அட்டைக்கு ஆயிரம் கண்ணு, முட்டைக்கு மூணு கண்ணு. அவர்கள் யார்? - கட்டிலும், தேங்காயும் தேடிக் கிடைத்த இறையை, கூடி கூடி உண்பவன். அவன் யார்? - காகம் .
சூரிய ஒளியில் உணவை சமைப்பேன்.சுற்றுச் சூழலைப் பேணிக்காப்பேன்.நான் யார்? - மரம் வெள்ளை மாடு, வாலால் நீர் அருந்தும். அது என்ன? -விளக்கு, திரி.
.வெள்ளத்தில் போகாது, வெந்தணலில் வேகாது, கொள்ளையடிக்க முடியாது. கொடுத்தாலும் குறையாது. அது என்ன? - கல்வி இரவிலே பிறந்த ராஜகுமாரனுக்கு தலையிலே ஒரு குடை. அவன் யார்? காளான் .
பச்சை நிற அழகிக்கு உதட்டு சாயம் பூசாமலே சிவந்த வாய். அவள் யார்? பச்சை கிளி. என் தாயோ கடல், என் தந்தையோ சூரியன், என்னை விரும்பாத வீடே இல்லை. நான் யார்? உப்பு .
.பார்த்தால் கல், பல் பட்டால் நீர். அது என்ன? - பனிக்கட்டி . பல் துலக்க மாட்டான். ஆனால், இவன் பல் எப்பொழுதும் வெள்ளை.இவன் யார்? பூண்டு
ஒளி கொடுக்கும் விளக்கு அல்ல, சூடு கொடுக்கும் தீயல்ல, பளபளக்கும் தங்கம் அல்ல. அது என்ன? - -சூரியன். .கிளை உண்டு, ஆனால் இலை இல்லை.? அது என்ன--மான் கொம்பு .
பிறக்கும் போது வால் உண்டு, இறக்கும் போது வால் இல்லை. அது என்ன? - தவளை. முற்றத்தில் நடப்பான், மூலையில் படுப்பான். அவன் யார்? - துடைப்பான் .
சூடு பட்டு சிவந்தவன், வீடு கட்ட உதவுவான். அவன் யார் ? செங்கல் .வட்ட வட்ட பாய், வாழ்வு தரும் பாய், ஊரெல்லாம் சுற்றும் பாய், ஒவ்வொருவரும் விரும்பும் பாய். அது என்ன பாய் ? ரூபாய்
ஆலமரம் தூங்க, அவனியெல்லாம் தூங்க, ஸ்ரீ ரங்கம் தூங்க, திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை. அவன் யார்? - மூச்சு ஏற்றி வைத்து அணைத்தால் எரியும் வரை மணக்கும். அது என்ன? - ஊதுபத்தி
தொட்டுப் பார்க்கலாம் எட்டிப் பார்க்க முடியாது. அது என்ன? - முதுகு.கலர்ப்பூ கொண்டைக்காரன் காலையில் எழுப்பிவிடுவான். அவன் யார்? - சேவல்