25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விருதுநகர் மாவட்டம் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் சேராத மாணவர்களுக்காக சிறப்பு முகாம் 27.08.2026 அன்று பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கிலும், 28.08.2026 அன்று சிவகாசி நகராட்சி மேல்நிலைப்பள்ளியிலும் நடத்தப்பட உள்ளன.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விருதுநகர் மாவட்டம் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் சேராத மாணவர்களுக்காக சிறப்பு முகாம் 27.08.2026 அன்று பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கிலும், 28.08.2026 அன்று சிவகாசி நகராட்சி மேல்நிலைப்பள்ளியிலும் நடத்தப்பட உள்ளன.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், உயர்கல்வியில் சேராத மாணவர்களுக்காக சிறப்பு முகாம் நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மாவட்டத்தில் பள்ளிப்படிப்பை முடித்த மாணவர்கள், 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தனித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் என அனைத்து மாணவர்களையும் உயர் கல்வியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத 561 மாணவர்கள் மற்றும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 190 மாணவர்கள் உயர்கல்வி, ஐ.டி.ஐ, தொழில்நுட்ப கல்லூரிகளில் சேரவில்லை என கண்டறியப்பட்டுள்ளது. அவர்களை கண்டறிந்து உயர்கல்வியில் சேர்ப்பது தொடர்பாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அந்த வகையில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் சேராத மாணவர்களுக்காக சிறப்பு முகாம் 27.08.2026 அன்று பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கிலும், 28.08.2026 அன்று சிவகாசி நகராட்சி மேல்நிலைப்பள்ளியிலும் நடத்தப்பட உள்ளன.

இந்த சிறப்பு முகாமில், மாணவர்களிடமிருந்து, உயர்கல்வி பயில்வதற்கான சந்தேகங்கள் மற்றும் குறைகளையும் கேட்டறிந்து மாணவர்கள் உயர்கல்வி சேர்வதற்கான வழிமுறைகள் குறித்து எடுத்துக் கூறி, பள்ளிப் படிப்பை நிறைவு செய்த மாணவர்கள் அனைவரும் விடுபடாமல் உயர்கல்வியில் சேருவதை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக, தொழிற்கல்வி படிப்புகளான ITI மற்றும் பல் தொழில்நுட்பக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்த அனைத்துக் கல்லூரி முதல்வர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்டத்தில் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை அதிகரிக்கும் வகையில், அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, தகுதியுள்ள மாணவர்கள் அனைவரும் உயர்கல்வி வாய்ப்புகளைப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இக்கூட்டத்தில், கல்லூரி முதல்வர்கள், தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் பல் தொழில்நுட்பக் கல்லூரிகளின் முதல்வர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News