25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >>


ராஜபாளையம் சுற்றியுள்ள ஊராட்சி கிராம பகுதிகளில் அதிகரிக்கும் பிளாஸ்டிக் பயன்பாடு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜபாளையம் சுற்றியுள்ள ஊராட்சி கிராம பகுதிகளில் அதிகரிக்கும் பிளாஸ்டிக் பயன்பாடு

நகர் பகுதியில் உள்ள ராஜபாளையம் சுற்றியுள்ள ஊராட்சி கிராம பகுதிகளில் செயல்படும் ஹோட்டல்கள், தள்ளு வண்டி கடைகள், டீ, இறைச்சி, பூக்கடைகள் என அனைத்து பகுதிகளிலும். ஆரம்பத்தில் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்த போது உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் வாழை இலை உபயோகம், பொருட்கள் வாங்க வருபவர்கள் துணி பை கொண்டு வருவது என மாற்றத்தை காண முடிந்தது. கால் நடைகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் எமனாக உள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கினை கட்டுப் படுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்  என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.  

விவசாய தோப்புகளில்  தாழ்ந்து செல்லும் மின் வயர்களால் விவசாயிகள் கவலை. 

பலரது விவசாய தோப்புகளிலும் மின்வயர்கள் தாழ்ந்த நிலையில் காணப்படுகிறது. மின் வயர்களை உயர்த்தி அமைக்க கோரி சம்பந்தப்பட்ட துறையினரிடம் கோரிக்கை விடுத்தும் பணிகளில் வேகம் இல்லை. குடியிருப்பு பகு திகளில் பிரச்னை எனில் உடனடியாக மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்கும் சூழலில் வனப்பகுதி ஒட்டிய தோப்புகளில் கண்டுகொள்ளாத நிலை ஏற்பட்டுள்ளது. நடவடிக்கை எடுத்தாலும் மிகுந்த தாமதத்துடன் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. 

இந்நிலையில் யானைகள் தொந்தரவு இருக்கும் நேரத்தில் குடிநீர் குழாய் உடைப்பு போன்ற சூழலில் தாழ்ந்து செல்லும் மின்வயர்களால் யானைகள் மீது உரசி பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். மின் வாரியத்தினர் மின் வயர்களை உயர்த்தி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர் . 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News