சுவையான காஞ்சிபுரம் இட்லி.
தேவையான பொருட்கள் -
புழுங்கலரிசி ஒரு கப், பச்சரிசி ஒரு கப். உளுத்தம் பருப்புஒரு கப், நல்லெண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன். சுக்குத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, ஆப்பசோடா ஒரு சிட்டிகை.
தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு -ஒரு டீஸ்பூன். கடலைப் பருப்பு -2 டீஸ்பூன், மிளகு - ஒரு டீஸ்பூன், சீரகம் ஒரு டீஸ்பூன். தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை சிறிது, பெருங்காயம் - அரை டீஸ்பூன், எண்ணெய் -2 டேபிள் ஸ்பூன், இஞ்சி -ஒரு துண்டு.
செய்முறை: அரிசி, பருப்பை ஒன்றாக ஒரு மணி நேரம் ஊறவையுங்கள். ஊறிய பின்னர், நன்கு கழுவி. சற்றுக் கரகரப்பாக அரைத்தெடுங்கள். தேவையான உப்பு சேர்த்துக் கரைத்துப் புளிக்க வையுங்கள். புளித்த மாவில் சுக்குத்தூள். ஆப்பசோடா சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள். நல்லெண்ணெயைக் காய்ச்சி அதில் ஊற்றுங்கள்.
கடாயில் எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து பொன்னிறமானதும், மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாக உடைத்து அதோடு சேருங்கள். இஞ்சியையும் துருவிச் சேருங்கள். அத்துடன் கறிவேப்பிலையையும் சேர்த்து வதக்கிமாவில் சேருங்கள். எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து, மாவை சிறிய கிண்ணங்களில் நிரப்பி, வேகவைத்தெடுங்கள்.
0
Leave a Reply