வெள்ளை மாளிகையில் மஞ்சள் புதையல். அது என்ன?---முட்டை.உயிரில்லாதவனுக்கு. உடம்பெல்லாம் நரம்பு. அது என்ன?--பாய்.
சுற்றுவது தெரியாது.ஆனால், சுற்றிக் கொண்டிருப்பான். அவன் யார் ? - பூமி குதிரை ஓட ஓட வால் குறையும். அது என்ன? - ஊசி நூல்
எண்ணெய் குடித்துவிட்டு, ஏழு கடல் தாண்டுவான். அவன் யார்?--விமானம்ஒருவனுக்கு உணவளித்தால், ஊரையே கூட்டுவான்.அவன் யார்?--காகம்
கரைந்து போகுது வெள்ளி தட்டு. அது என்ன? — தேய்பிறை உரச உரச குழைவான், பூச பூச மனப்பான். அவன் யார்? - சந்தனம்
சிறு தூசி விழுந்ததும்,குளமே கலங்கியது அது என்ன?--கண்சட்டையைக் கழற்றினால் சத்துணவு. அது என்ன?—வாழைப்பழம்
வெயிலில் மலரும் காற்றில் உலரும். அது என்ன? - வியர்வைபூமியிலே பிறக்கும்,புகையாய்ப் போகும். அது என்ன? - பெட்ரோல்
அச்சு இல்லாத சக்கரம்,அழகு காட்டும் சக்கரம். அது என்ன? - வளையல்ஒட்டியவன் ஒருத்தன், பிரித்தவன் இன்னொருவன். அது என்ன? - கடிதம்
காலடியில் சுருண்டிருப்பாள். கணீர் என்று குரலிசைப்பாள். அவள் யார்? மெட்டி.குண்டு குள்ளனுக்கு, குடுமி நிமிர்ந்தே இருக்கும். அவன் யார்?--கத்திரிக்காய்
அம்மா படுத்திருக்க, மகள் ஓடித்திரிவாள், அது என்ன? -அம்மி குளவி வயதான பலருக்கு ,புதிதாக ஒரு கை. அது என்ன?- வழுக்கை
அடி மலர்ந்து , நுனி மலராத பூ. அது என்ன? - வாழைப்பூஅடர்ந்த காட்டின் நடுவே, ஒரு பாதை அது என்ன? - தலை வகிடு