தேவையான பொருட்கள்:பலா விதை - 500 கிராம்சர்க்கரை - 200 கிராம்நெய் - 4 மேஜைகரண்டிகேசரி பவுடர்,முந்திரி, திராட்சை,தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:பலா விதைகளை சுத்தம் செய்து தண்ணீரில் நன்றாக வேக வைத்து தோலுரித்து மசிக்கவும்.வாணலியில் நெய் சூடானதும் மசித்த பலாவிதைகளை போட்டு வதக்கவும். பின் சர்க்கரை,கேசரி பவுடர் சேர்த்து நன்றாக கிளறவும். அல்வா பதத்திற்கு வந்ததும், வறுத்த முந்திரி,திராட்சை, நெய் கலந்து இறக்கவும்.சுவைமிக்க, 'பலா விதை அல்வா!' தயார். சிறுவர், சிறுமியர் விரும்பி சாப்பிடுவர். மாலைநேரத்தில் பரிமாற ஏற்றது.
தேவையான பொருட்கள்:மாம்பழக் கூழ்: 1 கப் (நாரில்லாத பழுத்த மாம்பழம்),சோள மாவு (Corn Flour): 1/2 கப்,சர்க்கரை: 1/2 முதல் 3/4 கப் (மாம்பழத்தின் இனிப்பிற்கு ஏற்ப),நெய்: 1/4 கப்,தண்ணீர்: 1 கப்,முந்திரி மற்றும் பாதாம்: தேவையான அளவு,ஏலக்காய் தூள்: 1/2 டீஸ்பூன்,செய்முறை-மாம்பழத்தின் தோலை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி, மிக்ஸியில் தண்ணீர் எதுவும்சேர்க்காமல் மைய அரைத்துக்கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் சோள மாவு மற்றும் 1 கப் தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்குகரைத்து தனியாக வைக்கவும்.ஒரு கடாயில் 2 டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், முந்திரி மற்றும் பாதாம் பருப்பை வறுத்துதனியாக எடுத்து வைக்கவும்.அதே கடாயில் அரைத்து வைத்துள்ள மாம்பழக் கூழைச் சேர்த்துமிதமான தீயில் 3 நிமிடங்கள் வதக்கவும்.பிறகு, கரைத்து வைத்துள்ள சோள மாவு தண்ணீரை மாம்பழக் கூழுடன் சேர்த்து மிதமானதீயில் தொடர்ந்து கிளறவும். கலவை கெட்டியாகத் தொடங்கும். இந்த நிலையில் சர்க்கரைமற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து அடிபிடிக்காமல் கிளறவும். சர்க்கரை உருகி அல்வா பளபளப்பாக மாறும்.மீதமுள்ள நெய்யை சிறிது சிறிதாக அல்வாவில் சேர்த்து, அது பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டுவரும் வரை கிளறவும். இறுதியாக வறுத்த முந்திரி மற்றும் பாதாம் பருப்பைச் சேர்த்துக் கிளறிஇறக்கவும்.சுவையான, நாவில் கரையும் மாம்பழ அல்வா தயார்.மாம்பழத்தின் மேல் தோல் பகுதியில் தான் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது. மேலும் இதில் நார்ச்சத்து அதிகமாக இருக்கின்றது.
தேவையான பொருட்கள்:பப்பாளி பழம் (நன்றாகப் பழுத்த துண்டுகள்) - 2 கப்,சர்க்கரை - 1 முதல் 1.25 கப் (உங்கள் சுவைக்கேற்ப),நெய் - 4 முதல் 5 டேபிள் ஸ்பூன்,ஏலக்காய் தூள் - 1/2 ஸ்பூன்,முந்திரி மற்றும் பாதாம் - தேவையான அளவு.செய்முறை:பப்பாளி பழத் துண்டுகளை மிக்ஸியில் சேர்த்து, தண்ணீர் எதுவும் ஊற்றாமல் நைஸாகஅரைத்து விழுதாக்கிக் கொள்ளவும்.ஒரு கடாயில் 1 ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய முந்திரி மற்றும் பாதாம் பருப்பைச்சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.அதே கடாயில் மீதமுள்ள நெய் மற்றும் அரைத்து வைத்துள்ள பப்பாளி விழுதைச் சேர்த்துமிதமான தீயில் வதக்கவும்.பச்சையான வாசனை போகும் வரை 10 நிமிடங்கள் கிளறவும். பப்பாளி நன்கு வெந்துசுருங்கியதும், சர்க்கரை சேர்க்கவும்.சர்க்கரை உருகி அல்வா தளரத் தொடங்கும்.மிதமான தீயில் தொடர்ந்து கிளறிக்கொண்டேஇருக்கவும்.அல்வா பாத்திரத்தில் ஒட்டாமல், ஓரங்களில் நெய் பிரியும். அந்த சமயத்தில் ஏலக்காய் தூள்மற்றும் வறுத்த முந்திரியைச் சேர்த்து கிளறி இறக்கவும். சுவையான, ஆரோக்கியமான பப்பாளிஅல்வா தயார்!
தேவையான பொருட்கள்:வெள்ளை பூசணி: 300 கிராம் (துருவியது),சர்க்கரை: 350 - 400 கிராம்,நெய்: 100 - 150 மில்லி,முந்திரி மற்றும் பாதாம்: தலா 10,ஏலக்காய் தூள்: 1/2 தேக்கரண்டி,மஞ்சள் (அல்லது ஆரஞ்சு) ஃபுட் கலர்: 2 சிட்டிகை,எண்ணெய்/நெய்: 1 தேக்கரண்டி (முந்திரி வறுக்க),செய்முறை:பூசணியின் தோல் மற்றும் விதைகளை நீக்கிவிட்டு, துருவிக்கொள்ளவும். துருவியபூசணியை கைகளால் நன்றாகப் பிழிந்து சாற்றை தனியாக எடுத்துவைக்கவும்.ஒரு கடாயில் 1 டேபிள்ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், துருவிய பூசணிக்காயைச் சேர்த்து10 நிமிடங்கள் மிதமான தீயில் வதக்கவும்.பூசணி வதங்கியதும், பிழிந்து எடுத்த பூசணிச் சாற்றை ஊற்றி மூடி வேகவைக்கவும்.தண்ணீர் வற்றி, பூசணி நன்றாக வெந்திருக்க வேண்டும்.பிறகு, சர்க்கரை மற்றும் ஃபுட் கலர் சேர்த்து கிளறவும். சர்க்கரை உருகி அல்வா தளரஆரம்பிக்கும்.மிதமான தீயில் வைத்து, கலவை கெட்டியாகும் வரை கிளறவும். இடையில் கொஞ்சம்கொஞ்சமாக நெய் சேர்த்துக்கொண்டே இருக்கவும்.அல்வா பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும் போது, ஏலக்காய் தூள் சேர்க்கவும்.மற்றொரு கடாயில் சிறிதளவு நெய் ஊற்றி முந்திரி, பாதாம் வறுத்து அல்வாவில் சேர்த்துஇறக்கவும். இப்போது நாவில் கரையும் சுவையான பூசணிக்காய் அல்வா தயார்!
தேவையான பொருட்கள்:பாதாம் - 1 கப்,சர்க்கரை - 1 முதல் 1/4 கப்,நெய் - 1/2 கப்,காய்ச்சிய பால் - 1/4 கப்,ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி,குங்குமப்பூ - சிறிதளவு (பாலில் ஊறவைத்தது) .செய்முறை:பாதாமை வெதுவெதுப்பான நீரில் 1 முதல் 2 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியபாதாமின் தோலை நீக்கிவிட்டு, மிக்ஸியில் சேர்த்துக்கொள்ளவும்.அதனுடன் காய்ச்சிய பாலை சிறிது சிறிதாக சேர்த்து, மிகவும் நைஸாக அல்லாமல் சற்றுகொரகொரப்பாக (ரவை பதத்திற்கு) அரைத்துக்கொள்ளவும்.ஒரு கடாயில் 2 மேஜைக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும், அரைத்த பாதாம் விழுதைச்சேர்க்கவும். மிதமான தீயில் பச்சை வாசனை போகும் வரை கிளறவும்.பாதாமில் உள்ள ஈரப்பதம் குறைந்ததும், சர்க்கரை மற்றும் குங்குமப்பூ சேர்த்து கிளறவும்.சர்க்கரை கரைந்து அல்வா இளகும்.சர்க்கரை முழுமையாகக் கரைந்து அல்வா கெட்டியாக வரும் வரை மிதமான தீயில்கிளறவும். மீதமுள்ள நெய்யை சிறிது சிறிதாகச் சேர்க்கவும்.அல்வா பாத்திரத்தில் ஒட்டாமல், சுருண்டு திரண்டு வரும் போது ஏலக்காய் தூள் சேர்த்துஇறக்கவும். சுவையான, நாவில் கரையும் மணமணக்கும் பாதாம் அல்வா தயார்.
தேவையான பொருட்கள்:ரஸ்க் - 10 முதல் 12 துண்டுகள் (டீ ரஸ்க்),சர்க்கரை – முக்கால் கப் (அல்லது உங்கள் சுவைக்கேற்ப),நெய் - 4 முதல் 5 டேபிள் ஸ்பூன்,பால் – அரைகப்,தண்ணீர் – ஒன்றரை கப்,முந்திரி மற்றும் திராட்சை - தேவையான அளவு,ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன்,செய்முறை:ரஸ்க்கை மிக்ஸியில் சேர்த்து லேசாக அரைத்து தூளாக்கிக் கொள்ளவும் (ரொம்பவும்நைசாக அரைக்க வேண்டாம்).ஒரு கடாயில் 2 டீஸ்பூன் நெய் ஊற்றி, முந்திரி மற்றும் திராட்சையை பொன்னிறமாகவறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.அதே கடாயில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து சர்க்கரை கரையும் வரை கொதிக்கவைக்கவும். (பாகு பதம் தேவையில்லை).கொதிக்கும் சர்க்கரை பாகில் பொடித்து வைத்துள்ள ரஸ்க் தூளைச் சேர்த்துகட்டியில்லாமல் கிளறவும்.ரஸ்க் தண்ணீரை உறிஞ்சியதும், பால் மற்றும் மீதமுள்ள நெய்யைச் சேர்த்து மிதமானதீயில் கிளறவும்.அல்வா பாத்திரத்தில் ஒட்டாமல், பளபளப்பாக சுருண்டு வரும். அப்போது ஏலக்காய் தூள்மற்றும் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கினால் நாவில் கரையும் ரஸ்க் அல்வாதயார்.
தேவையான பொருட்கள்:1 கப் பன்னீர்,1 வெங்காயம்,1.தக்காளி,2 பச்சை மிளகாய்,1 பச்சை குடைமிளகாய்,1 டீஸ்பூன் மிளகாய் தூள்,1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்,1/2 டீஸ்பூன் கரம் மசாலாத்தூள்,1/2 கப் கிரீம்,1 டேபிள் ஸ்பூன் பட்டர்,1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது,1டீஸ்பூன் சீரகம்,பட்டை,கிராம்பு,பிரிஞ்சி இலை, ஏலக்காய்,தேவையான அளவுஉப்பு.செய்முறை: ஒரு கப் பன்னீரை எடுத்து கழுவி, அத்துடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள்,கரம்மசாலாத்தூள்,உப்பு சேர்த்து கலந்து ஐந்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.வெங்காயம், தக்காளியை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைக்கவும்.கடாயை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் பட்டர் சேர்த்து உறுகியதும்,சீரகம்,பட்டை, பிரிஞ்சிஇலை,இஞ்சி பூண்டு விழுது வெங்காயம், தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.அத்துடன் நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய்,மசாலா பொருட்களை சேர்த்து வதக்கவும்.கொஞ்சமாக தண்ணீர் தெளித்து ஒரு நிமிடம் மூடி வைக்கவும். பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.கெட்டியானதும் ஃப்ரெஷ் கிரீம் சேர்த்து கலந்து, பின்னர் பன்னீர் கேப்ஸிகம் இரண்டையும்சேர்த்து கலக்கவும்.கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து,தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து, இரண்டுநிமிடங்கள் மூடி வைக்கவும்.ஓரளவு கெட்டியானதும், கலந்து இறக்கினால் பன்னீர் கேப்ஸிகம் மசாலா தயார்.தயாரான பன்னீர் கேப்ஸிகம் மசாலா சப்ஜியை எடுத்து ஒரு பௌலில் சேர்க்கவும்.இப்போது மிகவும் சுவையான பன்னீர் கேப்ஸிகம் மசாலா சப்ஜி சப்பாத்தி, ரொட்டி, நாண்போன்ற எல்லா உணவுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:3 கப் உதிரியாக வடித்த சாதம்,பெரிய ப.குடமிளகாய்,2 மீடியம் சைஸ் வெங்காயம்,3சிறியசைஸ் தக்காளி,3/4 டீ ஸ்பூன்ம.தூள், சி.மிளகாய், 8 பூண்டு பல், ருசிக்குஉப்பு.தேவையான அளவுதண்ணீர்தாளிக்க:-1டீ. ஸ்பூன்கடுகு,1/2 ஸ்பூன்க.பருப்பு,1/2 ஸ்பூன் உ.பருப்பு,1 கொத்து கறிவேப்பிலை,2 ஸ்பூன்எண்ணெய்.செய்முறை:தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை மெல்லியதாகநீளவாக்கில் நறுக்கவும். குடமிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கவும்.சாதத்தை உதிரியாக வடித்துக் கொள்ளவும்.மிக்ஸி ஜாரில், சி.மிளகாய், பூண்டை சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்அடுப்பை மிதமான தீயில் வைத்து கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, உ.பருப்பு,க.பருப்பு, சேர்த்து தாளிக்கவும்.தாளித்ததும், வெங்காயம், ம.தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.வதங்கியதும், குடமிளகாய், தக்காளி, சேர்த்து வதக்கவும். பிறகு அரைத்த பொடியை சேர்த்து வதக்கவும்.பின், வடித்த சாதத்தை போட்டு 2 நிமிடம் நன்கு கலந்ததும், அடுப்பை நிறுத்தி விடவும்.இப்போது, வித்தியாசமான, சுவையான, சுலபமான,*கேப்ஸிகம் ரைஸ்*தயார். இதற்கு சைட்டிஷ் தேவையில்லை.
தேவையான பொருட்கள்:1 குடைமிளகாய்,1டேபிள்ஸ்பூன் குழம்பு மிளகாய்தூள்,உப்பு,1டீஸ்பூன் சீரகம்,மஞ்சள்தூள்,எண்ணெய்.செய்முறை;ஒரு கடாயை சூடாக்கி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், குடைமிளகாய் சேர்த்து அதனுடன்உப்பு, மிளகாய்தூள், மஞ்சள்தூள் மற்றும் சீரகம் சேர்த்து வதக்கவும்.இது நன்கு வந்தங்கியதும், சப்பாத்தி, தோசை அல்லது தயிர் சாதம் சேர்த்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்:2 கப் குடமிளகாய் (நறுக்கினது) , 1/2 கப்தக்காளி,1/4 கப் சின்ன வெங்காயம்,2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துண்டுகள்,1டீ ஸ்பூன்கடுகு,2 ஸ்பூன்உ.பருப்பு , 3 ப.மிளகாய்2 சி.மிளகாய்,1 டீ ஸ்பூன்பெருங்காயத் தூள்,ருசிக்குகல் உப்பு,2 டேபிள் ஸ்பூன்ந.எண்ணெய்,1 கொத்து கறிவேப்பிலை.செய்முறை:கடாயில், ந.எண்ணெய் காய்ந்ததும், உ.பருப்பு, சி.மிளகாய், ப.மிளகாய் போட்டு வறுக்கவும்.பிறகு சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கியதும், தக்காளி,குடமிளகாய், தேங்காய்போட்டு நன்கு வதக்கவும்.வதங்கியதும், உப்பு போட்டு, அடுப்பை நிறுத்தி விட்டு ஆற விடவும்.ஆறினதும், மிக்ஸி ஜாரில் போட்டு, நன்கு அரைக்கவும்.கடாயில், ந.எண்ணெய் காய்ந்ததும், கடுகு, உ.பருப்பு,சி.மிளகாய், கறிவேப்பிலை,பெருங்காயத் தூள் போட்டு தாளித்து சட்னியில் கொட்டவும்.இப்போது, சுவையான, சுலபமான,* குடமிளகாய் சட்னி* தயார்.இது, தோசை, இட்லிக்கு,ஆப்ட்டாக இருக்கும்.இது,உடல் எடையைக் குறைக்கும்.வயது முதிர்வை தடுக்கும்.தோலில் ஏற்படும் வறட்சியை போக்கி,தோலுக்கு ஆரோக்கியம் தருகிறது.மூட்டு வலிக்கு மருந்தாகிறது.