மருத்துவ அறிவியல்கோழி முட்டையில் ஒரு மனிதனுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் இருக்கிறது என்று கூறுகிறது. 100 கிராம் முட்டையில் கால்சியம் 56 மில்லி கிராம் உள்ளது. கால்சியம் என்பது எலும்பு மற்றும் பல் ஆரோக்கியத்திற்கு அவசியமானது. தசை ஒத்துழைப்பு மற்றும் நரம்பு செயல்பாட்டை கட்டுப்படுத்துகிறது. முட்டையில் இரும்புச்சத்து 1.75 மி.கி உள்ளது. இது ரத்தத்தில் ஹீமோகுளோபின் தட்டுக்களை உருவாக்கி ஆக் சிஜனை எடுத்துச் செல்ல உதவுகிறது. உடல் சோர்வு மற்றும் நரம்பு பலவீனத்தை தடுக்கிறது. பாஸ்பரஸ் சத்தும் மிகுதியாக உள்ளது. இது எலும்பு மற்றும் பற்களை உருவாக்கும் பொருளாகும். முட்டையில் பொட்டாசியம் சத்தும் இருப்பதால், இதய துடிப்பை ஒழுங்குபடுத்தி, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. முட்டையில் உள்ளசோடியமானது, திரவ சமநிலையை பராமரிக்க உதவுகிறது. இதுதவிர செலினியம், துத்தநாகம், மக்னீ சியம், மாங்கனீசு சத்துக்களும் அடங்கி உள்ளன. மேலும் முட்டையில் காணப்படும் வைட்டமின்கள், கொழுப்பு சத்துக்கள் மனித உடலை பல நோய்களில் இருந்து காக்கும் அருமருந்தாக உள்ளன.
கருஞ்சீரகத்தை சேர்த்து பயன்படுத்தினால் வாயு பிரச்சினை தீரும்.சர்க்கரை நோயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் மருந்தாக கருஞ்சீரகம் உள்ளது.கருஞ்சீரகத்தை அடிக்கடி பயன்படுத்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நோய் குணமடையும்.வாதநோய், நரம்பு தளர்ச்சி,மன சோர்வு,முதுமையில் ஏற்படும் சோர்வு போன்றவற்றிற்கு கருஞ்சீரகம் சிறந்த மருந்து.கருஞ்சீரகத்தை அடிக்கடி பயன்படுத்தி வந்தால் நுரையீரல் கல்லீரல் மண்ணீரல் கணையம் சிறுநீரகம் என ஐந்து ராஜ உறுப்புகளும் பலப்படும்.கருஞ்சீரகத்தை உடலுக்கு உட்கொள்ளும் மருந்துகள் மூலம் மட்டுமன்றி, உடலுக்கு அழகு தரும் வெளிப்பூச்சு மருந்தாகவும் பயன்படுகிறது.கருஞ்சீரக எண்ணெயை, கை, கால் மூட்டுகளில் தடவுவதன் மூலம், நல்ல பலனை பெறலாம்.கருஞ்சீரக எண்ணெயை, முன் தலையில் சிறிது தடவிவர, கடுமையான தலைவலி உள்ளிட்ட பாதிப்புகளில் இருந்து நிவாரணம் பெறலாம், முடி உதிர்தல் குறையும்.கருஞ்சீரகத்தை சாப்பிட்டு வந்தால் ஜீரண சக்தி அதிகரிக்கும்.மலச்சிக்கலை போக்க வல்லது.கருஞ்சீரகத்தை அடிக்கடி பயன்படுத்தி வந்தால் கண் நோய்களை குணமாக்கும்,பார்வை தெளிவடையும். கண் எரிச்சல் தீரும். கண்களின் பார்வைத்திறனை அதிகரிக்க செய்கிறது, ஒட்டுமொத்த கண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறதுசர்க்கரை நோயாளிகள் கருஞ்சீரகத்தை எடுத்து கொள்ளும் போது இன்சுலின் சுரப்பை தூண்டி விட செய்கிறது. இரத்தத்தில் சர்க்கரை அளவை சரியான அளவில் வைத்திருக்கவும் உதவுகிறது.கரப்பான், சொரியாசிஸ் உள்ளவர்கள் கருஞ்சீரகத்தைப் பொடியாக்கி தேய்த்துக் குளிக்கலாம். இதனால் நோயின் தீவிரம் குறையும்; அதனால் ஏற்பட்ட புண்களும் தழும்புகளும் மறையும்.நீரிழிவு நோயாளிகள், கருஞ்சீரகத்தை சாப்பிட்டு வந்தால், அவர்களின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. நரம்புத் தளர்ச்சியை அடியோடு விரட்டி அடிக்கும் அற்புதமான மருந்தக கருஞ்சீரகம் உள்ளது.கருஞ்சீரகத்தை அடிக்கடி பயன்படுத்தி வந்தால், உடல் சருமத்தில் ஏற்படும், சொறி, சிரங்கு, தேமல் போன்ற சரும வியாதிகளையும், சரிசெய்யும் தன்மை கொண்டது, தோல் நோய்கள் தீரும் மற்றும் சருமத்துக்குப் பளபளப்பூட்டக்கூடியதாகவும் விளங்குகிறது.ஒரு சிறிய சிட்டிகை கருஞ்சீரகத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து காலையிலேயே குடிக்கவும், தினமும் எடுத்தால் மூட்டு வலி, உடல் வீக்கம் மற்றும் உடல் சோர்வு குறையும்.அரை கரண்டி கருஞ்சீரகத்தை தேனுடன் கலந்து இரவு படுக்கும் முன் எடுத்தால் தூக்கம் மேம்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.உணவில் சமைக்கும் போது அரை கரண்டி அளவு கருஞ்சீரகத்தை சேர்த்து பயன்படுத்தினால் செரிமானம் சீராகி வயிறு வீக்கம், வாயுமற்றும் குடல் தொந்தரவு குறையும்.
உணவாகவும், மருந்தாகவும் பயன்படும் பழங்களில் அத்திப்பழமும் ஒன்று. அத்தி பழம் மாதவிடாய் நின்ற பிறகு மார்பகபுற்றுநோய் வருவதைத் தடுக்கும். இதன் காய்களில் இருந்து கிடைக்கும் பாலை வாய்ப்புண்ணில் தடவினால் வாய்ப்புண் ஆறும். மலச்சிக்கல் தீரும். ரத்த விருத்தி ஏற்படும். பித்தம் தணியும். வெள்ளைப்படுதலை தடுக்கும். அத்தி எளிதில் ஜீரணமாவதுடன் கல்லீரல், மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளை நல்ல முறையில் சுறுசுறுப்புடன்செயலாற்றச் செய்கிறது. சிறுநீரகத்தில் கல்லடைப்பு போன்ற தடங்கல்களை அகற்றிச் சிறுநீரைப் பெருக்குகிறது. பெருங்குடலில்ஆங்காங்கே, இறுகிய கழிவுப் பொருட்களை பக்குவப்படுத்தி, இளக்கி, வியர்வையாகவும், சிறுநீராகவும், மலமாகவும் வெளியேற்றி குடலை மிருதுவாகச் செய்கிறது.தினசரி2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம். நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க5பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தை குணமாக்க அத்திப்பழங்களை காடியில்(வினிகர்)ஒரு வாரம்வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப்பிடலாம். தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால், உடல் கொழுக், மொழுக் என்று வளரும். இதில் முழு அளவுஊட்டச்சத்து இருக்கின்றது. இதில் புரோட்டீன், சர்க்கரை சத்து, கால்ஷீயம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் இருப்பதாகவும், மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நாலு மடங்கு அதிகமாக உள்ளது. வைட்டமின்,ஏ.பி.சி.ஈ.கே. நிறைந்தது.உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும்.தோல் நோய்களை தடுக்கும்.அதிக கலோரி உள்ளது.சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது. அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டுவந்தால், வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும். அதைப் பவுடராக்கி பன்னீரில் கலந்து,வெண் புள்ளிகள் மீது பூசலாம்.
லிச்சி பழத்தில் வைட்டமின் சி, பி6, நியாசின், ரிபோபிளவின், போலேட், பொட்டாஷியம், மெக்னீசியம், மாங்கனீஸ் மற்றும் தாமிரம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. மேலும், நார்ச்சத்து, புரதம், 'பாலிபீனாலிக்' கூறுகளும் அதிக அளவில் உள்ளன.லிச்சி பழத்தில், நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், செரிமானப் பிரச்னைகளை போக்கும் தன்மையுடையது. சிறந்த செரிமானத்தின் மூலம்,குடல் இயக்கத்தை மென்மையாக்குகிறது. மலச்சிக்கல் மற்றும் குடல் நோய்களை குறைக்கிறது.லிச்சியில் உள்ள வைட்டமின் சி, சிறந்த ஆக்ஸிஜனேற்றி ஆகவும், வெள்ளை ரத்த அணுக்களின் செயல்பாட்டை சீராக்கவும், கிருமிகளிடமிருந்து உடலை பாதுகாக்கவும் உதவுகிறது. இதனால், புற்றுநோய், இதயநோய், விரைவான வயது மூப்பு போன்ற நோய்களிலிருந்து விடுபடலாம்.லிச்சியில்,'பொட்டாஷியம்' அதிகமாககாணப்படுகிறது.அதனால், உடலில்நீர்சக்தியைசமன் செய்கிறது.உலர்ந்தலிச்சியின்,'பொட்டாஷியம்' அளவு, 'பிரஷ்' லிச்சியை விட, மூன்று மடங்கு அதிகமாக இருக்கும்.லிச்சி பழத்தில்தாமிரம்அதிகஅளவுகாணப்படுகிறது.சிவப்புஅணுக்களின்உற்பத்தியில், பொதுவாகஇரும்புசத்துக்களுடன், தாமிரமும்இணைந்திருக்கும். இதனால், லிச்சியில் தாமிரம் அதிகமாக இருப்பதால், ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் புத்துணர்ச்சி அடையும்.மேலும், உடல் உறுப்புகளுக்கும், செல்களுக்கும் ஆக்ஸிஜன் போதிய அளவு கிடைக்க பெறும்.லிச்சியில், சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதால், நீரிழிவு நோயாளிகள், குறைந்த அளவு உட்கொள்வது நல்லது.
கோவைக்காய் என்பது இந்தியாவில் பரவலாக கிடைக்கும் ஒரு காய் வகையாகும். வாரத்திற்கு ஒரு நாளாவது கோவைக்காயை சமைத்து உண்பது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.கோவைக்காயின் இலைகள், தண்டு, வேர், காய், கனி என அனைத்து பாகங்களும் மருத்து பயன்களை கொண்டுள்ளது. இவை தோல்நோய்கள் ஆகியவற்றை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.கோவைக்காய் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது, இதனால் இன்சுலின் உணர்திறன் மேம்படுகிறது.வாய்ப்புண் குணமாகும். பச்சையாகவே கோவைக்காயை மென்று துப்பிவிட்டாலே வாய்ப்புண் ஆறிடும். ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து மோருடன் அரைத்து குடித்தாலும் மேற்சொன்ன பலன்களை பெறலாம்.இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து செரிமான அமைப்பைச் சீராக்கி, மலச்சிக்கலைத் தடுக்கிறது.இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாத்து, இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த கோவைக்காய், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கப் பெரிதும் உதவுகிறது.எனவே, இந்த எளிய காய்கறியை உங்கள் தினசரி உணவில் ஒரு பகுதியாக சேர்ப்பது மிகவும் புத்திசாலித்தனமான உணவு தேர்வாகும். கோவைக்காயை பொரியல், கூட்டு, சாம்பார் என பலவிதமாக சமைத்து சாப்பிடலாம்.
ஆப்பிள் என்றாலே நமக்கு சிவப்பு ஆப்பிள் தான் ஞாபகத்துக்கு வரும். ஆனால் பச்சை நிறத்தில் உள்ள ஆப்பிள் சாப்பிட்டால் ஏராளமான பலன்கள் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக, எலும்புகளுக்கு வலிமை சேர்க்கும் கால்சியம் பச்சை ஆப்பிளில் அதிகமாக உள்ளது.தினமும் ஒரு பச்சை ஆப்பிள் சாப்பிடுவதால், நுரையீரல் தொடர்பான நோய்கள் ஏற்படாது என்றும் இது கரையக்கூடிய நார்ச்சத்தை உள்ளடக்கியதால், கொழுப்பு அளவை குறைக்க உதவிடும் என்றும் கூறப்படுகிறது.பச்சை ஆப்பிளில் அதிக நார்ச்சத்து இருப்பதால், உடலில் உள்ள நச்சுக்களை நீக்க பயன்படும். இது செரிமான செயல்பாட்டிற்கும் உதவி செய்யும்.பச்சை ஆப்பிளை காலை அல்லது மதிய உணவுக்கு பின்னர் சாப்பிடலாம். ஆனால் இரவில் சாப்பிடுவது சில சமயங்களில் இடையூறுகளை ஏற்படுத்த கூடும்.மேலும், பச்சை ஆப்பிள் சாப்பிடுவதால் ஆஸ்துமா அபாயம் குறையும் என்றும் நோய் தொற்று பரவாமல் தடுக்கும் என்றும் கூறப்படுகிறது.
காலிஃப்ளவர் என்பது சத்துக்கள் நிறைந்த ஒரு வகை காய்கறியாகும். பார்ப்பதற்கு வெண்மையாக இருந்தாலும், இது பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை தன்னகத்தே கொண்டுள்ளது.காலிஃப்ளவரில் வைட்டமின் சி சத்து அதிக அளவில் உள்ளது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி, சளி, காய்ச்சல் போன்ற நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது. இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்து, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் காக்கிறது.காலிஃப்ளவரில் உள்ள குளுக்கோசினோலேட்ஸ் போன்ற தாவர சேர்மங்கள், புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுக்கவும், அவற்றின் வளர்ச்சியை மெதுவாக்கவும் உதவுகின்றன. இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள், இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க உதவுகின்றன. இதனால் இதய நோய்கள் வரும் அபாயம் குறைகிறது. காலிஃப்ளவரை வேகவைத்து, வறுத்து அல்லது குழம்புகளில் சேர்த்து எளிதாக நம் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் உறவினரை பார்க்கச் செல்லும் போது, நாம் வாங்கிச் செல்லும் பழங்களில் சாத்துக்குடிக்கு தான் முதலிடம். அந்த அளவுக்கு ஊட்டச் சத்துக்களை கொண்டது.சாத்துக்குடி.செரிமான மண்டலத்தை தூண்டக் கூடிய, ,'பிளாவனாய்டு' என்றவேதிப்பொருள் இந்த பழத்தில் அதிக அளவில் உள்ளது.இதனால், வயிறு மற்றும்செரிமானக் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு, சாத்துக்குடி சிறந்தது.வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் ஆற்றலும், சாத்துக்குடிக்கு உண்டு. சாத்துக்குடியில், வைட்டமின்,'சி' நிறைவாக உள்ளதால், அதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், அது உடலின் ஒட்டுமொத்த செயல் திறனையும் மேம்படுத்தும். ரத்த ஓட்டம் சீராகும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.சாத்துக்குடியில் உள்ள லெமனாய்டஸ்' என்ற வேதிப்பொருள், பல்வேறு வகையான புற்றுநோய் செல்களுக்கு எதிராக செயல்பட்டு, புற்றுநோய் வராமல் நம் உடலை காப்பாற்றுகிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.வெதுவெதுப்பான நீரில், சாத்துக்குடி சாறு மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வர, உடல் எடை நிச்சயமாக குறைந்து விடும்.கொழுப்பை குறைப்பதுடன், ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கவும் சாத்துக்குடி சிறந்தது.சாத்துக்குடியில் உள்ள, வைட்டமின்,'சி' சத்தானது உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி, நம் சருமத்துக்கு இயற்கை பொலிவைத் தருகிறது. தோல் சுருக்கம் போன்ற சரும பாதிப்புகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.சிறுநீரக பாதிப்பு உள்ளோர், சாத்துக்குடி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
தமிழகத்தின் முக்கிய மரங்களில் வேம்புவும் ஒன்று. இதன் இலை முதல் பட்டை வரை கசப்புத்தன்மை கொண்டவை என்றாலும், வேப்பம் பழங்கள் சற்று இனிப்பு தன்மை உடையவை. மருத்துவ குணங்களையும் கொண்டவை. ஜூன் முதல் ஆகஸ்டு வரையிலான மாதங்களில் பழுத்து உதிரும். இவை, இயற்கையான ரத்தசுத்திகரிப்புமருந்தாகும். தோல் புண்கள் மற்றும் பருக்களை குணப்படுத்துகிறது. உடலில் பல நோய்களை இயற்கையாகவும் வேகமாகவும் குணப்படுத்துகிறது. வேப்பம் பழ விதைகளில் இருந்து எண்ணெய் பெறப்படுகிறது. வேப்ப எண்ணெயில் இயற்கையான பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. குறிப்பாக, முடிகளில் வறட்சியை நீக்கி, சருமம், முகத்தை பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும். வேப்பம் பழங்கள் வலுவான பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளதால், உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது. குறிப்பாக, 'பிளாவனாய்டுகள்' என்ற பொருள் நிறைந்து இருப்பதால், உடலில் புற்றுநோய் உருவாகும் அபாயத்தையும் குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த பழங்களை கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டும் என்று சித்த மருத்துவ குறிப்புகள் கூறுகின்றன.
சிறுநீரக கற்களால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ ஆலோசனையுடன் சில உணவு முறைகளை பின்பற்றினால், கற்கள் கரைய உதவும்.பார்லித் தண்ணீர், இது சிறுநீரக நச்சுகளை நீக்கி, கற்களின் அடர்த்தியைக் குறைத்து அவை சிறுநீர் மூலம் வெளியேற உதவுகிறது. எலுமிச்சை சாறுஇதில் உள்ள சிட்ரேட்டுகள் கற்கள் உருவாவதைத் தடுப்பதுடன், ஏற்கனவே உள்ள கற்களை உடைக்கும் திறனையும் கொண்டுள்ளது. இளநீர் உடலை நீரேற்றத்துடன் வைத்து, சிறுநீரகப் பாதையில் தேவையற்ற தாதுக்கள் படிவதைக் குறைத்து, கற்கள் உருவாகும் அபாயத்தைக் குறைக்கிறது. மாதுளையில் உள்ள ஆண்டிஆக்ஸிடண்டுகள் மற்றும் இயற்கை அமிலங்கள், கற்கள் உருவாகக் காரணமான தாதுக்கள் படிவதைத் தடுக்கின்றன.கொத்தமல்லி இயற்கையாகவே சிறுநீரக செயல்பாட்டை ஊக்குவிக்கும் கூறுகளைக் கொண்டுள்ளது. மேலும் சிறுநீரகங்களில் உள்ள நச்சுக்களை நீக்கவும் செயல்படுகின்றன.சிறுநீரக கற்கள் இருப்பவர்கள் கொத்தமல்லி சாறு தினமும் குடித்து வந்தால் சிறுநீரக கற்களை விரைவில் அகற்றலாம்.தக்காளியில் உள்ள சிட்ரிக் அமிலம் சிறுநீரக கற்கள் பிரச்சனையை போக்க உதவும்.சிறுநீரக கற்கள் இருப்பவர்கள், தக்காளி சாற்றில் உப்பு மற்றும் மிளகு தூள் கலந்து குடிக்கலாம்.தினமும் அதிக தண்ணீர் குடிப்பதும், உணவில் உப்பின் அளவை குறைப்பதும் சிறுநீரகக் கற்கள் உருவாவதை தடுக்க அத்தியாவசியமாகும். இந்த உணவு முறைகளை பின்பற்றுவதற்கு முன் மருத்துவரை அணுகுவது நல்லது.