25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ஆசிய கோப்பை: வெற்றியுடன் தொடங்கிய இந்திய மகளிர் அணி!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆசிய கோப்பை: வெற்றியுடன் தொடங்கிய இந்திய மகளிர் அணி!

துபாயில் நடைபெற்று வரும் மகளிருக்கான ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வெற்றியுடன் தனது பயணத்தை தொடங்கியுள்ளது.

நேற்று நடைபெற்ற ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில், ஐசிசி தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள இந்திய அணி, 12-வது இடத்தில் இருக்கும் தாய்லாந்தை எதிர்கொண்டது.

‘டாஸ்’ வென்ற தாய்லாந்து அணியின் கேப்டன் திப்பச்சா புத்தவாங் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 160 ரன்கள் என்ற சவாலான இலக்கை துரத்திய தாய்லாந்து அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 16.1 ஓவர்களில் 65 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதன் மூலம் இந்திய மகளிர் அணி அபார வெற்றியுடன் ஆசிய கோப்பை தொடரை தொடங்கியுள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News