தேவையான பொருட்கள்:2 பெரிய வெங்காயம்,2தக்காளி,1/4 ஸ்பூன் மஞ்சள்தூள்,1ஸ்பூன் மிளகாய் தூள்,4 சில் தேங்காய்,10 முந்திரி பருப்பு,2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்,2 குடமிளகாய்சிறிதளவுமல்லி இலை,1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது.செய்முறை: முதலில் தேவையான பொருட்களை பக்கத்தில் எடுத்து வைக்கவும்.வெங்காயம் குடமிளகாய்,பேபி கார்ன் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும், அதில் பேபிகார்ன் உப்பு சேர்த்து 5 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.தண்ணிரில் முந்தரிபருப்பை 5நிமிடம் ஊற வைக்கவும்.ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.ஊற வைத்தமுந்தரி பருப்பு அரைத்து கொள்ளவும்.மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ,அதில் வெங்காயம் சேர்த்து நன்றாகவதங்கியதும் ,அதில் தக்காளி விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும்.வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து ,பச்சை வாடை போகும் வரைவதக்கவும்.அதில் மஞ்சள் தூள் மிளகாய்த் தூள் சேர்த்து நன்றாக வதங்கியதும்,நறுக்கியகுடமிளகாய் பேபி கார்ன் சேர்த்து ,நன்றாக வதங்கியதும், அதில் அரைத்த தேங்காய் விழுது,கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.இப்போது சுவையான பேபி கார்ன் குடமிளகாய் குருமா தயார்.
தேவையான பொருட்கள்:1குடைமிளகாய்,2 கைப்பிடிகடலைமாவு,2 கைப்பிடி இட்லிமாவு,2 ஸ்பூன்மிளகாய் பொடி,உப்பு தேவையான அளவு .செய்முறை; ஒரு குடைமிளகாயை எடுத்துக்கொள்ளவும்.எடுத்த குடைமிளகாயை வட்டமாக வெட்டவும்.கடலைமாவு 2 கைப்பிடி, இட்லி மாவு 2 கைப்பிடி, மிளகாய் பொடி 2 ஸ்பூன், உப்பு தேவையானஅளவு போட்டு தண்ணீர் ஊற்றி பிசையவும்.பிசைந்து வைத்துள்ள மாவில் குடைமிளகாயை முக்கி எடுத்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும். குடைமிளகாய் பஜ்ஜி தயார்.
தேவையான பொருட்கள்உருளைக்கிழங்கு - 3 (வேகவைத்து மசித்தது)கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)பீன்ஸ் - 6 முதல் 8 (பொடியாக நறுக்கியது)பச்சை பட்டாணி - 1/2 கப்வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டிபச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டிகரம் மசாலா - 1/2 தேக்கரண்டிசோள மாவு (கார்ன் ஃபிளவர்) - 2 மேஜைக்கரண்டிபிரெட் தூள் (Bread crumbs) - 1 கப்கொத்தமல்லி தழை - சிறிதளவுஉப்பு - தேவையான அளவுஎண்ணெய் - பொரிக்க தேவையான அளவுசெய்முறை-முதலில் கேரட், பீன்ஸ், மற்றும் பச்சை பட்டாணியை சிறிதளவு உப்பு சேர்த்து குக்கரில் 2விசில் விட்டு வேகவைத்துக் கொள்ளவும்.கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய்மற்றும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.வதங்கிய வெங்காயத்துடன் மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் வேகவைத்தகாய்கறிகளைச் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு, வேகவைத்து மசித்தஉருளைக்கிழங்கு, உப்பு மற்றும் கொத்தமல்லி தழையைச் சேர்த்து மசிக்கவும். கலவைகெட்டியானதும் அடுப்பை அணைத்து விடவும்.கைகள் சூடு ஆறியதும், அந்தக் கலவையை சிறிய உருண்டைகளாக எடுத்து உங்களுக்குப்பிடித்த வடிவில் (வட்டமாகவோ அல்லது நீளமாகவோ) தட்டி வைத்துக் கொள்ளவும்.ஒரு சிறிய கிண்ணத்தில் 2 மேஜைக்கரண்டி சோள மாவு (Cornflour) மற்றும் சிறிதளவுதண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். தட்டி வைத்துள்ளகட்லெட்டுகளை இந்த மாவில் முக்கி, பின்பு பிரெட் தூளில் (Breadcrumbs) புரட்டி எடுக்கவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் கட்லெட்டுகளைப் போட்டு, இரண்டு பக்கமும்பொன்னிறமாக மாறும் வரை பொரித்து எடுக்கவும் (ஷாலோ ஃப்ரை அல்லது டீப் ஃப்ரைசெய்யலாம்.இப்போது சுவையான, மொறுமொறுப்பான வெஜிடபிள் கட்லெட் தயார்! இதைதக்காளி சாஸ்(Tomato Ketchup) உடன் பரிமாறலாம்.
தேவையான பொருட்கள்-உருளைக்கிழங்கு - 2 (பெரியது, வேகவைத்து மசித்தது)பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)இஞ்சி-பூண்டு விழுது - 1 தேக்கரண்டிமிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டிகரம் மசாலா - 1/4 தேக்கரண்டிபிரெட் தூள் (Bread crumbs) - 1/2 கப்சோள மாவு (Corn flour) - 1 மேஜைக்கரண்டிகொத்தமல்லி தழை - சிறிதுஉப்பு மற்றும் எண்ணெய் - தேவையான அளவுசெய்முறை-ஒரு பாத்திரத்தில் வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு, வெங்காயம், பச்சை மிளகாய்,இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய் தூள், கரம் மசாலா, கொத்தமல்லி மற்றும் உப்புஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசையவும்.பிசைந்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து, கைகளில் எண்ணெய் தடவிகட்லெட் வடிவமாக (வட்டமாகவோ அல்லது நீளமாகவோ) தட்டிக் கொள்ளவும்.ஒரு சிறிய கிண்ணத்தில் சோள மாவு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்குகரைத்துக் கொள்ளவும்.தட்டி வைத்துள்ள கட்லெட்டுகளை சோள மாவு கலவையில் நனைத்து, பின்னர் பிரெட்தூளில் (Bread crumbs) புரட்டி எடுக்கவும். இது கட்லெட்டை மொறுமொறுப்பாக மாற்றும்.தோசைக் கல்லில் எண்ணெய் ஊற்றி, கட்லெட்டுகளை மிதமான தீயில் வைத்து, இரண்டுபக்கமும் பொன்னிறமாக மாறும் வரை வறுத்து எடுக்கவும். சுவையான உருளை கிழங்குகட்லெட் ரெடி. டீ, காஃபியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்-1 கப் வாழைப்பூ பொடியாக நறுக்கியது,2 உருளைக்கிழங்கு வேகவைத்து மசித்தது,1 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது (அ) 1/2 டீஸ்பூன் மிளகு தூள்,1/4 டீஸ்பூன் சாட் மசாலா தூள்,1வெங்காயம் பொடியாக நறுக்கியது,1/4 டீஸ்பூன் சீரக தூள்,கையளவு கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது,1/2 கப் சோள மாவு கரைசல்,1 கப் பிரட் தூள்,1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது,தேவையான அளவு உப்பு,தேவையான அளவு எண்ணெய்.செய்முறை- முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வாழைப்பூ சேர்த்து சிலநிமிடங்கள் வதக்கி ஆற வைத்து எடுத்து கொள்ளவும்.வதக்கிய வாழைப்பூ உடன் மசித்த உ.கிழங்கு வெங்காயம்,ப.மிளகாய்,மல்லிஇலைசேர்க்கவும்.இஞ்சி பூண்டு விழுது, சீரக தூள் மற்றும் சாட் மசாலா தூள் சேர்க்கவும்.தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.அனைத்தையும் நன்றாக கலந்து எடுத்து கொள்ளவும்.சிறிதளவு எடுத்து வடை போல் தட்டவும்.(விருப்பமெனில் துருவிய சீஸ் யை உள்ளே வைத்து,உருண்டை போலவும் செய்யலாம்.)சோள மாவு கரைசலில் பிரட்டி எடுத்து ,பின் பிரெட் தூளில் பிரட்டி எடுத்து அரை மணி நேரம்பிரிட்ஜில் வைக்கவும்.1 table spoon சோள மாவை அரை கப் தண்ணீர் ஊற்றி, சிறிதளவு உப்பு, சிறிதளவு மிளகுத்தூள்,சேர்த்து கரைத்து கொள்ளவும்.கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் ,கட்லெட்டுகளை போட்டுபொன்னிறமாக வருமளவிற்கு திருப்பி விட்டு எடுத்தால் சுவையான வாழைப்பூ கடலெட் தயார்.
தேவையான பொருட்கள்-1 ப்ரோக்கோலி, 2 உருளைக்கிழங்கு,1 வெங்காயம் பொடியாக நறுக்கியது,1 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது,1/2 டீஸ்பூன் சீரகத்தூள்,1/4 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது,தேவையான அளவுஉப்பு, சோள மாவு கரைசல்,பிரெட் தூள்,சிறிதளவு கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது.செய்முறை -ப்ரோக்கோலியை சில நிமிடங்களுக்கு தண்ணீரில் ஊற வைக்கவும். வேக வைக்ககூடாது.பின் நன்றாக தண்ணீரை வடிகட்டி மசித்து அல்லது துருவி எடுத்துக் கொள்ளவும்.குக்கரில் 2-3 விசில் வரும் வரை உருளைக் கிழங்கினை நன்றாக வேகவிடவும்.பின் நன்றாகமசித்து எடுத்து கொள்ளவும்.மசித்த ப்ரோக்கோலி மற்றும் உ.கிழங்கு வெங்காயம்,ப.மிளகாய்,மல்லிஇலைசேர்க்கவும்.இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். தேவையான அளவு உப்புசேர்க்கவும்.அனைத்தையும் நன்றாக கலந்து எடுத்து கொள்ளவும்.சிறிதளவு எடுத்து வடை போல் தட்டவும்.(விருப்பமெனில் துருவிய சீஸ் யை உள்ளே வைத்துஉருண்டை போலவும் செய்யலாம்.)சோள மாவு கரைசலில் பிரட்டி எடுத்து பின் பிரெட் தூளில் பிரட்டி எடுத்து அரை மணி நேரம்பிரிட்ஜில் வைக்கவும்..(1 table spoon) சோள மாவை அரை கப் தண்ணீர் ஊற்றி சிறிதளவு உப்பு சிறிதளவு மிளகுத்தூள்சேர்த்து கரைத்து கொள்ளவும்.)தோசை கல்லில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் கட்லெட்டுகளை வைக்கவும்.பொன்னிறமாக வருமளவிற்கு திருப்பி விட்டு எடுத்தால் சுவையான ப்ரோக்கோலி கடலெட்தயார். சூடாக பரிமாறவும்.
தேவையான பொருட்கள்--4 உருளை கிழங்கு ,1 கப்வறுத்த சேமியா,1 கப் கார்ன்பிளவர்மாவு,தேவையான அளவு உப்பு,மல்லி தழைய நறுக்கியது ,1ஸ்பூன்சில்லிப்ளக்ஸ்,1 ஸ்பூன்மிளகுதூள் , தேவையான அளவு எண்ணெய் பொரிக்க.செய்முறை உருளைக்கிழங்கைஅவித்துமசித்துக்கொள்ளவும்.அதில்சில்லிப்ளக்ஸ்,மிளகுதூள்,உப்பு,மல்லிதழைநறுக்கியது,கார்ன்ப்ளவர்மாவு,2ஸ்பூன்சேர்த்துநன்குபிசைந்துகட்லெட்போல்பிடித்தடிசைனில்செய்துகொள்ளவும்.பின்ஒருபாத்திரத்தில்கார்ன்ப்ளவர்மாவு+தண்ணீர்,உப்பு,சேர்த்துகட்லெட்'டிப்'பண்ணுகிறபதத்தில்கலந்துவைத்துக்கொள்ளவும்.வறுத்தசேமியாவைதனியாகஒருதட்டில்லேசாகநொறுக்கிவைத்துக்கொள்ளவும்.வாணலியில் எண்ணெய்விட்டுகாய்ந்ததும் உருளைகிழங்கு கட்லெட்டைஎடுத்துகார்ன்பிளவர் மாவு கலவையில் முக்கி பின் சேமியாவில் புரட்டி அப்படியே எண்ணெயில்போட்டு பொன் நிறமானதும் எடுக்கவும். எளிமையான கட்லெட். குழந்தைகளுக்குரொம்பபிடிக்கும். டீ உடன் சேர்த்து சாப்பிட அருமையான ஸ்நாக்ஸ்.
தேவையான பொருட்கள் -பனீர்: 200 கிராம் (துருவியது)உருளைக்கிழங்கு: 2 (வேகவைத்து, மசித்தது)வெங்காயம்: 1 (பொடியாக நறுக்கியது)கேரட்: 1/2 கப் (துருவியது)பச்சை மிளகாய்: 1 (பொடியாக நறுக்கியது)இஞ்சி-பூண்டு விழுது: 1 தேக்கரண்டிமசாலா தூள்: மிளகாய் தூள் 1/2 தேக்கரண்டி, கரம் மசாலா 1/2 தேக்கரண்டி, சாட் மசாலா 1/2தேக்கரண்டிகான்ஃபிளார் மாவு: 2 மேஜைக்கரண்டி (ஒட்டுவதற்கு)பிரெட் தூள் (Breadcrumbs): 1/2 கப்கொத்தமல்லி தழை: சிறிதளவுஎண்ணெய் மற்றும் உப்பு: தேவையான அளவு .செய்முறைஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டுவிழுது சேர்த்து வதக்கவும்.இதனுடன் துருவிய கேரட், மசித்த உருளைக்கிழங்கு மற்றும் தேவையான மசாலாப்பொருட்கள் (மஞ்சள், மிளகாய், கரம் மசாலா, சாட் மசாலா, உப்பு) சேர்த்து குறைந்த தீயில் 2நிமிடங்கள் வதக்கவும்.அடுப்பை அணைத்துவிட்டு, மசாலா கலவை ஆறியவுடன் துருவிய பனீர் மற்றும் கொத்தமல்லிஇலைகளை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.இந்தக் கலவையில் இருந்து சிறிய உருண்டைகளை எடுத்து, உங்களுக்கு பிடித்தமானவடிவத்தில் (வட்டமாகவோ அல்லது தட்டையாகவோ) தட்டி வைத்துக் கொள்ளவும்.கான்ஃபிளார் மாவை சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும். கட்லெட்களை இந்தமாவில் நனைத்து, பிரெட் தூளில் புரட்டி எடுக்கவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கட்லெட்களைப் போட்டு மிதமான தீயில்பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.சுவையான மொறுமொறுப்பான பனீர் கட்லெட் தயார். இதனை தக்காளி சாஸ் (Tomato Ketchup)அல்லது புதினா சட்னியுடன் பரிமாறலாம்.
தேவையான பொருட்கள்-1/4 கப் வாழைப்பழம்1/4 கப் மாம்பழம்1/2கப் மாதுளம் பழம்,2 டேபிள்ஸ்பூன்தேன்செய்முறை- வாழைப்பழம், மாம்பழத்தை நறுக்கிக் கொள்ளவும்.மாதுளை முத்துக்களை எடுத்துக்கொள்ளவும்.பௌலில், மாதுளம் பழத்தை போடவும்.அடுத்து மாம்பழத்தை போடவும்.பிறகு வாழைப்பழத்தை போடவும்.கடைசியாக தேனை விட்டு நன்கு கலந்துக் கொள்ளவும்.இப்போது மிகவும் ஹெல்தியான,* ஃப்ரூட் சாலட்* தயார்.பழங்கள் என்றாலே உடலுக்கு மிகவும் நல்லது.இதை செய்வது மிக சுலபம்.குழந்தைகள் முதல்பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடியது.
தேவையான பொருட்கள்-1. ஒரு கப் பால்2. அரை கப் தண்ணீர்3. 3 டேபிள் ஸ்பூன் சர்க்கரை4. ஒன்றரை டேபிள்ஸ்பூன் கஸ்டர்ட் பவுடர்5. கால் கப் ஆப்பிள்6. கால் கப் திராட்சை7. கால் கப் மாதுளை8. கால் கப் மாம்பழம்9. கால் கப் வாழைப்பழம்10. முந்திரி பாதாம் பொடித்ததுசெய்முறை -தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். சிறிதளவு பால் விட்டு கஸ்டர்ட்பவுடரை கரைத்து வைத்துக் கொள்ளவும்.ஒரு கப் பாலில் அரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும் .பிறகு கரைத்து வைத்துள்ளகஸ்டர்ட் பவுடரை சேர்த்து நன்கு கிளறவும்.கஸ்டர்ட் பவுடர் கலவை ஆறியதும், ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைக்கவும்.பின்னர் கஸ்டர்ட் கலவை, நறுக்கிய பழங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு கலக்கவும்.பழங்கள் கலந்த கலவையை பவுலில் சேர்க்கவும். அதன்மீது வெண்ணிலா ஐஸ் கிரீம் சேர்க்கவும். பின் அலங்கரிக்க பொடித்து வைத்த நட்ஸ்களை தூவவும்.சுவை அதிகம் கூட்ட மாம்பழத்தை மிக்சியில் நைசாக அரைத்து கஸ்டர்ட் கலவையைசேர்க்கலாம். பைனாப்பிள், டூட்டி ஃப்ரூட்டி, பாதாம் சேர்த்து சுவை கூட்டலாம்.