உங்களுக்கு மிகவும் பிடித்த நறுமண எண்ணெயின் சில துளிகளை முதலில் தேர்ந்தெடுக்கவும்(எ.கா. லாவெண்டர், எலுமிச்சை அல்லது யூகலிப்டஸ்) அத்துடன் நீர் சேர்த்து ஸ்பிரே பாட்டிலில் நிரப்பித் தெளித்து அறையை புத்துணர்ச்சியூட்டும் வாசனையால் நிரப்பலாம்.உலர்ந்த பூக்கள், மணமுள்ள மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களை ஒரு கிண்ணத்தில் போட்டு கைகளால் நன்கு நசுக்கி அதில் சில துளிகள் நறுமணம் தரும் எண்ணெய்களைச் சேர்க்கவும். இந்தக் கிண்ணத்தை ஒரு அறையின் மூலையில் வைத்து காற்றில் பரவும் நறுமணத்தை அனுபவிக்கலாம்.ஒரு சிறிய கிண்ணத்தில் பேக்கிங் சோடா மற்றும் நறுமனா எண்ணெய்களை கலந்து அறையில் வைத்தால் அக்கலவை காற்றில் பரவும். அது வீட்டின் துர்நாற்றத்தை உறிஞ்சி விடுவதோடு, நல்ல மணத்தையும் பரப்பும். அதன் செயல்திறனை பராமரிக்க அந்தக் கலவையை தொடர்ந்து மாற்றுவது நல்லது அதேபோல, அடுப்புக் கரியையும் ஆங்காங்கே வைத்தால் காற்றில் உள்ள துர்நாற்றத்தை நீக்கலாம்.ஒரு அழகான கண்ணாடி அல்லது பித்தளைப் பாத்திரத்தில் நீர் ஊற்றி அதில் மனதுக்குப் பிடித்த மல்லிகை, ரோஜா, சாமந்தி போன்ற மலர்களின் இதழ்களை பரப்பி வைத்தால் கண்களுக்கு இனிமையாகவும் நாசிக்கு மணமாகவும் இருக்கும்.
அடை செய்யும் போது, காரத்திற்கு மிளகாய் சேர்ப்பதற்கு பதிலாக, இஞ்சி மற்றும் மிளகு சேர்த்தால், சுவையாக இருக்கும்; ஜீரண சக்தியும் அதிகரிக்கும்.பயத்தம்பருப்பு சுண்டல் செய்யும் போது, பயத்தம் பருப்பை வாசனை வரும்படி நன்கு வறுத்து, செய்தால் சுண்டல் உதிரி உதிரியாக வரும்.கோதுமை ரவை உப்புமா செய்யும் போது, தண்ணீர் சேர்ப்பதற்கு பதிலாக, தேங்காய்ப் பால் கொஞ்சம் சேர்த்தால்,ருசியாக இருக்கும்.தயிர் வடை செய்யும் போது, உளுத்தம் பருப்புடன் ஐந்து அல்லது ஆறு முந்திரி பருப்பையும் ஊற வைத்து, அரைத்தால், வடை மிருதுவாகவும், ருசியாகவும் இருக்கும்.சேமியா அல்லது ஜவ்வரிசிப் பாயசம் செய்யும் போது, பாயசத்தை அடுப்பிலிருந்து இறக்கி, சூடு ஆறியதும் பால் மற்றும் சர்க்கரையை சேர்த்தால், பாயசம் நீர்த்துப் போகாமல் இருக்கும்.
பட்டாணியை முதல் நாள் ஊறப் போட மறந்து விட்டால், அவற்றை வாணலியில் எண்ணெய் சேர்க்காமல் நன்றாக வறுத்து, பிறகு குக்கரில் வேக வைத்தால் நன்கு வெந்து விடும். கடலை மாவுக்கு பதிலாக ஒரு பங்கு பச்சரிசியும், ஒரு பங்கு பருப்பும் கலந்து மிக்சியில் அரைத்து உப்பு, மிளகாய்த்தூள் தேவையான அளவு சேர்த்து பஜ்ஜி செய்தால் சுவை கூடும். * கீரையை சமைக்கும் போது ஒரு தேக்கரண்டி சர்க்கரையை சேர்த்தால் சத்து அப்படியே இருக்கும். வெங்காயம் நறுக்கும் போது, கத்தியை லேசாக சூடு செய்துவிட்டு அதன் பின்பு வெங்காயம் நறுக்கி னால் கண்களில் கண்ணீர் வராது. பூரிக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் ,பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும்.
சிறிதளவு வெல்லம்,நெய் உள்ளே போட்டு வைத்து விட்டால் நெய் சீக்கிரம் கெடாமல் இருக்கும். வெங்காயத்தை பிளாஸ்டிக் பைக்குள் போட்டு முதல் நாள் இரவே பிரிட்ஜில் வைத்து விடுங்கள். மறுநாள் காலை நறுக்கினால் கண்ணீர் வராது, தோலும் சுலபமாக உரிக்க வரும். குக்கரில் சாதம் செய்யும் போது அடியில் கட்டி கட்டியாக ஆகிவிடும். அதற்கு குக்கரிலிருந்து எடுத்து ஹாட் பேக்கில் வைத்து விட்டால் சர்தம் பொல பொலவென்று உதிரியாக இருக்கும் கோதுமை மற்றும் அரிசியில் பூச்சி வராமல் இருக்க டப்பாவின் அடியில் வேப்ப இலை, கல் உப்பு சேர்த்து பொட்டலம் கட்டிப்போட்டு வையுங்கள். பூச்சிகள் அண்டாது. பட்டாணியை முதல் நாள் ஊறப் போட மறந்து விட்டால், அவற்றை வாணலியில் எண்ணெய் சேர்க்காமல் நன்றாக வறுத்து, பிறகு குக்கரில் வேக வைத்தால் நன்கு வெந்து விடும்.
பயத்தம்பருப்பை வேகவைத்து, தேவையான அளவு அவலை எடுத்து தண்ணீரில் நன்றாக கழுவி, அரை மணி நேரம் ஊற வைத்து, வாணலியில் நெய், எண்ணெய் விட்டு மிளகு, சீரகம், இஞ்சி, முந்திரி சேர்த்து வதக்கி கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து அதனுடன் வேகவைத்த பயத்தம் பருப்பு, ஊற வைத்த அவல், உப்பு சேர்த்து கிளறி, கெட்டியாக இருந்தால் தண்ணீர் விட்டு குழைவாக கிளறி இறக்கினால், சுவையான அவல் பொங்கல், அரிசி பொங்கலை விட ருசியாக இருக்கும். இதற்கு சாம்பார், சட்னி வைத்து சாப்பிடலாம்.
இட்லி உப்புமாவை தாளிக்கும்போது, இட்லிகளை, அரை மணி நேரம் முன்பே பிரிட்ஜில் வைத்து, பிறகு எடுத்து உப்புமா செய்தால் உதிரி உதிரியாக வரும்.பாகற்காயுடன் உப்பு, மஞ்சள், எலுமிச்சை சாறு, வெல்லம் சேர்த்து 30 நிமிடம் ஊற வைத்து சமைத்தால் பாகற்காயில் கசப்பு தெரியாது.கத்திரிக்காய் கூட்டோ அல்லது பொரியலோ செய்யும்போது சிறிதளவு கடலை மாவைத்தூவி ஐந்து நிமிடம் கழித்து இறக்கினால் சுவையும் மணமும் கூடும்.பருப்பு வடை செய்யும் போது சிறிதளவு இஞ்சித் துருவலை சேர்த் தால் சுவையாக இருக்கும். எளிதில் ஜீரணிக்கும்.வெண்டைக்காய் முற்றி விடாமல் இருக்க காயின் மேல்பகுதி, அடிப்பகு தியை சிறிதளவு நறுக்கி வைத்துக் கொள்ளலாம்.
கேரட் சாதம் சுவையுடன் சத்து நிறைந்துள்ளதாகும். இதை நெய்யோடு சேர்த்து செய்வதால் சுவையும் ,சத்தும் கூடுதலாக கிடைக்கும். அரிசியை குக்கரில் வேகவைத்து ஆறவைத்து, கேரட்டை தோல் சீவி வைத்து, கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு ,உளுத்தம் பருப்பு, சேர்த்து தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கி, மஞ்சள் தூள், சாம்பார் பொடி, கரம் மசாலா பொடி சேர்த்து, துருவிய கேரட்டையும், உப்பு சேர்த்து அது மென்மையாக ஆகும் வரை மூடி வேகவைத்து, பிறகு ஆறிய சாதத்தை கேரட் கலவையுடன் சேர்த்து, மெதுவாக கிளறவும். உப்பு சரி" பார்க்கவும், சுவைக்கு ஏற்ப எலுமிச்சை சாறு சேர்த்து,கொத்தமல்லி இலையை தூவி கிளறினால் சுவையான, அருமையான கேரட் சாதம் சாப்பிட நன்றாக இருக்கும்.
பருப்பு குழம்பு இறுதியாக வெங்காயத்தை நெய்யில் தாளித்து ஊற்றினால் சுவை அதிகரிக்கும். நன்கு வாசனையாக இருக்கும்.வெண்பொங்கலுக்கு நாலு பங்கு பச்சரிசிக்கு, ஒரு பங்கு பாசி பருப்பு என்ற அளவில் தண்ணீர் பங்கும் எடுத்துக் கொண்டால் பொங்கல் பதமாக இருக்கும். வெண்பொங்கலில் மிளகை ஒன்று இரண்டாக உடைத்துப் போட்டால் பொங்கலுடன் இணைந்து தனியாக எடுத்து வைக்க வேண்டி இருக்காது.சுவை அபாரமாக இருக்கும்.ஒரு டீஸ்பூன் உளுத்தம்பருப்பை எண்ணெயில் வறுத்து ஒரு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி தேங்காய் சட்னியில் சேர்க்க சுவையும் மணமும் கூடும்..வத்தக் குழம்பு வைக்கும்போது இறுதியில் சிறிதளவு மஞ்சள் பொடி மற்றும் மிளகு பொடி கலந்தால் மிகவும் சுவையாக இருக்கும்...வத்தக் குழம்புசுவையாக இருக்கும்.
.மிளகு, காய்ந்த மிளகாய், துவரம் பருப்பு, சீரகம் ஆகியவற்றை வறுத்து அரைத்து புளித்த மோருடன் கலந்து கறிவேப்பிலை, கடுகு தாளித்து கொதிக்க வைத்தால் புது விதமான மோர் குழம்பு தயார். குழந்தைகளும் விரும்பி உண்ணும்.உணவுக்கு ஒரு நிறைவான சுவையையும், மென்மையான தன்மையையும் சேர்க்கும். சமையலின் முடிவில் ஒரு ஸ்பூன் நெய் அல்லது வெண்ணெய் சேர்ப்பது சுவையை அதிகரிக்கும்.சோம்பு, புதினா, சின்ன வெங்காயம்,லவங்கம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து மிக்ஸி ஜாரில் அரைத்து, வெஜிடபிள் பிரியாணிக்கு பட்டை, இலவங்கம் ஏலக்காய்,கல்பாசி தாளித்து அதனுடன் அரைத்த இந்த கலவையை சேர்த்து வதக்கி, தக்காளி சேர்த்து செய்யும் போது வாசனை கூடுதலாக கிடைக்கும்.பழைய ஹாட் பாக்ஸ்... பழைய ஹாட் பாக்ஸை தூர எரியாமல் சப்பாத்தி மாவு பிசையவும், காய்கறிகளை கழுவி எடுத்து வைக்கவும் பயன்படுத்தலாம். அதனுடன் சிறிது கோக்கோ பிட் மற்றும் மண் கலந்து புதினா மற்றும் கொத்தமல்லி செடிகளை வளர்க்க பயன்படுத்தலாம். சாத்துக்குடி ஆரஞ்சு பழங்களை தோலுரித்து அதன் சுளைகளை கொட்டை நீக்கி, மிக்ஸியில் ஜூஸர் ஜாரில் போட்டு ஜூஸ் தயாரித்தால் கைகளால் பிழிவதை விட அதிக அளவில் ஜூஸ் கிடைக்கும்.
காலையில் வைத்த சாம்பார் மீதம் ஆகிவிட்டால்,மீண்டும் மாலையில் பயன்படுத்தும் போது சிறிது வெந்தயம் ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி விதை இரண்டையும் வறுத்து பொடி செய்து குழம்பில் சேர்த்து கலந்தால் ஹோட்டல் சாம்பார் போல நல்ல மணமாகவும் ருசியாகவும் இருக்கும். கொஞ்சம் மல்லித்தழை போட்டு இறக்கவும்..கடலை பருப்பை வேக வைத்து கொள்ளவும். பச்சை மிளகாய், தேங்காய் துருவல், தேவையான அளவு உப்பு சேர்த்து, மிக்ஸியில் அரைத்து, வேக வைத்த பருப்பில் நன்கு கலந்து, பின்னர் தாளித்து சாப்பிட்டால், மிகவும் நன்றாக இருக்கும்புளித்த தயிரை வீணாக்காமல், ஒரு டம்ளர் தயிருக்கு, ஒரு டம்ளர் ரவை, இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் மற்றும் கொத்துமல்லி இவற்றை சேர்த்து. ஐந்து நிமிடம் ஊற வைத்து, வடை போல் தட்டி எண்ணெயில் சுட்டு, சூடாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும்கேழ்வரகு மாவுடன், எள்ளும், சிறிது வெல்லமும் சேர்த்து, அடை செய்து சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். தாய்ப்பால் சுரக்காத பெண்களுக்கு, இது நல்ல பலனை தரும்.இட்லிக்கு தேங்காய் சட்னி அரைக்கும் பொழுது பொட்டுக்கடலை தேங்காய் சிறிது வறுத்த வேர்க்கடலை இரண்டு பல் பூண்டு உப்பு பச்சை மிளகாய் சேர்த்து அரைத்தால் சட்னி மிகவும் சுவையாக இருக்கும்.