சிவகாசி மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் (16.06.2026) அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
சிவகாசி மாநகராட்சியில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், ரூ.14.97 கோடி மதிப்பீட்டில் இரு தளங்களுடன் கூடிய மாநாட்டு அரங்கம் அமைக்கும் கட்டுமான பணிகளையும்,2022-2023 சிறப்பு நிதியின் கீழ் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும், மாநகராட்சி அலுவலகக் கட்டுமான பணிகளையும்,6-வது மாநில நிதிக் குழு (SFC) நிதியின் கீழ், ரூ.3.7 கோடி மதிப்பீட்டில் சிவகாசி மாநகராட்சியில் புதிய அலுவலகக் கட்டிடத்திற்கான கூடுதல் கட்டுமான பணிகளையும்,15-வது மத்திய நிதிக் குழு (CFC) நிபந்தனையற்ற மானியத்தின் கீழ், ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் சிவகாசி மாநகராட்சி அலுவலகம் மற்றும் வணிக வளாகத்தில் கட்டப்பட்டு வரும் சுற்றுச்சுவர் பணிகளையும்,சிவகாசி மாநகராட்சியில் செயல்பட்டு வரும் நாய்கள் கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பதிவேடுகள் மற்றும் கோப்புகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.இந்நிகழ்வின் போது, மாநகராட்சி ஆணையாளர் திரு.கண்ணன், மாநகர நகர் சுகாதார அலுவலர் திருமதி ஸ்ரீதேவி, மாநகராட்சி பணியாளர்கள், குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply