25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தமிழக அரசு - எல்&டி நிறுவனம் இடையே ₹18,600 கோடி முதலீட்டு ஒப்பந்தம்!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழக அரசு - எல்&டி நிறுவனம் இடையே ₹18,600 கோடி முதலீட்டு ஒப்பந்தம்!

தமிழகத்தில் ₹18,600 கோடி முதலீட்டில் மூன்று முக்கிய திட்டங்களைச் செயல்படுத்தி, 8,200 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் தமிழக அரசுக்கும், லார்சன் & டூப்ரோ (L&T) நிறுவனத்திற்கும் இடையே முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. திரு. விஜய் தலைமையிலான புதிய அரசு பதவியேற்ற பிறகு தொழில்துறையில் கையெழுத்தாகும் முதல் ஒப்பந்தம் இதுவாகும்.

திட்டங்களின் விவரம்:

  • காஞ்சிபுரம்: ₹15,000 கோடி முதலீட்டில் 'ஹைப்பர்ஸ்கேல் மற்றும் எட்ஜ் ஏஐ தரவு மையம்' (500 பேருக்கு வேலைவாய்ப்பு).
  • கோயம்புத்தூர்: ₹2,500 கோடி முதலீட்டில் 'மின்னணு உற்பத்தி மையம்' (2,000 பேருக்கு வேலைவாய்ப்பு).
  • திருவள்ளூர் (காட்டுப்பள்ளி): ₹1,100 கோடி முதலீட்டில் 'கடல் காற்றாலை உள்கட்டமைப்பு' (5,700 பேருக்கு வேலைவாய்ப்பு).

மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கும் இத்திட்டங்கள் உதவும் என அரசு தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வில் தொழில்துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா, எல்&டி நிறுவனத் தலைவர் எஸ். என். சுப்ரமணியன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News