SBI LIFE INSURANCE GRAND OPENING RAJAPALAYAM BRANCH Date: 05th December 2025Time: 9.00 am to 10.00 amVenue: Sri Madhava Complex, Ground Floor, 106-A, T.P. Mills Road, Rajapalayam - 626 117.
எழுத்தாளர் திருமதி. ரஜினி பெத்துராஜாவின் நூல்கள் வெளியீட்டு விழா 30.11.2025 ஞாயிற்றுக்கிழமை, காலை 10.00 மணி, ருக்மணிஅம்மாள் அரங்கம் (காந்தி கலைமன்றம்), இராஜபாளையம்.வரவேற்புரை : திரு. P.R.ஸ்ரீதர் ரெங்கராஜா ஆடிட்டர், சென்னை.அறிமுகவுரை & ஏற்புரை எழுத்தாளர் ரஜினி பெத்துராஜாநூல்பெற்று வாழ்த்துரை : எழுத்தாளர் ராஜேஸ்வரி கோதண்டம், கவிஞர் இரா. ஆனந்திஎழுத்தாளர் மதுமிதா திரு. மயில் சுப்பிரமணியம்சரித்திர ஆசிரியர். G.K.N.H.S. பள்ளி கூகலூர், கோபி.விழாவில் கௌரவிக்கப்படுவோர் & வாழ்த்துறைப் போர் : மருத்துவர் கு. கணேசன் & முது முனைவர் V. வெங்கட்ராமன் வரலாற்றுத்துறை எழுத்தாளர் இரா. நரேந்திரகுமார் எழுத்தாளர் கண்மணிராசாதிரு. K. வெங்கட்ரமணன் இயக்குநர், ரிதம் சிறப்புப் பள்ளி, இராஜபாளையம்.நன்றியுரை: திரு. S. வெங்கட்ராமன் தேசிய நல்லாசிரியர், ஸ்ரீவில்லிபுத்தூர். அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
விருதுநகர் மாவட்டம், அழகாபுரி - மீசலூர் சாலையை இணைக்கும் எல்.சி எண்: 410 Rly KM: 544/400-500 என்ற எண்ணுள்ள இரயில்வே இருப்பு பாதையில் உள்ள வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் செய்யப்பட உள்ளது.எனவே 26.11.2025 அன்று காலை 8.00 மணி முதல் மாலை 6.00 வரை பராமரிப்பு பணிகளுக்காக, அந்த ஒரு வழித்தடத்தை மட்டும் மூடுவதாக இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.எனவே, பொதுமக்கள் அனைவரும் மேற்கண்ட வழியை விடுத்து, மாற்று வழியை பயன்படுத்திக் கொள்ளுமாறு இரயில்வே நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
SRI RAO BAHADUR A.K.D. DHARMA RAJA BOYS' HR. SEC. SCHOOL,RAJAPALAIYAM. SPORTS DAY CELEBRATION 22.11.2025, Saturday at 8.30 A.M.Venue: A.K.D. DHARMARAJA WOMEN'S COLLEGEShenbaga Thoppu Road, Rajapalaiyam. ProgrammePrayer : Our StudentsWelcome Address : Mr. K. SARAVANAN ,HeadmasterSri Rao Bahadur A.K.D. Dharma Raja Boys' Hr. Sec. School.Presidential Address : Sri. A.K.D.KRISHNAMA RAJU ,Correspondent Sports Events : AthletesChief Guest's Address: & Prize distribution - Mr. P. SURESH B.A.Southern Railway, Global Sports Academy, ChennaiAnnual Sports Report - Mr. R. MUTHUMANI, Physical Education Teacher.Vote of Thanks : Mr. K. MUTHUKUMA ,Physical Education Teacher.National Anthem : Our Students
வாரணாசி ஸ்ரீ காசி அருள்மிகு விசாலாட்சி அம்மன் திருக்கோயில் ஜீர்ணோதாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நிகழும் மங்களகரமான விஸ்வாசு வருடம் கார்த்திகை மாதம் 15ஆம் தேதி (1.12.2025) திங்கட்கிழமை ஏகாதசி திதியும் ரேவதி நக்ஷத்திரமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 9.30 மணிக்குமேல் 10.30 மணிக்குள் மகர லக்கனத்தில் சுபவேளையில் அருள்மிகு விசாலாட்சி அம்மன் விஸ்வேஸ்வரர் பெருமான்,ஜிர்ணோதாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற உள்ளதால், அது சமயம் பக்தகோடி பெருமக்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு இறையருள் பெற வேண்டுகின்றோம்.
SRI RAO BAHADUR A.K.D. DHARMA RAJA GIRLS' HR. SEC. SCHOOL RAJAPALAYAM ,SPORTS DAY CELEBRATION 21.11.2025, Friday at 8.30 A.M.Venue: A.K.D. DHARMARAJA WOMEN'S COLLEGEShenbaga Thoppu Road, Rajapalaiyam. ProgrammePrayer : Our StudentsWelcome Address : Mrs. K. SHENBAGAVALLIHeadmistress - InchargeSri Rao Bahadur A.K.D. Dharma Raja Girls' Hr. Sec. School.Presidential Address : Sri. A.K.D.KRISHNAMA RAJU (Correspondent)Sports Events : AthletesChief Guest's Address & Prize distribution : Mrs. L. SUJATHA B.A., M.PEd., M.Phil., NIS.,General Manager, Sports Development Authority of Tamilnadu, Jawaharlal Nehru Stadium, Chennai.Annual Sports Report Mrs. S. MALA -Physical DirectorVote of Thanks : Mrs. V. PRIYAPhysical Education TeacherNational Anthem : Our Students
"இயற்கை அழகும்,நல்ல காற்றும்,அமைதியும்,பயமும் கலந்த மலைப்பாதைகளில் நடப்பதில் எனக்கு விருப்பம் அதிகம்"-குறிஞ்சிச் செல்வர்.கொ.மா.கோ.வனப்பு நிறைந்த வனப் பகுதியில் வாழ்கின்ற சூழலில் கொ.மா.கோ. படைத்த இலக்கியங்கள் தமிழ் இலக்கியத்தில் தனி இடம் பெற்றவை.ஆரண்யகாண்டம், ஏலச்சிகரம், குறிஞ்சாம் பூ காட்டுக்குள்ளே இசை விழா - என பல படைப்புகளை வரிசைப்படுத்திக் கொண்டே செல்லலாம். குறிஞ்சி பற்றிப் பேசினாலே பூரித்துப் போகும் மலை நகைக்காரர். இராஜபாளையம் ,இலக்கிய ரசனையும் வாசனையும் மிகுந்த ஊர். இலக்கியம் - எங்கள் செல்வம் என்பதில் அதிகப் பெருமை எங்களுக்கு.இராஜையின் இலக்கிய அன்பரை குறிஞ்சிச் செல்வரைப் போற்றிப் பேச 9.11.25 ஞாயிறு அந்தி மழைப் பொழுதில், அன்புடன் அழைக்கிறோம்.
எதிர்வரும் 30.10.2025 அன்று இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி விழா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதால், விருதுநகர் மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கினை பராமரிக்கும் பொருட்டு இணைப்பில் கண்ட டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், எப்.எல்-2, மற்றும் எப்.எல்-3 உரிமஸ்தலங்கள் ஆகியவற்றில் உள்ள மதுக்கூடங்களில் மதுபான விற்பனை ஏதும் செய்யக்கூடாது. 2003-ம் ஆண்டைய தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணை விதி (1) The Tamil Nadu Liquor (License and Permit) Rules, 1981-ன்படி 30.10.2025 அன்று ஒரு நாள் மட்டும் தற்காலிகமாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேற்படி, உத்தரவினை மீறி செயல்படும் டாஸ்மாக் நிறுவனப் பணியாளர்கள் (F.L-1), F.L-2 மற்றும் F.L-3 மதுபான ஸ்தலங்களின் உரிமதாரர்களின் மீது The Tamil Nadu Liquor (License and Permit) Rules, 1981-ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் 30.10.2025 அன்று நடைபெறவுள்ள தேவர் ஜெயந்தி விழாவிற்கு விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அன்னதானங்கள் வழங்கப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே, அவ்வாறு அமைக்கப்படவுள்ள தற்காலிக அன்னதானங்களின் பொறுப்பாளர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் பெற வேண்டும் மற்றும் பின்வரும் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் முக்கிய நெறிமுறைகளைத் தவறாது பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகின்றது.அன்னதானங்கள் மற்றும் தற்காலிக உணவுக் கடைகள் உள்ளிட்ட அனைத்து வகையான உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் கீழ் https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் தங்களது வணிகத்தினைப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.அதுபோல், அன்னதானத்தில் சமைப்பவர்கள்/கேட்டரிங்க் ஏஜென்ஸி ஆகியோரும், மேற்கூறிய இணையதளத்தில் விண்ணப்பித்து உணவு பாதுகாப்பு பதிவுச் சான்றிதழ்/உரிமம் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு, உணவு பாதுகாப்பு பதிவுச் சான்றிதழ்/உரிமம் பெற்ற கேட்டரிங்க்/சமையல் குழுவினருக்கு மட்டுமே அன்னதானத்தில் உணவு சமைக்க அன்னதானம் ஏற்பாடு செய்பவர்கள் பணி உத்தரவு வழங்க வேண்டும்.இந்தப் பதிவுச் சான்றிதழ் போக, புதிய மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தின் முதல் தளத்தின் அறை எண்: 116 மற்றும் 118-ல் உள்ள நியமன அலுவலர் அலுவலகத்தில், பின்வரும் விபரங்களுடன் அனுமதி கோரி கடிதம் ஒன்றினை, அன்னதானம் ஏற்பாடு செய்பவர்கள் அன்னதானம் நடப்பதற்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும்.அன்னதானம் ஏற்பாடு செய்பவர்களின் தொடர்பு முகவரி மற்றும் அலைபேசி, அன்னதானம் நடைபெறும் இடத்தின் முழு முகவரி, அன்னதானத்தில் ஈடுபடவுள்ள சமைப்பவர் குழு/கேட்டரிங்க் குழுவின் விபரம், அன்னதானத்தில் உணவு சமைக்கவும், நுகர்வோர் அருந்தவும் பயன்படுத்தவுள்ள குடிநீரின் ஆதார நிலை, பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீராக இருந்தால், விநியோகஸ்தர் / உற்பத்தியாளர் விபரம் உள்ளிட்டவைகளை சமர்ப்பிக்க வேண்டும்.கிணறு அல்லது ஆழ்துளைக் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து சமைக்கவும், குடிக்கவும் பயன்படுத்துவதாக இருந்தால், சம்பந்தப்பட்ட உள்ளாட்சியின் அனுமதி மற்றும் தண்ணீர் பகுப்பாய்வறிக்கை, ஊராட்சி/நகராட்சி/மாநகராட்சி போன்ற உள்ளாட்சியின் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரைப் பயன்படுத்துவதாக இருந்தால், அதுகுறித்தான அன்னதானம் ஏற்பாடு செய்பவரின் உறுதிமொழி மட்டும் போதுமானது.சமைப்பவர் குழு/கேட்டரிங்க் குழுவினர் தொற்றுநோய் தாக்கமற்றவர்கள் என்பதிற்கான மருத்துவச்சான்று, உணவு சமைக்கத் தேவைப்படும் பொட்டலமிடப்பட்ட மூல உணவுப் பொருட்களை முழுமையான லேபிள் விபரங்கள் உள்ளதாக கொள்முதல் செய்யவும், அனைத்து மூல உணவுப் பொருட்களையும் உணவு பாதுகாப்பு பதிவுச் சான்றிதழ்ஃஉரிமம் பெற்ற வணிகரிடத்தில் மட்டும் கொள்முதல் செய்யவும் சுய உறுதிமொழிச் சான்று சமர்ப்பிக்க வேண்டும்.உணவு தயாரித்த 2 ½ மணி நேரத்திற்குள் பரிமாறிவிட வேண்டும். மீதமான உணவைப் பரிமாறாமல் அப்புறப்படுத்திடல் வேண்டும்.பால், மீன், இறைச்சி ஆகியவற்றைப் பயன்படுத்துவதாக இருந்தால், அதனை முறையான வெப்பநிலையில் பராமரித்திடல் வேண்டும்.அனைத்து வகையான சமைத்த உணவிலிருந்தும் சராசரியாக 250 கிராம் உணவு மாதிரி எடுத்து, தூய்மையான பாட்டிலில் அடைத்து, குளிர்சாதனப்பெட்டியில் 48 மணி நேரத்திற்குப் பாதுகாத்திடல் வேண்டும்.அன்னதானம் வழங்குவோர், தாம் சமையலுக்குப் பயன்படுத்தும் தண்ணீர் மற்றும் நுகர்வோர்களுக்குக் குடிக்க வழங்கும் தண்ணீர் ஆகியவற்றை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அல்லது பொது சுகாதாரத் துறை பகுப்பாய்வுக் கூடங்களில் பகுப்பாய்வு செய்து பகுப்பாய்வறிக்கை வைத்திருக்க வேண்டும். மேலும், முன் அனுமதி இல்லாமல் தனியார் இடங்களில் உள்ள ஆழ்துளை கிணறு போன்ற நீராதாரங்களில் தண்ணீர் எடுத்து சமையலுக்கும், குடிப்பதற்கும் பயன்படுத்தக்கூடாது.சாப்பாடு, வடை, பஜ்ஜி போன்ற உடனே உண்ணக்கூடிய உணவுப் பொருட்களை சமைத்து விற்பவர்கள் அல்லது உணவுப் பொருட்களை விற்பனை மட்டும் செய்பவர்கள், உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற தரமான மூலப்பொருட்களைக் கொண்டு, ஈக்கள் மற்றும் அசுத்தம் இல்லாத சுகாதரமான சூழலில் அவற்றை தயாரித்து, பாதுகாப்பாக விற்பனை செய்ய வேண்டும்.அனுமதிக்கப்படாத செயற்கை நிறமிகளை உணவுப் பொருட்களில் சேர்க்கக்கூடாது. சமையல் எண்ணெயை ஒருமுறை மட்டுமே பயன்படுத்திடல் வேண்டும். பயன்படுத்தி மீதமான ஆறிய நிலையில் உள்ள எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக்கூடாது. பொட்டலமிடப்பட்ட உணவுப் பொருட்களில் அதன் தயாரிப்பு நாள், காலாவதி நாள், உணவு பாதுகாப்பு உரிமம் எண் உள்ளிட்ட அனைத்து லேபிள் விபரங்களை அவசியம் அச்சிட்டிருக்க வேண்டும்.உணவு தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபடும் அனைத்துப் பணியாளர்களும் டைபாய்டு மற்றும் மஞ்சள்காமாலைக்கு எதிராகத் தடுப்பூசி போட்டுக்கொண்டு, “தொற்றுநோய்த் தாக்கமற்றவர்களாக” இருக்க வேண்டும் என்பதுடன், அவர்கள் கையுறை, முடிக் கவசம் போன்ற பாதுகாப்பு கவசங்களை அணிந்திருக்க வேண்டும்.காலாவதியான பிஸ்கட், குளிர்பானங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட் எந்தவகை பொட்டலமிடப்பட்ட உணவுப் பொருட்களையும் விற்பனை செய்யக்கூடாது. மேலும், கெட்டுப்போன அல்லது பழைய உணவுகளை விற்பனை செய்யக்கூடாது. டைனிங் டேபிள் மற்றும் வளாகத்தினை சுத்தம் செய்யும் நபர்கள் சாப்பாடு பரிமாறக்கூடாது. நீயூஸ் பேப்பர் போன்ற அச்சிட்ட செய்தித்தாள் தடைசெய்யப்பட்ட ப்ளாஸ்டிக் ஆகியவற்றில் உணவுப் பொருட்களை பொட்டலமிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
இன்று 11-10-25, 4ம் சனிக்கிழமையை முன்னிட்டு வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் கருட சேவையை பிரகாஷ் ராஜா மற்றும் சுதர்சனா குடும்பத்தினர் சார்பாக ஏற்பாடு ஆகி உள்ளது.நிகழ்வு மாலை 4.00 PM to 5.30 PM.அனைவரும் கலந்து கொண்டு வெங்கடேச பெருமாள் அருள் பெற அழைக்கிறோம்!!!ஓம் நமோ நாராயணாய!!!