உலக சாம்பியன் ஆனந்த் , கோல்கட்டா செஸ் தொடரில் இரண்டு வெற்றி!
சர்வதேச 'ரேபிட் அண்டு பிளிட்ஸ்' ஓபன் செஸ் *தொடர் கோல்கட்டாவில்,. நடப்பு சாம்பியன் கார்ல்சன் பங்கேற்கவில்லை. இந்தியா சார்பில் ஐந்து முறை உலக சாம்பியன் ஆன ஆனந்த், அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா உள்ளிட்ட 10 பேர் ஓபன் பிரிவில் பங்கேற்கின்றனர்.
நேற்று'ரேபிட்' முறையிலான போட்டி 3 சுற்று நடந்தன. ஆனந்த், அமெரிக்காவின் சோ வெஸ்லேவை சந்தித்து, 40 நகர்த்தலில் வெற்றி பெற்றார். 3வது போட்டியில் ஆனந்த், சக வீரர் கார்த்தி சிதம்பரத்தை வென்றார்.
முதல் 3 சுற்று முடிவில் ஆனந்த் (2.5), அமெரிக்காவின் ஹன்ஸ் மோக் (2.5) முதல்இரு இடத்தில் உள்ளனர். விதித் குஜ்ராத்தி 4 (2.0), நிஹால் சரின் 5 (1.5), பிரக்ஞானந்தா 6 வது (1.5) இடத்தில் உள்ளனர்.
இந்தியாவின் வந்திகா 4 (2.0), ரக்சித்தா தேவி 6 (1.5), ஹரிகா பெண்கள் பிரிவில் ,7வது (1.0) இடங்களில் உள்ளனர். உலக கோப்பை வென்ற இந்தியாவின் திவ்யா, 3 போட் டியில் 2 'டிரா', 1 தோல்வியுடன் 9வது (1.0) இடத்தில் உள்ளார்.வைஷாலி (0.5) கடைசி இடத்தில் (10) உள்ளார்.
0
Leave a Reply