25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >> நம்மை விட்டுப் பிரிந்த, வாழ்ந்த தெய்வம் டாக்டர். G.ராஜசேகர் (எ) கண்ணாவிற்கு இதய அஞ்சலி ! >> ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில்  ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்ஸவம் . >> ராஜபாளையம் மேலப்பாட்ட கரிசல்குளம் ஊராட்சி இந்திரா நகர் குடியிருப்பு மக்களுக்கு குடிநீர் சப்ளை கலங்கலாக வருவதால் நோய் அச்சத்தில் மக்கள் உள்ளனர். >>


இந்திய சட்டம் சொல்வது

Oct 17, 2024

ஆண் ,பெண்ணுக்குரிய சொத்து விபரங்கள்

ஒரு கணவன் தனக்கு பிள்ளைகள் எதுவும் இல்லாத நிலையில் இறந்து விட்டால், மனைவிக்கு அவருடைய சொத்தில் இருந்து ஆறில் ஒரு பாகம் தான் கிடைக்கும்.அதுவே அவருக்கு பிள்ளைகள் இருந்தால் அவர் விட்டுச் சென்றதில் மனைவிக்கு எட்டில் ஒரு பாகமே கிடைக்கும்.இவையுமே இறந்தவர் கடனோ அல்லது வஸிய்யத்(மரண சாசனமோ) செய்திருந்தால், அதனை நிறைவேற்றிய பின்னரே பிரிக்க வேண்டும்.

May 06, 2024

வாடகை ஒப்பந்தம்

ஒரு வீடு அல்லது ஒரு சொத்தினை நீங்கள் வாடகைக்கு எடுத்து பயன்படுத்துகிறீர்கள் என்றால் , இந்தியாவைப் பொறுத்தவரை அந்த உரிமையாளரிடம் நீங்கள் சட்டப்படி வாடகை ஒப்பந்தம் மேற்கொள்வது அவசியமாகும். இந்த வாடகை ஒப்பந்தம் இருதரப்பிலும் உள்ள அனைத்து நிபந்தனைகளும் இடம்பெற்ற ஒரு சட்டப்பூர்வ ஆவணமாக கருதப்படுகிறது.வாடகை ஒப்பந்தங்கள் நான்கு வகையில் போடப்படுகின்றன. 1. வணிக நோக்கத்துக்காக மேற்கொள்ளப்படும் வாடகை ஒப்பந்தம் , 2. குடியிருப்புகள் 3.தனிப்பட்ட ஒரு அறை , 4. ஒன்றுக்கும் மேற்பட்டோர் ஓரிடத்தை பகிர்ந்து பயன்படுத்துவது. இந்த நான்கு வகைகளில் வாடகை ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. ஆனால் பொதுவாக இந்த மாதிரியான வாடகை ஒப்பந்தங்களின் காலம் என்பது 11 மாதங்கள் மட்டுமே. இதற்கு என்ன காரணம் பார்க்கலாம். நமது அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரிவு 17 பதிவு சட்டம் 1918-இன் படி வாடகை ஒப்பந்தத்தின் காலம் என்பது ஓராண்டுக்கு கீழ் இருந்தால் அதனை பதிவு செய்ய தேவையில்லை. எனவே தான் பொதுவாக இது போன்ற வாடகை ஒப்பந்தங்கள் 11 மாதங்கள் மற்றும் அதற்கு குறைவான காலத்திற்கு மட்டுமே அலைய வேண்டிய தேவை இருக்காது.குறிப்பாக வாடகை ஒப்பந்தத்தை பதிவு செய்வதற்கான பதிவு கட்டணம் நாம் செலவிட வேண்டிய தேவையில்லை. நீண்ட கால அடிப்படையில் நீங்கள் ஒப்பந்தம் போடும்போது அதற்கான பதிவு கட்டணம் அதிகமாக இருக்கும். இதுபோல 11 மாத காலத்திற்கு மட்டுமே ஒப்பந்தங்களை போடும்போது உரிமையாளர்களுக்கு அது சாதகமாக உள்ளது. குறிப்பாக வாடகை உயர்வு மற்றும் வாடகை காலத்தை முடிவுக்கு கொண்டு வருவது ஆகியவற்றுக்கான சுதந்திரம் உரிமையாளர்களுக்கு கிடைக்கிறது. மறுபுறம் வாடகைக்கு குடியிருப்பவர்கள் முத்திரை வரி அல்லது பதிவு செலவுகளை செய்ய வேண்டிய தேவை இருக்காது. ஆனால் நீண்ட கால அடிப்படையில் ஒரு இடத்தை வாடகைக்கு பயன்படுத்தப் போகிறீர்கள் எனில் ஒப்பந்தம் செய்து அதனை முறையாக பதிவு செய்வது இரு தரப்புக்குமே சட்ட ரீதியான பாதுகாப்பை தரக் கூடியது, நல்லது என்கின்றனர் வழக்கறிஞர்கள். 

Mar 27, 2024

விவாகரத்தான ஒரு பெண் மகனுக்கு தன்னுடைய முன்னாள் கணவரின் பூர்வீக சொத்தில் பங்கு இருக்கிறதா?

விவாகரத்தான ஒரு பெண் மகனுக்கு தன்னுடைய முன்னாள் கணவரின் பூர்வீக சொத்தில் பங்கு இருக்கிறதா? என்ற கேள்வி எழுப்பியிருக்கிறார். வாரிசு உரிமை சட்டத்தின்படி பூர்வீக சொத்தில் அனைத்து நேரடி வாரிசுகளுக்குமே பங்கிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் விவாகரத்து ஆகி இருந்தாலும், முன்னாள் கணவர் மற்றொரு பெண்ணை மணந்து அவருக்கு குழந்தைகள் இருந்தாலுமே, இந்தப் பெண்ணின் மகனுக்கு பூர்வீக சொத்தில் உரிமை இருக்கிறது.

Jan 03, 2024

குடும்ப சொத்துக்கள் யாருக்கு கிடைக்கும்

சொத்துக்கள் பிரிப்பது தொடர்பாக இந்தியாவில் தெளிவான சட்டங்கள் இருக்கின்றன ஆனாலும் மக்களுக்கு இதைப் பற்றி தெளிவாக தெரியவில்லை இதனால் தான் நம் நாட்டில் பல சொத்து பிரச்சனைகள் நீதிமன்றங்களில் பல வருடங்களாக நடைபெற்று வருகின்றன எனவே ஒவ்வொருத்தரும் இது குறித்த சட்டங்கள் தெளிவாக தெரிந்துவைத்திருந்தால் நீதிமன்றங்களுக்கு அலைய வேண்டியதில்லை.தாத்தாவின் சொத்து யாருக்கு சொந்தம்.சொத்தை பிரிக்காமல் ஒருவரின் தாத்தா இறந்து விட்டால் அந்த தாத்தாவின் சொத்து முதலில் பேரனுக்கு கிடைக்காது .பேரனின் தகப்பனாருக்கு சேரும் அதன் பிறகு தான் தகப்பனாரிடம் இருந்து மகனுக்கு கிடைக்கும் சில சமயம் தாத்தா இறப்பதற்கு முன்பு பேரனின் தந்தை இறந்து விட்டால், அப்போது தாத்தாவின் சொத்துநேரடியாக பேரனுக்கு கிடைக்கும் இதுதான் சட்டம்.

AD's



More News