25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >>


வளைவு விரல் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வளைவு விரல் .

வலது கையில் உள்ள மோதிர விரல் அடிக்கடி மடங்கிப் போய்விடுகிறது. அதை இடது கையை வைத்து நிமிர்த்தினால் பழைய நிலைக்கே வந்துவிடுகிறது. விரல் மடங்கும்பொழுது சற்று வலிக்கிறது. மற்றபடி செய்யும் வேலைகளில் எந்தத் தொந்தரவும் இல்லை. இது எதனால் வருகிறது. இதற்கு  சிகிச்சை முறை.

உங்களுக்கு ஏற்படும் தொல்லை 'வளைவு விரல் தொல்லை என்று சொல்லப்படும். இது எதனால் வருகிறது என்ற காரணம் சரியாகத் தெரியவில்லை. நீரிழிவு மற்றும் முடக்குவாதம் உள்ளவர்களுக்கு இந்தத் தொல்லை வர வாய்ப்பு அதிகம், விரல்களை அதிகமாக மற்றும் அழுத்தமாக உபயோகப்படுத்துபவர்களுக்கு இத்தொல்லை வரலாம். முதுமையில் இத்தொல்லை வர வாய்ப்பு அதிகம்.

அறிகுறிகள்

விரல்கள் சாதாரண நிலையில் இருக்கும் போது வலி ஏதுமிருக்காது. விரல்களை மடக்கி, நீட்டும் போது ஒருசில சத்தத்துடன் வலி ஏற்படும். தொடர் ஓய்வுக்குப் பிறகு விரலை நீட்டிமடக்கும்போது வலி ஏற்படலாம். உதாரணம்: இரவுக்குப் பின் காலையில் இந்த வலி வரலாம். இந்தத் தொல்லை வலது கைவிரல்களில் வந்தால், உணவு உண்ணச் சிரமமாக இருக்கும். முடிந்தால் ஸ்பூன் அல்லது இடது கையில் சாப்பிடலாம்.

சிகிச்சை முறை

வலி அதிகமாக இருப்பின் விரலுக்குச் சற்று ஓய்வு கொடுக்கலாம்.

இயன்முறைச் சிகிச்சை மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

தேவைப்படும்போது வலி நிவாரணியை எடுத்துக்கொள்ளலாம்.

மேற்கண்ட வழிமுறைகளில் பலன் கிடைக்காவிட்டால், விரலின் அடிப்பாகத்தில் ஸ்டீராய்டு ஊசியைப் போட்டுக்கொள்ளலாம். இந்த ஊசியைத் தொடர்ந்து இரண்டு முறைக்கு மேல் போட்டுக்கொள்ளக் கூடாது.ஊசி போட்டும் வலி குறையவில்லை என்றால் அறுவைசிகிச்சைமூலம்நல்லபலன் கிடைக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News