகுசாலை (Approach Roads) போன்றவற்றைத் தரமாக அமைக்க அறிவுறுத்தப்பட்டது. அம்மா உணவகம் – ஆய்வு திருவில்லிபுத்தூர் நகராட்சியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், சுவை மற்றும் பயன்படுத்தப்படும் குடிநீரின் தூய்மைத் தன்மையை ஆய்வு செய்தார். சமையலறை மற்றும் பாத்திரங்களை நாளும் மிகத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. திருவில்லிபுத்தூர் புதிய பேருந்து நிலையக் கட்டுமானப் பணி (KNMT 2023-24): தொடர்ந்து, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் (KNMT) 2023-24 திட்டத்தின் கீழ், ரூ.16.60 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தொடர்ந்து, திருவில்லிபுத்தூர் நகராட்சியில் திரௌபதி அம்மன் கோவில் தெருவில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரின் தரம் மற்றும் விநியோகிக்கப்படும் கால அளவு குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டறிந்தார். மேலும், நீரிலுள்ள குளோரின் (Chlorine) அளவு சரியான விகிதத்தில் உள்ளதா என சோதனை செய்யப்பட்டது. கோடைக் காலத்தைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களுக்கு எவ்வித தடையுமின்றிச் சீரான குடிநீர் விநியோகத்தை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். குழாய் உடைப்புகள் அல்லது குடிநீர் வீணாகுதல் போன்ற புகார்கள் வந்தால் 24 மணி நேரத்திற்குள் சரி செய்யப்பட வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.இந்நிகழ்வின் போது, திருவில்லிபுத்தூர் நகராட்சி ஆணையர், நகராட்சிப் பொறியாளர்கள், வட்டாட்சியர், குடிநீர் வடிகால் வாரிய (TWAD) அலுவலர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 129 130

AD's



More News