25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


இராஜபாளையம் வட்டம், சிவலிங்காபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இராஜபாளையம் வட்டம், சிவலிங்காபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டம், சிவலிங்காபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில், முப்பெரும் விழா சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் (10.07.2025) நடைபெற்றது.இவ்விழாவில் கடந்த கல்வியாண்டில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

குழந்தைகள் கல்வி கற்பதனால் அந்த குடும்பமே முன்னேற்றம் அடைகிறது. அதோடு நாம் படிக்கும் படிப்பு நமக்கு மட்டுமல்லாமல், அந்த ஊருக்கே பெருமையளிப்பதாக இருக்க வேண்டும்.தமிழ்நாடு அரசு மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட  பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது.மேலும் நல்ல ஒரு சமுதாயம் உருவாக அரசின் செயல்பாடுகளோடு, பொதுமக்கள் மற்றும் சமூகத்தை சார்ந்தவர்கள்; அனைவரின் ஒத்துழைப்போடு நாம் செயல்பட்டால் அது மிகப்பெரிய வளர்ச்சியை உருவாக்கும்.

மாணவர்கள் கல்வி கற்பதோடு மட்டுமல்லாமல் பிற்காலத்தில் கற்றதின் பயனாக தங்களுடைய பெயர் நிலைத்திருக்கும் வகையில் எந்த துறையிலாவது சாதிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், பள்ளி தலைமையாசிரியர், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News