25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தனியார்துறை  வேலைவாய்ப்பு  முகாம்  28.08.2026  அன்று  நடைபெறவுள்ளது, வேலை நாடுநர்கள் பங்கேற்று  பயன்பெற வேண்டும்  என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்  தகவல்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 28.08.2026 அன்று நடைபெறவுள்ளது, வேலை நாடுநர்கள் பங்கேற்று பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

விருதுநகர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக ஒவ்வொரு மாதமும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டுவருகிறது.

 அதன்படி, படித்த வேலை தேடும் இளைஞர்களுக்காக வரும் 28.08.2026 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் 03.00 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு  முகாம், விருதுநகர்   சூலக்கரையில்  உள்ள,   மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்  தொழில்  நெறி வழிகாட்டும்   மையத்தில்  நடைபெறவுள்ளது.

இத்தனியார்  வேலைவாய்ப்பு   முகாமில்   சமர்தனம் டிரஸ்ட், செபாஸ் மெடிகல், ஃப்ளேர்மேக்செல்,  அடையார் ஆனந்த பவன்,   ஸ்ரீ ராம் மோட்டார்ஸ்  போன்ற    20க்கும் மேற்பட்ட  பிரபல   முன்னணி  நிறுவனங்கள்  கலந்து  கொண்டு  8ஆம் வகுப்பு  தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு,  தொழிற்படிப்பு,  டிப்ளமோ மற்றும் பொறியியல் படிப்பு ஆகிய கல்வித் தகுதி   உடைய  பணியாளர்களை  தெரிவு  செய்யவுள்ளார்கள்.
 

 இந்த   அரிய  வாய்ப்பினை   பயன்படுத்த        விரும்பும்      வேலை நாடுநர்கள் 28.08.2026 அன்று   வேலைவாய்ப்பு  முகாமில்    கலந்து        கொள்வதற்கு முன்பாக தனியார்துறை  வேலைவாய்ப்பு  இணையம்   என்ற  இணையதளத்தில் தங்களது  சுய விவரங்களை  பதிவு   செய்துவிட்டு    சுய   விவரச்     சான்றிதழ்,   அனைத்து கல்விச்சான்றிதழ், ஆதார்      அட்டை நகல்   ஆகியவற்றுடன்    கலந்து  கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 மேலும்  இச்சேவையானது      முற்றிலும்        கட்டணமில்லா  சேவையாகும்.            இம்முகாமில்  கலந்து   கொள்ள        விரும்பும்   தனியார்     துறை நிறுவனங்கள் விருதுநகர்  மாவட்ட வேலைவாய்ப்பு  அலுவலகத்திற்கு  நேரில்   வருகை புரிந்து மாவட்ட வேலைவாய்ப்பு   அலுவலர்       அவர்களை       நேரிலோ   அல்லது    9360171161 என்ற தொலைபேசி  வாயிலாக  தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.             தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது. என  மாவட்ட ஆட்சித்தலைவர்  மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S.. அவர்கள்  தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News