25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


ஆன்மீகம்

Jun 12, 2026

வாட்ச் கட்டும் கடவுள்.

குஜராத்மாநிலம் கர்பூர் என்ற இடத்தில் 100 ஆண்டுகள் பழமையான சுவாமி நாராயண் கோபிநாத் கோயிலில் கிருஷ்ணர் கையில் வாட்ச் அணிந்திருக்கிறார். இதன் பின்னணியில் நடந்த சம்பவத்தைக் கேளுங்கள்.ஐம்பது ஆண்டுக்கு முன்பு ஆங்கிலேயர் ஒருவர் இங்கு வந்தார். அவரிடம் அர்ச்சகர் இங்குள்ள கிருஷ்ணர் சிலை உயிரோட்டமானது என்றார். அப்போது ஆங்கிலேயர் தன் கை கடிகாரத்தை காட்டி, ''உடம்பின் நாடி துடிப்பால் ஓடும் வாட்ச் இது. கிருஷ்ணர் கையில் இதைக் கட்டுவோம். அப்போதும் வாட்ச் ஓடினால் நீங்கள் சொல்வதை நான் நம்புகிறேன்" என்றார்.கையில் இருந்து வாட்சை கழற்றினார். அது நின்று போனது. அப்படியே அதை கிருஷ்ணர் கையில் கட்டினார் அர்ச்சகர். ஓட ஆரம்பித்தது. இன்றும் கிருஷ்ணர் கையில் இந்த வாட்ச் உள்ளது. தினமும் அலங்காரம் செய்யும் போது அர்ச்சகர் வாட்சை கழற்றி மறுபடியும் அணிவிப்பார். கழற்றும்போது நிற்கும் வாட்ச், கிருஷ்ணருக்கு அணிவிக்கும் போது ஓடத் தொடங்கும்.

Jun 05, 2026

ஆனைமலை மாசாணியம்மன்.

ஆனைமலை அடிவாரத்தில் ஆழியாற்றின் கரையில் குறுநில மன்னரான நன்னனுக்குரிய மாமரம் ஒன்று இருந்தது. அதில் பழங்களை யாரும் பறிக்கக் கூடாது என்பது மன்னரின் கட்டளை.ஒருநாள் ஆற்றில் நீராடிய கர்ப்பிணி, ஆற்றில் மிதந்த மாம்பழத்தை எடுத்து சாப்பிட்டாள். அவளுக்கு மரண தண்டனை விதித்தான் நன்னன்.ஊரார் அவளுக்கு மயானத்தில் சயனகோலத்தில் உருவம் அமைத்து வழிபடத் தொடங்கினார். உப்பாற்றின் வடகரையில் மாசாணியம்மன் 17 அடி நீளத்தில் தெற்கே தலை வைத்து கபாலம், சர்ப்பம்,திரிசூலம், உடுக்கை ஏந்தியிருக்கிறாள். நீதி தெய்வமான இவளை அமாவாசையன்று வழிபட பலன் இரட்டிப்பாகும்.பொள்ளாச்சியில் இருந்து 14 கி.மீ.,

May 29, 2026

ஓரியூரில் உள்ள சேயுமானார்  கோவில்.

மதுரையில் அருள்புரியும் சொக்கநாதர் தன் அடியவர்களுக்காக 64 திருவிளையாடல்களை நிகழ்த்தினார். அதில் விருத்த குமார பாலரான திருவிளையாடல் நிகழ்த்தியது ஓரியூரில் உள்ள சேயுமானார் என்னும் இத்தலத்தில் தான்.விருபாட்சர், சுபவிரதை தம்பதிக்கு கவுரி என்ற பெண் குழந்தை பிறந்தது. சிவபக்தையான கவுரி திருமண வயதை அடைந்தாள். வைணவ இளைஞன் ஒருவனுக்கு மகளை மணம் செய்து வைத்தார் விருபாட்சர். அந்த இளைஞனின் குடும்பத்தினர் அவளை புறக்கணித்தனர்.இளம் வயதிலேயே கவுரி முக்தியை வேண்டி சிவனை சரணடைந்தாள். ஒருநாள் புகுந்த வீட்டினர், அவளை தனியறையில் அடைத்து விட்டு வெளியே சென்றனர். அந்த நேரத்தில் அடியவர் வடிவில் வந்த சிவன் அவளை விடுவித்தார். அடியவர் வடிவில் நின்ற சிவனுக்கு வயிறார உணவு அளித்தாள் கவுரி: குழந்தையாக மாறிய சிவன் அவளுக்கு முக்தி அளித்தார்.குழந்தை வடிவில் காட்சியளித்த சிவனே இக்கோயிலில் மூலவராக இருக்கிறார்.1300 ஆண்டுக்கு முந்திய தலமான இது இயற்கை சீற்றத்தால் சிதிலமானது. திருப்பணி நடத்த முயற்சித்த போது அந்நிய மதத்தினரின் கெடுபிடியால் தாமதம் ஏற்பட்டது. பின்னர் திருப்பணியில் ஈடுபட்டு கோயிலை முழுமையாக்கினார் சிவபக்தையானபெங்களூரு அறம் வளர் நாயகி 'ஓரியூரில் உகந்து இனிதருளிப் பாரிகும் பாலகன் ஆகிய பரிசும்' என இத்தலத்தில் சிவபெருமான் விருப்பமுடன் குடியிருக்கிறார் என்கிறார் மாணிக்கவாசகர்.சுவாமியின் பெயர்சேயுமானார், அம்பிகையின்பெயர்மட்டுவார்குழலியம்மை.பிரகாரத்தில் விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர், நால்வர், பிரம்மா, *துர்கை சன்னதிகள் உள்ளன.இங்கு வழிபட்டால் இளமையுடன் வாழலாம்.குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.

May 22, 2026

'ஆரன்முழா குறளப்பன் ' திவ்ய தேச  பெருமாள் குறை தீர்ப்பவர்.

கேரளா  பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ள ஆரன்முழா திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழ்கிறது. அர்ஜூனன் பூஜித்த குறளப்பன் இங்கு மூலவராக இருக்கிறார். இவரை வழிபட்டால் நம் குறை அனைத்தும் தீரும். பாண்டவர்கள் வனவாசம் சென்ற போது கோளப்பகுதிக்கு வந்தனர். பம்பா நதிக்கரையில் நிலக்கல் என்னுமிடத்தில் பெருமாள் சிலை ஒன்றை அமைத்து அர்ஜூனன் வழிபட்டான். பின்னர் சிலையை ஆறு மூங்கில்களால் ஆன கட்டுமரம் ஒன்றில் வைத்து பம்பை ஆற்றில் விட்டான். கரை ஒதுங்கும் இடத்தில் யாராவது கோயில் கட்டட்டும் என்பதே அவனது எண்ணம். மலையாளத்தில் 'ஆறு முழா' (ஆறு மூங்கில்) என்பதற்கு 'ஆறு மூங்கில்' எனப் பொருள்.சிலையைச் சுமந்த கட்டுமரம் ஆறு மூங்கில்களால் ஆனதால் இத்தலம் 'ஆறுமுழா எனப்பட்டது. காலப்போக்கில் 'ஆரன்முழா' என மாறியது.சிலை கரை சேர்ந்த இடத்தில் பம்பை நதிக்கரையில் இளம்துறவி ஒருவர் வாழ்ந்தார். பெரும் பள்ளமாக இருந்த இப்பகுதியைத் தன் தவசக்தியால் மேடாக்கி கோயில் கட்டினார்.கேரளாவில் மற்ற கோயில்களை விடவும் உயரமான இடத்தில் கோயில் இருப்பது இங்கு மட்டுமே. கிழக்கு நோக்கியபடி நின்ற கோலத்தில் திருக்குறளப்பன் என்ற பெயரில் மூலவர் இருக்கிறார். தாயார் பெய பத்மாசினி. நம்மாழ்வார் இங்கு பாடியுள்ளா பிரம்மாவின் வேண்டுகோளுக்கு இணங்கி, இங்கு பெருமாள் வாமன மூர்த்தியாக காட்சியளித்துள்ளார்.'வல்லங்களி' எனப்படும் பிரபலமானபடகு போட்டி உருவானது இங்கு தான்.ஆண்டு தோறும் ஆவணி மாத உத்திரட்டாதி நட்சத்திரத்தன்று பம்பை நதியில் போட்டி நடக்கும். அர்ஜூனனின் பிறந்த நாளான அன்று வல்லங்களி கொண்டாடப்படுகிறது. 300 ஆண்டுக்கும் மேலாக இப்போட்டி நடக்கிறது.இங்குள்ள வன்னி மரத்தின் காயை எடுத்து தலையை மூன்று முறை சுற்றி வீசினால் நோய் தீரும்.

May 15, 2026

மகிழ்ச்சி நிலைக்க குழித்துறை  மகாலட்சுமி கோயில்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் திருவனந்தபுரம் சாலையில் உள்ள குழித்துறையில் மகாலட்சுமி கோயில் உள்ளது. இங்கு வழிபட்டால் பணம் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும்.300 ஆண்டுக்கு முன்பு கேரளாவில் இருந்து தேவியர் சிலைகள் குழித்துறை பகுதிக்கு வந்தன. அதில் தாமிரபரணி நதிக்கரையில் உள்ள மகாதேவர் கோயிலுக்கு அருகில் கிழக்கு நோக்கி சாமுண்டிதேவி கோயிலும், சற்று தொலைவில் வடக்கு நோக்கி மகாலட்சுமி கோயிலும் அமைக்கப்பட்டன.மகாலட்சுமிக்கு தனி கோயில் இருப்பது மிக அபூர்வம். நின்ற நிலையில் உள்ள மகாலட்சுமியின் சிலை 3/4 அடி உயரம் கொண்டது. தாயாரின் கருணையான முகமும், வலது கையில் கொடுவாளும், இடது கையில் பாசக்கயிறும், பின்னிரு கைகளில் சங்கு, சக்கரமும்,தாமரை மீதமர்ந்த கோலமும் தரிசிப்போரின் பாவத்தை போக்கி விடும். கன்னி மூலையில் கணபதி, இடதுபுறம் பூதத்தான் சன்னதிகள், வெளிப்புறம் மடப்பள்ளி, அருகில் பஜனை மடம் உள்ளன.வெள்ளி அன்று மகாலட்சுமிக்கு பால் பாயாசம் நைவேத்யம் செய்தால் பணப் பிரச்னை வராது. பணப்புழக்கம் அதிகரிக்கும். காஞ்சி மஹாபெரியவர் இங்கு தரிசனம் செய்துள்ளார். பகவதி சேவை (ஐஸ்வர்ய பூஜை) தனலட்சுமி பூஜை, சுயம்வர அர்ச்சனை, லலிதா சகஸ்ரநாமம், சண்டிகா ஹோமம் போன்றவை நடக்கின்றன.

May 08, 2026

திருப்பம் உருவாக. திருநாராயணபுரம் திருநாராயணர் கோயில்.

ராமானுஜர் திருப்பணி செய்த தலம் மைசூரு அருகிலுள்ள திருநாராயணபுரம் திருநாராயணர் கோயில். அடிவாரத்தில் திருநாராயணரும், மலை மீது யோகநரசிம்மரும் அருள்புரிகின்றனர். இவர்களை தரிசித்தால் விருப்பம் நிறைவேறும். நல்ல திருப்பம் உருவாகும்.மகாவிஷ்ணுவிடம் இருந்து விஷ்ணு சிலை ஒன்றைப் பெற்றார் பிரம்மா. அதை மகனான சனத்குமாரருக்கு கொடுத்தார். பூலோகம் வந்த சனத்குமாரர் திருநாராயணபுரத்தில் அச்சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவரே இங்கு நாராயணப் பெருமாளாக இருக்கிறார். சாண்டில்ய மகரிஷி இங்கு தவமிருந்து பெருமாளை பத்ரி நாராயணராகத் தரிசிக்கும் பேறு பெற்றார். இங்கு வழிபட்டால் பத்ரிநாத்தை தரிசித்த பலன் கிடைக்கும். பெருமாளையே கணவராக எண்ணி வாழ்ந்த வரத நந்தினி என்னும் பக்தை, மூலவரின் திருவடியில் இருக்கிறாள். உற்ஸவர் செல்வ நாராயணர் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் இருக்கிறார். யதுகிரித் தாயார் தனி சன்னதியில் இருக்கிறார். ஸ்ரீரங்கம், ஸ்ரீபெரும்புதுார், திருக்கோஷ்டியூர் போலவே இங்கும் ராமானுஜருக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. உபதேச முத்திரையுடன் காட்சி தரும் இவர் பக்தர்களின் குறை கேட்டு நிவர்த்தி செய்யும் பாவனையில் இருப்பதால் 'பேசும் யதிராஜர் (ராமானுஜர்)' எனப்படுகிறார். இங்குள்ள இசைத்துாண் காண்போர் வியக்கும் விதத்தில் கலை நுட்பத்துடன் செதுக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மலைக்கோட்டையில் யோக நரசிம்மர் கோயில் உள்ளது. பிரகலாதனுக்காக விஷ்ணு, நரசிம்மராக அவதரித்து இரண்யனைக் கொன்றார். தந்தை இறக்க காரணமாக இருந்த பிரகலாதனுக்கு 'பிதுர்ஹத்ய தோஷம்' ஏற்பட்டது. இதைப் போக்க இத்தலத்தில் தவம் புரிந்தார். அவருக்கு யோக நிலையில் காட்சியளித்து நரசிம்மர் தோஷம் போக்கினார்.அவரேஇங்கு வீற்றிருக்கிறார்.அடிவாரத்திலுள்ளதீர்த்தக்கரையில்பிந்துமாதவன், நாராயணன், லட்சுமிநரசிம்மர், மாருதி சன்னதிகள் உள்ளன. 400 படிகள் ஏறினால் மலைக்கோட்டைக் கோயிலை அடையலாம்.நரசிம்மர் சன்னதியின் முன் நவக்கிரகங்கள் ஒன்பதும் படிக்கட்டுகளாக உள்ளன. இதில் ஏறி யோக நரசிம்மரைத் தரிசித்தால் கிரக தோஷம் நீங்கும்.

May 01, 2026

அய்யாவாடி.

அமாவாசை தலமான அய்யாவாடியில் காளியின் அம்சமான பிரத்யங்கிராதேவி அருள்புரிகிறாள். போரில் வெற்றி பெறுவதற்காக ராமர், யாகம் நடத்தி அம்பிகையை இங்கு வழிபட்டார். சரபேஸ்வரரின் நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றிய இவள் கரிய நிறத்துடன் சிங்க முகம், 18 கைகளுடன், சிரித்த முகத்துடன் காட்சி தருகிறாள். அமாவாசையன்று அம்மனுக்கு காலை முதல் மதியம் வரை நிகும்பலா என்னும் மிளகாய் வத்தல் யாகம் நடக்கும். இதில் மிளகாயின் நெடி இருப்பதில்லை. அமாவாசையன்று இங்கு வருவோருக்கு ஏதிரி, கடன் தொல்லை மறையும்.கும்பகோணம் உப்பிலியப்பன் கோயிலில் இருந்து 3 கி.மீ.,

May 01, 2026

கோலாப்பூர் மகாலட்சுமி.

மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் குடியிருக்கும் மகாலட்சுமியை தரிசித்தால் செழிப்பான வாழ்வு அமையும். இந்த அம்மனை வழிபடும் விதத்தில் ஆண்டுக்கு ஆறு நாள் கருவறையில் மகாலட்சுமி மீது சூரியன் கதிர்களைப் பரப்புகிறார்.பிரளயகால வெள்ளத்தில் கடல் பொங்கி பூமி அழியத் தொடங்கியது.ஆனால் பூமியில் ஒரே ஒரு பகுதியை மட்டும் மகாலட்சுமி வலது கையை உயர்த்தி அழிவில் இருந்து காப்பாற்றினாள். அந்த இடம் 'கரவீர்' எனப்பட்டது. 'கர' என்றால் 'கை', 'வீர்' என்றால் 'வீரம்' என பொருள். வீரச்செயல் புரிந்ததால் 'வீரலட்சுமி' 'தைரிய லட்சுமி' என மகாலட்சுமி பெயர் பெற்றாள். இத்தலம் காசிக்கு நிகரான புண்ணிய தலமாக விளங்க வேண்டும் என சிவனிடம் அகத்தியர் கோரிக்கை வைக்க அவரும் அருள்புரிந்தார். கோலாசுரன் என்ற அரக்கனை சிங்க வாகனத்தில் எழுந்தருளி மகாலட்சுமி வதம் செய்ததால் 'கோலாப்பூர்' எனப் பெயர் பெற்றது.சக்தி பீடங்களில் இத்தலம் 'கரவீர பீடம்' எனப்படுகிறது. மராட்டியர் பாணியில் கட்டப்பட்ட இக்கோயிலில், மகாதுவாரம் என்ற பிரதான மேற்கு வாசலில் அழகிய தீபத்துாண்கள் காண்போரை கவர்கின்றன. கருவறையில் ஆதிசேஷன் குடைபிடிக்க மகாலட்சுமி சதுர பீடத்தில் அமுதசுரபியை ஏந்தியபடி நிற்கிறாள் 1300 ஆண்டுகள் பழமை மிக்க இச்சிற்பம் அரிய கருரத்தினக் கல்லால் ஆனது.சூரியன் இங்கு மகாலட்சுமியை வழிபடும் விதத்தில் ஆண்டின் ஆறு நாட்கள் மாலை நேரத்தில் கருவறையில் உள்ள ஜன்னல் வழியாக ஒளிக்கதிர்களை பரப்புகிறார். ஜன.31, நவ. 9 ல் மகாலட்மியின் திருவடியிலும், பிப். 1, நவ. 10ல் மார்பிலும், பிப்.2, நவ.11ல் திருமேனி முழுவதும் சூரியக்கதிர் படர்கிறது.மலர்மாலைசாத்திஅம்மனை வழிபடுவோருக்கு செல்வம்பெருகும்.காளி, சரஸ்வதி,நவக்கிரகம், பாண்டுரங்கன், காசி விஸ்வநாதர், சீதை, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயருக்கு சன்னதிகள் உள்ளன.

Apr 24, 2026

சிவனை வழிபடும் காளை .

காளைமாடு பக்தியுடன் தினமும் சிவனை தரிசிக்கும் அதிசயம் கர்நாடக மாநிலம் மங்களூரு பாண்டேஸ்வரர் கோயிலில் நடக்கிறது.பாண்டவர்களில் மூத்தவரான தர்மர் சூதாட்டத்தில் ஈடுபட்டு சகுனியிடம் தோற்றார். இதனால் பாண்டவர்களின் மனைவியான திரவுபதியை, பலர் முன்னிலையில் துரியோதனன் அவமானப்படுத்தினான். இதற்கு பழி தீர்க்கும் வகையில், 'குருக்ஷேத்திர போரில் துரியோதனனின் தலை உருண்டால் தான் கூந்தலை முடிவேன்' என அவள் சபதம் செய்தாள். இதன் பிறகு பாண்டவர்கள் காட்டிற்குப் புறப்பட்டனர். ஓரிடத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.பிற்காலத்தில் அங்கு சிவனுக்கு கோயில் எழுப்பப்பட்டது. பாண்டவர்கள் வழிபட்டதால் சுவாமிக்கு 'பாண்டேஸ்வரர்' என பெயர் வந்தது.சிவபெருமானின் ஜடாமுடி விரிந்து கிடப்பதால் கருவறையைச் சுற்றும் வழக்கம் இக்கோயிலில் கிடையாது. கார்த்திகை திங்கள் அன்று ருத்ரயாகம் நடக்கிறது. அப்போது ருத்ராட்சம், வில்வ இலைகள், பஞ்சமிர்தத்தால் அபிஷேகம் செய்வர். இதை தரிசிப்பவர்களுக்கு எதிரி பயம் நீங்கும். முயற்சி வெற்றி பெறும்.இங்கு கோமடத்தில் உள்ள காளை மாடு தினமும் உச்சிக்கால பூஜை, இரவு நடக்கும் அர்த்தஜாமபூஜையில் பங்கேற்க சன்னதிக்கு வருகிறது. படியில் காளை ஏறியதும், சுவாமிக்கு கற்பூர ஆரத்தி காட்டுகின்றனர்.அப்போது காளை வெளி விடும் மூச்சுக்காற்று நம் உடம்பின் மீது பட்டால் வாழ்நாள் அதிகரிக்கும்.நந்தாதீபம் என்னும் பெரிய விளக்கு உள்ளது. இதில் எண்ணெய் விட்டால் கிரகபீடை விலகும். இரவு 8:00 மணிக்கு நடக்கும் ரங்காபூஜையில் சன்னதி முழுவதும் தீபமேற்றுகின்றனர். வெள்ளி அன்று ராகுகாலத்தில் (காலை 10:30-12:00 மணி) நாகதோஷத்தில் இருந்து விடுபட புற்றில் பால் ஊற்றுகின்றனர். மூலவருக்கு 108 துளைகள் உள்ள கலசத்தில் கங்கா தீர்த்தம் நிரப்பி அபிஷேகம் செய்கின்றனர். இதற்கு 'தாராபிஷேகம்' என்று பெயர். இதனால் திருமணத்தடை விலகும். தலவிருட்சமான அரசமரம் கோயிலுக்கு எதிரில் உள்ளது. எதிரிகளால் பாதிக்கப்பட்டவர்கள் நியாயம் கிடைக்க பவுர்ணமியன்று சத்தியநாராயண பூஜையும், மாதப்பிறப்பு அன்று சதுர்தாபிஷேக பூஜையும் இங்கு நடத்துகின்றனர்.காவல் தெய்வங்களான பஞ்சுளி, முண்டித்தாயா, வைத்திய நாதர், வைஷ்ணவிதேவி, லட்சுமிநாராயணர், அனுமன் சன்னதிகள் இங்குள்ளன.கோயில் முகப்பில் பிரம்மாண்ட சிவன், நந்தி சிலைகள் உள்ளன.

Apr 17, 2026

பணம் சேர வரகூர் லட்சுமிநாராயணர் கோயில்.

தஞ்சாவூர் அருகே வரகூர் லட்சுமிநாராயணர் கோயில்.நாராயணதீர்த்தர் என்னும் மகான் வயிற்றுவலியால் அவதிப்பட்டார். பல தலங்களையும் வழிபட்ட அவர் நடுக்காவேரி என்னும் இடத்தில் உள்ள விநாயகர் கோயிலில் தங்கினார். "நாளை காலையில் எழுந்ததும் யாரைக் காண்கிறாயோ அவரை பின் தொடர்ந்தால் உன் நோய் குணமாகும்" என கனவில் சுவாமி தெரிவித்தார். கண் விழித்ததும் ஒரு வெள்ளை பன்றி (வராகம்) கண்ணில் படவே அதை பின்தொடர்ந்தார். அது பூபதிராஜபுரம் லட்சுமி நாராயணர் கோயிலுக்குள் சென்றது. அவரும் அந்த பெருமாளை வழிபட்டு குணம் அடைந்தார். பன்றி வடிவில் பெருமாள் வந்த தலம் என்பதால் 'வரகூர்' எனப் பெயர் பெற்றது. முதலாம் பராந்தகச் சோழனால் இக்கோயில் கட்டப்பட்டது.நாராயண தீர்த்தர் வரகூரில் தங்கியிருந்த காலத்தில் நேரில் கிருஷ்ணரை தரிசித்தார். அவருடன் பாமாவும், ருக்மணியும் வந்திருந்தனர். அப்போது,"நாராயண தீர்த்தரே... கிருஷ்ணாவதாரத்தில் கோபியருடன் நடத்திய திருவிளையாடலை பாடுங்கள்" என பாமா வேண்டுகோள் விடுத்தார். அவரும் 'ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி' என்ற பாடலைப் பாடினார்.இங்கு மூலவரை லட்சுமிநாராயணர் என்றும், உற்ஸவரை வெங்கடேசப் பெருமாள் என்றும் அழைக்கின்றனர். துளசி,ஏலக்காய், பச்சைக் கற்பூரம், கிராம்பு, ஜாதிக்காய் கலந்த பொடி சுவாமிக்கு படைக்கப்பட்டு பிரசாதமாக தருகின்றனர். இதை சாப்பிட்டால் நோய் வராது. இங்கு 'கிருஷ்ணலீலா தரங்கிணி' பாடல்களை கிருஷ்ண ஜெயந்தியன்று பாடுவர். குழந்தை வரம் பெற அங்கப்பிரதட்சணம் செய்வர்.பண பலம் பெருக பெருமாளின் கையிலுள்ள வெள்ளிக்குடத்தில் வெண்ணெய் நிரப்புகின்றனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 19 20

AD's



More News