நல்ல சூரிய ஒளி படும் இடத்தைத் தேர்ந்தெடுத்து, காய்கறி விதை அல்லது நாற்றுகளைப் பயன்படுத்தி, கோகோபீட், மண்புழு உரம், கலந்த கலவையை நிரப்பி நடவு செய்து, தினமும் காலை மாலை தண்ணீர் ஊற்றி, மண் காய்ந்து விடாமல் பராமரித்தால் 4-5 நாட்களில் விதைகள் முளைத்து நல்ல விளைச்சல் கிடைக்கும். வெண்டைக்காய் வெப்பத்தை தாங்கும் என்பதால், மார்ச் மாதம் நடவு செய்ய ஏற்ற காலம். மாடித் தோட்டத்தில் வெண்டைக்காய் வளர்க்கும் முறை மாடித் தோட்டத்தில் நல்ல சூரிய ஒளி கிடைக்கும் இடத்தைத் தேர்வு செய்யவும்.வெண்டைக்காய் விதைகள் அல்லது நாற்றுகளைத் தேர்ந்தெடுக்கலாம்.மார்ச் மாதங்கள் வெண்டைக்காய் நடவு செய்ய சிறந்தவை, ஏனெனில் இது வெப்பத்தை தாங்கும் பயிர்.கோகோபீட், மண்புழு உரம், மண் கலந்த கலவையைப் பயன்படுத்தலாம்.விதைத்த 4-5 நாட்களில் விதைகள் முளைக்கத் தொடங்கும்.செடிக்கு நிறைய தண்ணீர் தேவைப்படும். எனவே, தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் தண்ணீர் ஊற்ற வேண்டும். மண் காய்ந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.களைகள் இல்லாமல் பராமரிக்க வேண்டும். இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றி உங்கள் மாடித் தோட்டத்தில் சுவையான வெண்டைக்காய்களை விளைவிக்கலாம்.
ரோஜா செடியை கட்டிங்ஸில் இருந்து உருவாக்கலாம் நர்சரிக்கு சென்று நாட்டு ரோஜா செடியில் இருந்து ஒரு கிளையை வெட்டி வாங்கவும்.பென்சிலின் அடர்த்தியில் ரோஜா கட்டிங்ஸ் இருப்பது அவசியம்.இந்த கட்டிங்ஸை வேர்கள் உற்பத்தி ஆன பிறகு செம்மண் கலவையில் சேர்த்து தொட்டியில் வளர்க்கலாம்.15 செ மீ நீளம் அதாவது சின்ன ஸ்கேல் அளவில் கட்டிங்ஸ் எடுத்து அடிபாகத்தை 45.50 டிகிரி அளவில் கூர்மையாக வெட்டவும்இப்போது ஒரு மூடி தேன் எடுத்துக் கொண்டு கூர்மைபடுத்திய ரோஜா கட்டிங்ஸை அதில் மூழ்கி எடுக்கவும்வேர்கள் நன்றாக வளர கற்றாழை ஜெல் அல்லது தேன் பயன்படுத்தலாம். இதே போல 4-5 கட்டிங்ஸ் தயாரிக்கவும்இதை மண் புழு உரத்தில் கொஞ்சம் இடைவெளிவிட்டு வைத்து காற்று புகாதவாறு பிளாஸ்டிக் போட்டு மூடி உாத்திற்கும் பிளாஸ்டிக்கிற்கும் உள்ள இடைவெளியில் தண்ணீர் ஊற்றவும்.நிழலான இடத்தில் வளர்த்தால் 20 நாட்களில் வேர் பிடித்துவிடும். ஐந்து கட்டிங்ஸில் மூன்றாவது நன்கு வேர்கள் பிடித்து தயாராகிவிடும்.ரோஜா செடிக்கு மண் கலவை-பத்து அங்குல மண் தொட்டியில் உதிரியான செம்மண் 50 விழுக்காடு, கோகோபீட் 25 விழுக்காடு, இயற்கை உரம் 25 விழுக்காடு நிரப்பி வேர் பிடித்த கட்டிங்ஸ் வைக்கவும்.கோகோபீட் என்பது தென்னைநார் கழிவு ஆகும். தொட்டியில் நான்கு - ஐந்து ஓடைகள் இருந்தால் தண்ணீர் சரியாக வெளியேற்றப்பட்டு வேர் அழுகல் நோய் தவிர்க்கப்படும்இயற்கை உரம் என்பது மாட்டு சாணம் உரம் அல்லது மண் புழு உரம் பயன்படுத்தலாம்.15-20 நாட்களுக்கு ஒரு முறை டிஏபி உரம் பயன்படுத்தலாம். இதை செடியில் நேரடியாக பயன்படுத்தாமல் வேர் பகுதியை சுற்றி கொஞ்சம் மண் தோண்டி அதில் போடவும் செடிக்கு தண்ணீர் ஊற்ற அரிசி கழுவும் தண்ணீர் பயன்படுத்தலாம்.இலைகள் வளர ஆரம்பித்த சில நாட்களில் அதன் நுனிகள் காய்ந்து நிறம் மாறி கருப்பாக மாறும் அப்போது இலைகளை வெட்டி விடவும் புதிய இலைகளையும் வெட்டி விடுங்கள்.இதற்கு அரை ஸ்பூன் பேக்கிங் சோடாவை ஒரு கப் தண்ணீரில் சின்ன ஷாம்பு பாக்கெட்டுடன் கலந்து ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலுக்கு மாற்றி வாரத்திற்கு ஒரு முறை தெளித்து வாருங்கள்.தினமும் 6 மணி நேரம் மாடியில் ரோஜா செடி மீது வெயில் படும் படி வளர்க்கவும்மொட்டுக்கள் வைத்த பிறகு அதில் கருப்பு நிறத்தில் பூச்சிகள் வளரும் முட்டையிடும்.இதை தடுத்திட வேப்ப எண்ணெய்யை கொஞ்சம் ஷாம்புவுடன் கலந்து ஸ்பிரே பாட்டிலுக்கு மாற்றி செடி மீது அடிக்கவும்.2-3 நாட்களில் பூச்சிகள் ஓடிவிடும் நன்கு கவனிப்புடன் ரோஜா செடி வளர்த்து வந்தால் தோட்டம் போல பூத்து குலுங்கும்.
மாடித் தோட்டத்தில் நித்திய கல்யாணி(Vinca) செடியை எளிதாக வளர்க்க, வடிகால் வசதியுள்ள தொட்டியில் தேங்காய் நார் கழிவு, மண்புழு உரம் மற்றும் மணல் கலந்த மண்ணைப் பயன்படுத்தவும். அதிக சூரிய ஒளி(6-8 மணிநேரம்) தேவைப்படும் இந்தச் செடிக்கு, மண்ணின் மேற்பரப்பு காய்ந்ததும் நீர் ஊற்றினால் போதும். பூக்கள் அதிகம் பூக்க, அவ்வப்போது மண்புழு உரம் இட்டு பராமரிக்கலாம். சிறியது முதல் நடுத்தர அளவிலான தொட்டிகள்(10-12 இன்ச்) போதுமானது. சாதாரண தோட்ட மண், செம்மண் அல்லது தேங்காய் நார் கழிவு (Coco peat) கலந்த மண்ணில் நன்றாக வளரும்.நித்திய கல்யாணி செடிக்கு முழுமையான சூரிய ஒளி தேவை. மாடியில் அதிக வெயில் படும் இடத்தில் வைத்தால் தான் பூக்கள் அதிகமாக பூக்கும்.தினமும் தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியமில்லை. மண்ணின் மேல் அடுக்கு காய்ந்த பிறகு தண்ணீர் ஊற்றினால் போதும். அதிக நீர் ஊற்றினால் வேர் அழுகிவிடும்.மாதத்திற்கு ஒருமுறை மண்புழு உரம் அல்லது தொழு உரம் அளிப்பது ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் அதிக பூக்களுக்கும் உதவும்.செடி நன்கு அடர்த்தியாக வளர, நுனி கிளைகளை அவ்வப்போது கிள்ளி விடலாம் .(Pruning). இது புதிய கிளைகளை உண்டாக்கி பூக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.பொதுவாக பூச்சிகள் தாக்காது. சில நேரங்களில் செம்பேன் பாதிப்பு இருந்தால் வேப்ப எண்ணெய் கரைசல் தெளிக்கலாம். இந்த மருத்துவக் குணங்கள் நிறைந்த செடியை, மிகக் குறைந்த பராமரிப்பில் மாடித் தோட்டத்தில் வளர்க்கலாம்.
வெயில் காலத்தில் செடிகளை பாதுகாக்க மூடாக்கு போடுவது மிகவும் முக்கியம் .தேங்காய் பஞ்சு, உலர் இலைகள், கரும்பு சக்கை தோட்ட கழிவுகள் போன்றவற்றை செடியை சுற்றி மூடினால் மண்ணில் ஈரப்பதம் நீண்ட நேரம் இருந்து செடி ஆரோக்கியமாக வளரும்்திலஅதோட காலை அல்லது மாலை நேரத் மட்டும் தண்ணீர் ஊற்றினால் செடி வளர்ச்சி கோடையிலும் நிதானமாக நடைபெறும் செடியில் உள்ள முற்றிய இலைகளை நீக்கினால் பூக்களும் காய்களும் பெருகுவதற்கு ஏதுவாக இருக்கும். வெயில் அதிகமா இருப்பதால் இலைகள் சுருண்டு போவது 'மொட்டுக்கள் கருகுவது போன்ற அறிகுறிகள் தெரியும் அப்படிப்பட்ட சமயத்தில் செடியை உடனே நிழலில் பாதுகாக்க வேண்டும் இப்படிச் சரியான பராமரிப்பு கொடுத்தால் வெயிலிலும் செடிகள் நன்றாக வளர முடியும் .
பாகற்காய் கொடியை செழிப்பாக வளர்க்க, நல்ல வடிகால் வசதியுள்ள மணல் வண்டல் மண்ணில், ஜனவரி,ஜூலை மாதங்களில் விதைகளை விதைக்க வேண்டும். போதுமான வெயில்(6-8 மணி நேரம்) அவசியம். விதைகள் முளைத்த15-20 நாட்களில் கொடிகள் படர பந்தல் அமைக்க வேண்டும். ஈரப்பதமான மண் மற்றும் வாரத்திற்கு இருமுறை நீர் ஊற்றுவது, அதிக மகசூல் பெற, இலைப்பேன் மற்றும் கொடி அழுகல் நோயைத் தடுக்க உதவும். பாகற்காய்வளர்க்கும் முறைநல்லஅங்ககச்சத்துகொண்டமண்ணில், சூடான, ஈரப்பதமானகாலநிலை (ஜனவரி - ஜூலை) சிறந்தது.விதைகளை 1 மீட்டர்இடைவெளியில், பார் ஓரத்தில்விதைத்து, மண்ணால்மூடிநீர்தெளிக்கவேண்டும்.கொடிகள்படரஆரம்பிக்கும்போது, சுமார்1.5 முதல்2 மாதங்களுக்குள்பந்தல்அமைத்து, கயிறுகளைப்பயன்படுத்திகொடிகளைமேலேற்றவேண்டும்.மண்எப்போதும்ஈரப்பதமாகஇருக்கும்படி, ஆனால்நீர்தேங்காமல்பார்த்துக்கொள்ளவேண்டும்.கரிமஉரங்கள்அல்லதுதொழுஉரம் (Compost) இடுவதுசிறந்தது.நடவுசெய்த60-70 நாட்களில், பாகற்காய்பிஞ்சுநிலையில்(முழுமையாகமுதிர்வதற்குமுன்) இருக்கும்போதுஅறுவடைசெய்யலாம், அப்போதுதான்ருசியாகஇருக்கும். பாகற்காய்செடிக்கு,10 லிட்டர்கொள்ளளவுகொண்டபெரியதொட்டிகள்அல்லதுபைகளைமாடிதோட்டத்தில்பயன்படுத்தலாம்.வளர்ச்சியின்ஆரம்பகட்டங்களில்கயிறுகளில்கொடிகளைக்கட்டிவிடுவது, அது பந்தலில்ஏறுவதற்குஉதவும்.
வெற்றிலை கொடியை (Piper betle) நிழலான, ஈரப்பதமான சூழலில், நன்கு வடிகால் வசதியுள்ள மண்ணில் தண்டு வெட்டுதல் (Cutting) அல்லது பதியம் மூலம் எளிதாக வளர்க்கலாம். 30-45 செ.மீ நீளமுள்ள முற்றிய தண்டு பகுதியை எடுத்து, தொட்டியில் அல்லது நிலத்தில், ஈரப்பதம் குறையாமல், நேரடி சூரிய ஒளி படாதவாறு நட்டு, உயிருள்ள ஆதரவு மரங்கள் அல்லது பந்தல் அமைத்து வளர்ப்பது சிறந்தது.வெற்றிலை கொடி வளர்ப்பதற்கான வழிமுறைகள்:கொடிக்கு 50% முதல் 75% வரை நிழல் தேவைப்படும். அதிக வெயில் இலைகளை எரித்துவிடும்.செம்மண் அல்லது மண்புழு உரம் கலந்த வளமான மண் ஏற்றது. தண்டு பகுதியின் கணுக்களில் இருந்து வேர் வரும் என்பதால், கணுக்கள் மண்ணில் பதியுமாறு நட வேண்டும்.மண் எப்போதும் ஈரப்பதமாக இருக்க வேண்டும், ஆனால் தண்ணீர் தேங்கக்கூடாது, இல்லையெனில் வேர் அழுகிவிடும். கோடையில் தினமும், மற்ற காலங்களில் மண் காய்ந்ததும் தண்ணீர் ஊற்றவும்.கொடி மேலே படர்வதற்கு பந்தல், தென்னை மட்டை, அல்லது ஏதாவது ஒரு மரத்தின் உதவியுடன் வளர்க்க வேண்டும்.செழிப்பான வளர்ச்சிக்கு கடலை புண்ணாக்கு, மண்புழு உரம், அல்லது தொழு உரம் இடலாம்.பனி மற்றும் அதிக குளிர் காலத்தில் இலைகளை காக்க நிழல்வலை பயன்படுத்தலாம். குறிப்பு: நிழல், ஈரப்பதம், வடிகால் வசதி - இந்த மூன்றும் வெற்றிலை கொடி செழிப்பாக வளர முக்கியமாகும்.
ரோஸ்மேரி வேர் நாற்றுகளை ஜூன். ஜூலை மற்றும் செப்.. அக்டோபரில் மானாவாரி பயிராக கடல் மட்டத்தி லிருந்து 900 மீட்டருக்கு மேல் உள்ள மலைப் பிரதேசங்களில் நடவு செய்யலாம். ஒருமுறை நடவு செய்தால்12 ஆண்டுகள் வரை பலன் தரும் என்பதால் வணிகப்பயிராகவும் சாகுபடி செய்யலாம்.நிலத்தை இரண்டு முறை உழ வேண்டும்.2வது உழவின் போது எக் டேருக்கு50 டன் மட்கிய தொழுஉரம், ஒரு டன் வேப்பம் புண்ணாக்கு ஆகி யவற்றை மண்ணுடன் கலக்க வேண் டும். 30 செ.மீ உயரம், 1.5 மீட்டர் அகலம் கொண்ட பாத்திகள் அமைத்து ஒரு ஏக்கருக்கு 20ஆயிரம் நாற்றுகள் நடலாம். நாற்று நடும்போது ஏக்கருக்கு 5 கிலோ அசோஸ்பைரில்லம், 5 கிலோ பாஸ்போபாக்டீரியா உயிர் உரங்களை மண்ணில் இட வேண்டும்.ரோஸ்மேரி செடிகள் பூப்பதற்கு முன்10 முதல்15 செ.மீ நீளம்' கொண்ட தண்டுகளை வெட்டியெ டுத்து நுனி இலைகளைத் தவிர மற்ற இலைகளை அகற்ற வேண்டும்.அவற்றை உயிர் உரத்தால் நாற்று நேர்த்தி செய்த பின் சிறு பாலித்தீன் பைகளில் நடவு செய்து நிழலான பகுதியில் வைத்து வளர்க்க வேண்டும். இரு மாதங்களில் நாற்றுகள் வேர் விட்டு நடவுக்கு தயாராகிவிடும்.இவற்றை வரிசைக்கு வரிசை45 செ.மீ, செடிக்குச் செடி45 செ.மீ இடைவெளியில் நடவேண்டும். இது வறட்சியை தாங்கும் என்றாலும் வறண்ட நேரத்தில் நீர் பாய்ச்சினால் பச்சை இலை மகசூல் அதிகமாக கிடைக்கும்.நட்டு ஒரு மாதம் கழித்து மண்ணை கொத்தி களை எடுக்க வேண்டும். ஆண்டுக்கு 4 அல்லது 5 முறை களை எடுக்க வேண்டும்.நடவு செய்த இரண்டாம் ஆண்டு முதல் பாஸ்போபாக்டீரியா, அசோஸ் பைரில்லம் உயிர் உரங்களை ஏக்கருக்கு 2 கிலோ எடுத்து தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும். 2 மாதங் களுக்கு ஒருமுறை பஞ்சகாவ்யா 3 சதவீத கரைசலை தெளித்தால் மகசூல் அதிகரிக்கும். பஞ்சகாவ்யா3 சத கரைசலை இலைவழி தெளிப்பு வருடத்திற்கு5 முறை10 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும். தசகாவ்யா 3 சத கரைசலை வருடத் திற்கு 3 முறை தெளிக்க வேண்டும். மண்புழு மட்கு வடிநீர் 10 சத கரை சல் வருடத்திற்கு 3 முறை இலைவழி தெளிப்பு மூலம் ஒரு மாத இடைவெளி யில் தெளிக்க வேண்டும்.ரோஸ்மேரி செடி பூக்கும் சமயத்தில்30 முதல்35 செ.மீ நீளம் கொண்ட பூக்கும் தருணத்தில் உள்ள இலையுடன் கூடிய மேல் தண்டுகளை அறுவடை செய்ய வேண்டும். தண்டுப்பகுதியில் இருந்து ரோஸ்மேரி எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. நாற்றுகள் நட்ட 215 நாட்களில் முதல் அறுவடை செய்யலாம். அதன் பின் நான்கு மாத கால இடைவெளியில் ஆண்டுக்கு மூன்று முறை அறுவடை செய்யலாம்.
சம்பங்கி நீலக்கற்றாழையை ஒத்திருக்கும்.இதன் சாறு நறுமண பொருட்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன.இந்தியாவில் ரஜினிகாந்தா வருடத்திற்கு20 தண்டுகள் வரைக்கும் வளர்ந்து தினம் பூக்கும் தாவரமாகும்.ப்ரஜ்வல், மெக்ஸிகன் சிங்கிள்,பியர்ல்டபுள்,வைபவ்,சுவாளினி,ஸ்ரீகார் போன்ற இரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.சம்பங்கி மலர் சாகுபடிக்கு ஏற்ற காலம் ஜூன்,ஜூலை மாதங்கள் ஆகும்.நல்ல வடிகால் வசதியுள்ள வண்டல் மண் ஏற்றது.மண்ணின் கார அமிலத்தன்மை 6.5 முதல் 7.5 வரை இருக்க வேண்டும்.தேர்வு செய்த நிலத்தில்2 டன் தொழுவுரத்தை இட்டு இரண்டு முறை உழவு செய்ய வேண்டும்.பிறகு,150 கிலோ வேப்பம் பிண்ணாக்கை நிலம் முழுவதும் தூவி,உழவு செய்ய வேண்டும்.அதன் பின்3 அடி அகலம்,முக்கால் அடி உயரத்தில் தேவைக்கேற்ற நீளம் கொண்டதாக ஒன்றரை அடி இடைவெளியில் பார்களை அமைத்துக் கொள்ள வேண்டும்.எக்டருக்கு1,12,000 கரணைகள் தேவைப்படும்.கரணைகளை அறுவடை செய்து30 நாட்கள் வைத்திருத்த பின்பே நடவுக்கு பயன்படுத்தவேண்டும்.நடவிற்கு முன்பு 5000 பிபிஎம் சிசிசியில் (5 கிராம்/ லிட்டர்)மூழ்கச்செய்து பின்பு கரணைகளை நடவு செய்ய வேண்டும்.தயார் செய்துள்ள பார்களில்25 முதல்30 கிராம் எடையுள்ள கரணைகளை45x20 செ.மீ இடைவெளியில்25 செ.மீ ஆழத்தில் நடவு செய்ய வேண்டும்.முதல் பத்து நாட்களுக்கு தினமும் தண்ணீர்விட வேண்டும்.பிறகு,நிலத்தின் தன்மையைப் பொறுத்தும் காலநிலையைப் பொறுத்தும் பாசனம் செய்து கொள்ளலாம்.ஆனால் சம்பங்கி வயலில் தண்ணீர் தேங்கி நிற்கக்கூடாது.அதனால் மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து,தேவைக்கேற்ப பாசனம் செய்ய வேண்டும்.ஒவ்வொரு பாசனத்தின் போதும் 150 லிட்டர் இயற்கை உரமான அமுதக்கரைசலைக் கலந்து விட வேண்டும். நடவு செய்த 3-ம் மாதம் ஒவ்வொரு செடியின் அருகிலும் மண்வெட்டியால் பறித்து, செடிக்கு ஒரு கிலோ என்கிற கணக்கில் ஆட்டு எருவை வைத்து, மண்ணால் மூடி விட வேண்டும். மாதம் ஒரு முறை25 கிலோ வேப்பம்பிண்ணாக்கு,50 கிலோ கடலைப் பிண்ணாக்கு ஆகியவற்றைக் கலந்து இட வேண்டும்.ஏக்கருக்கு 10 டன் தொழு உரம், 20 கி.கி தழைச்சத்து தரவல்ல 44 கிலோ யூரியா, 80 கி.கி மணிச்சத்து தரவல்ல 500 கிலோ சூப்பர் பாஸ்பேட்,80 கி.கி சாம்பல் சத்து தரவல்ல135 கிலோ மியூரேட் ஆப் பொட்டாஷ் ஆகிய உரங்களை அடியுரமாக இடவேண்டும்.இரண்டு மாதங்கள் கழித்து ஒரு முறையும், பின் மூன்று மாதங்கள் கழித்து ஒரு முறையும், மீண்டும் மூன்று மாதங்கள் கழித்து ஒரு முறையும் என மூன்று முறை 44 கிலோ யூரியாவை மேலுரமாக இட வேண்டும்.சிறிய செடியாக இருக்கும்பொழுது10 நாட்களுக்கு ஒரு முறை களை எடுக்க வேண்டும். பெரிய செடியாக வளர்ந்த பின் களை அதிகமானால் எடுக்க வேண்டும்.இதில் அதிகமாக நோய் தாக்குதல் காணப்படுவது இல்லை. இதில் காணப்படும் ஒரே பிரச்சனை நூற்புழுதாக்குதல் தான்.நூற்புழுவை கட்டுப்படுத்த ஏக்கருக்கு5 கிலோ உயிர் பூஞ்சாணமான விரிடியை எருவில் கலந்து போடவேண்டும் அல்லது கார்போஃப்யூரான் குருணை மருந்தினை ஒரு செடிக்கு ஒரு கிராம் என்ற விகிதத்தில் இட்டு உடனடியாக நீர்ப்பாய்ச்சவேண்டும்.கரணைகள் முளைத்த பின்பு80 முதல்95 நாட்களில் பூக்களை அறுவடை செய்யலாம். பூக்களை நாள்தோறும் அறுவடை செய்ய வேண்டும். தினசரி சந்தையில் விற்பனை செய்யலாம். பூக்களின் விலை குறையும் போது சென்ட் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு விற்பனைக்கு கொடுக்கலாம்.ஒரு எக்டருக்கு 14 முதல் 15 டன் மலர்கள் வரை கிடைக்கும்.
நமதுவீட்டு மாடியில் நாம் அனைவரும் அன்றாட காய்கறிகளைபயிர் செய்யலாம். இவ்வாறுபயிர் செய்வதினால் நமக்கு உடல்நலத்தை காப்பதுடன் இயற்கை முறையில் விளைந்தகாய்கறிகளை உண்ட திருப்தியும் ஏற்படும். எனவேநம்மால் முடிந்த அளவுக்கு மாடித்தோட்டங்களை ஏற்படுத்தலாம்.GrowBags அல்லதுThotti, அடியுரமாக இட மணல், தென்னை நார் கழிவு மக்கியது, மண்புழு உரம், செம்மண், வேப்பம் பிண்ணாக்கு, பஞ்சகாவ்யா.நாற்றுகளை உருவாக்குவதற்கான குழித்தட்டுகள்,நீர் தெளிக்க உதவும் பூவாளி தெளிப்பான்.தேர்வு செய்யும் பை அல்லது தொட்டியானது10 கிலோ கொள்ளளவு கொண்டதாக இருக்க வேண்டும். அதில்8 கிலோ வரை மண், மணல், தென்னை நார் கழிவு, மட்கிய குப்பை ஆகியவற்றை நிரப்பி தொட்டியை ஆற விட வேண்டும்.நாற்றுகளை உண்டாக்க குழி தட்டில் தென்னை நார்க் கழிவுகளை நிரப்ப வேண்டும். அதன் அடியில் ஒரு துளை இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.தரமான விதைகளை தேர்வு செய்து குழி தட்டுகளில் குழிக்கு ஒரு விதை வீதம் விதைக்க வேண்டும். தினமும் தண்ணீர் தெளிக்க வேண்டும்.தயார் செய்துள்ள தொட்டிகளில் 20 நாள் வயதான நாற்றுகளை நடவு செய்ய வேண்டும்.நாற்று நட்டவுடன் நீர் ஊற்ற வேண்டும். இரு நாட்களுக்கு ஒருமுறை காலை அல்லது மாலை வேளையில் நீர் ஊற்ற வேண்டும்.செடிகளைக் காக்கும் இயற்கை பூச்சிக் கொல்லியான, வேப்ப எண்ணையை மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும்.வேப்ப இலைகளைச் சேமித்து நன்கு காய வைத்துத் தூள் செய்துகொள்ள வேண்டும். இந்தத் தூளைச் செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் செடியின் வேர் பகுதியில் போட்டு நன்கு கொத்திவிட வேண்டும். இதுவே அடி உரமாகவும், பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும்.வேப்பம்புண்ணாக்கை ஊறவைத்து வடிகட்டிய நீருடன் வேப்ப எண்ணெய்3 மிலி(ஒரு லிட்டர் தண்ணீரில்) கலந்து தெளிக்கும்போது பூச்சிகள் கட்டுப்படுத்தப்படும்.வெயில் அதிகமாக இருக்கும் பட்சத்தில் இதனை வலை கட்டி வளர்க்கலாம். இவ்வாறு வலை கட்டுவதால் சூரிய ஒளியானது குறைந்த அளவே படும். முழுவதும் நிழல்,பாங்கான இடத்தில் வைப்பதை தவிர்க்க வேண்டும். பஞ்சக்காவ்யா உரத்தை தண்ணீரில் கலந்து செடிகளுக்கு ஊற்றலாம்.இயற்கை பூச்சி விரட்டிகளான கற்றாழை சாறு, பூண்டு கரைசல் ஆகியவற்றை ஒரு லிட்டர் தண்ணீருக்கு30 மி.லி தெளித்து வர நன்மை தரும் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.120 நாட்களில் காய்களை அறுவடை செய்யலாம்.
நாம் அனைவரும் அன்றாட காய்கறிகளை நமது வீட்டு மாடியில் பயிர் செய்யலாம். இவ்வாறு பயிர் செய்வதினால் நமக்கு உடல் நலத்தை காப்பதுடன் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை உண்ட திருப்தியும்ஏற்படும். எனவே நம்மால் முடிந்த அளவுக்கு மாடித்தோட்டங்களை ஏற்படுத்தலாம். மாடித்தோட்டத்தில் தர்பூசணி பயிரிடும் முறை யை இங்கு காணலாம்.GrowBags அல்லதுThotti. அடியுரமாக இட மணல், தென்னை நார் கழிவு, மண்புழு உரம், செம்மண், வேப்பந்தூள், பஞ்சகாவ்யா.விதைகள்,நீர் தெளிக்க உதவும் பூவாளி தெளிப்பான்,பந்தல் போடுவதற்கான உபகரணங்கள்.தேங்காய் நார் கழிவு இரண்டு பங்கு, மாட்டுச்சாணம் ஒரு பங்கு, சமையலறை கழிவு ஒரு பங்கு என இயற்கை உரங்களை கொண்டு தொட்டியை நிரப்ப வேண்டும். இந்த கலவை தயாரானதும் உடனே விதைக்க கூடாது.10 நாட்கள் கழித்து, கலவை நன்கு மக்கியதும் விதைப்பு செய்ய வேண்டும்.இது கொடி வகை என்பதால் 3 அடிக்கு மேலாக இருக்கும்படி தொட்டிகளில் மண் மற்றும் உரக்கலவையை நிரப்ப வேண்டும்.நல்ல தரமான விதைகளை தேர்ந்தெடுத்து விதைக்க வேண்டும். ஒரு குழிக்கு 3 விதைகள் வரை ஊன்றலாம்.விதைகளை விதைத்தவுடன் பூவாளியால் நீர் தெளிக்க வேண்டும். தினம் காலை அல்லது மாலை வேளையில் தண்ணீர் தெளிக்க வேண்டும்.மாடியில் பந்தல் போடுவது எளிமையான ஒன்று ஆகும். அதற்கு நான்கு சாக்கில் மணலை நிரப்பி ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மூங்கில் கம்பை ஆழமாக ஊன்றி மூலைக்கு ஒன்றாக நான்கு சாக்குகளையும் நான்கு மூலைகளில் வைக்க வேண்டும்.அடியில் சிறு கற்களை கொண்டு மேடை போல் அமைத்து அதன்மீது சாக்கு பைகளை வைப்பது சிறந்தது. பின்னர் இதில் கயிறு அல்லது கம்பிகளை குறுக்கு நெடுக்காக கட்ட வேண்டும். இந்த பந்தலில் கொடிகளை படர விட வேண்டும். இந்த பந்தல் மற்ற காய்கறி செடிகளுக்கு நிழலாகவும் பயன்படும்.மாடியில் கம்பிகள் இருந்தால் அவற்றை பயன்படுத்தியும் பந்தல் போடலாம். இதன் காய்கள் அதிக எடை அளவு கொண்டதால் பந்தல் உறுதியானதாக இருக்க வேண்டும். இலையெனில் சுவற்றின் மீதும், தரையிலும் கூட படர விடலாம்.வீட்டு சமையலறை கழிவுகளை ஒரு குழியில் கொட்டி மக்கச்செய்து அதனை உரமாக பயன்படுத்தலாம்.செடிகளைக் காக்கும் இயற்கை பூச்சிக் கொல்லியான வேப்ப எண்ணையை மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும்.வேப்ப இலைகளைச் சேமித்து நன்கு காய வைத்துத் தூள் செய்துகொள்ள வேண்டும். இந்தத் தூளைச் செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் செடியின் வேர் பகுதியில் போட்டு கிளறிவிட வேண்டும். இதுவே அடி உரமாகவும், பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும்.வளரும் நுனி கிளைகளை கவாத்து செய்வதால் அதிக கிளைகள் தோன்றுவதற்கு ஏதுவாக இருக்கும். 15 நாட்களுக்கு ஒருமுறை கழிவுகளைக் கிளறுவதால் கீழுள்ள கழிவுகள் மேலும், மேலுள்ள கழிவுகள் கீழும் செல்வதால், கழிவை மக்கச் செய்யும் நுண்ணுயிர்களின் செயல்பாடு துரிதமாக இருக்கும்.பஞ்சகாவ்யா50 மில்லி என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கரைத்து பூக்கும் சமயத்தில் பைகளில் ஊற்ற வேண்டும். இதனால் பூக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இது சிறந்த நோய் தடுப்பானாகவும் செயல்படும்.காய்களை சரியான பருவம் பார்த்து அறுவடை செய்ய வேண்டும்.