25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விமான விபத்துக்கான காரணங்களை கண்டறிய உதவும் கருப்புப் பெட்டி .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விமான விபத்துக்கான காரணங்களை கண்டறிய உதவும் கருப்புப் பெட்டி .

விமான விபத்துகள் நடைபெற்ற பிறகு அது எப்படி நடந்தது? என்னகாரணம்? போன்ற தகவல்களை அறிந்துகொள்ள உதவுகிற கருப்புப் பெட்டி பற்றி… 

 

விமானத்திற்குள் தகவல்களை சேமிக்கப் பயன்படும் ஒரு தொழில் நுட்பக் கருவி கருப்புப்பெட்டி என்று அழைக்கப்படுகிறது.

 

இது விமானம் விபத்திற்குள்ளாகும் போது அது தொடர்பான காரணங் களை அறிவதற்கும், ஆராய்வதற்கும் பயன்படுகிறது.

 

இக்கருவி விமானத்தின் வால் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும்.

 

இதனை கருப்புப் பெட்டி என்று அழைத்தாலும், செம்மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது. 

 

இதில் இரண்டு பகுதிகள் இருக்கின்றன. ஒன்று, விமானம் தரையிறங்கும் கடைசி 2 மணி நேரத்தில் விமானிகளுக்கும். தரைக்கட்டுப்பாட்டு மையத்துக்கும் இடையே நடக்கும் உரையாடல்களை பதிவு செய்து வைத்திருக்கும்.

 

மற்றொரு பகுதி, விமானத்தின் வேகம், விமானத்தின் பிற கருவிகளின் செயல்பாடு, விமானத்துக்குள் உள்ள காற்றழுத்தம் என கிட்டத்தட்ட 400 வகையான காரணங்களை பதிவு செய்யும்.

 

விமானம் தண்ணீரில் விழுந்தாலும், தீயில் எரிந்தாலும் கருப்புப் பெட்டியில் உள்ள தரவுகள் பாதுகாப்பாக இருக்கும்.

 

இக்கருவி டைட்டானியம் என்ற தனிமத்தால் செய்யப்பட்டது.

 

இந்தக் கருப்புப்பெட்டி, புவி ஈர்ப்பு விசையை விட 3 ஆயிரம் மடங்கு அதிக விசையையும், ஆயிரம் டிகிரி செல்சியஸை விட அதிக வெப்பநிலையையும் தாங்கக் கூடியது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News