25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >>


எச்சரிக்கை பலகை இன்றி  4 வழிச்சாலை ரயில் பாதை மேம்பாலப்பணி விபத்து வாய்ப்பு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

எச்சரிக்கை பலகை இன்றி  4 வழிச்சாலை ரயில் பாதை மேம்பாலப்பணி விபத்து வாய்ப்பு.

திருமங்கலம் - கொல்லம் நான்கு வழிச்சாலை பணியில் ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் அடுத்து முதுகுடி அருகே ரயில் பாதை மேம்பால பணி தொடக்க நிலையில் உள்ளது. இதற்கான மேம்பால பணிகள் நடந்து வரும் நிலையில் நான்கு வழிச்சாலையின் எஸ்.ராமலிங்காபுரம் பிரிவு சர்வீஸ் ரோடு தொடக்கத்தில் எச்சரிக்கை அறிவிப்பு வைக்காமல்  தடையை அமைத்துள்ளனர். 

அட்டை மில் முக்கிலிருந்து ராஜபாளையம் அடுத்த முதுகுடி முன்பு வரை 5 கி.மீ சுலபமாக நான்கு வழிச்சா லையிலேயே பயணிக்கலாம். ஆனால் தற்போது வரை ரயில்வே பாதை மேம்பாலம் முடிவடையாமல் துண்டிக்கப்பட்டுள்ளது.இதை அறியாத கனரக வாகனங்கள் டூவீலர்கள் பாலத்தின் உச்சிவரை வந்து சங்கடத்திற்கு உள்ளாகி திரும்பு கின்றனர். கவனம் இல்லையெனில் தடுப்பை தாண்டி வாகனங்கள் விபத் துக்கு உள்ளாகும் நிலை உள்ளது.மேம்பால சாலை தொடக்கத்திலேயே எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைத்து விபத்துக்களை தடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.       

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News