25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >>


மென்மையான சருமத்திற்கு சந்தனம்மற்றும்தயிர்கலந்தஃபேஸ்பேக்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மென்மையான சருமத்திற்கு சந்தனம்மற்றும்தயிர்கலந்தஃபேஸ்பேக்

தயிரை நாம் முகத்தில் தடவுவதால் சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தையும், மிக சிறந்த பொலிவையும் தயிர் நமக்கு தருகிறது.தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் முகத்தை எப்போதும் பொலிவுடன் வைத்துக்கொள்கிறது.தயிர் முகத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்கி என்றும் பளப்பளப்பான மற்றும் மென்மையான சருமத்தைஅளிக்கிறது.

சந்தனம்(sandalwooduses) ஒரு டேபிள் ஸ்பூன், தயிர் ஒரு டீஸ்பூன், தேன் இவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும்.இந்த ஃபேஸ் பேக்கை முகம் மற்றும் கழுத்து பகுதிகளுக்கு அப்ளை செய்து ஒரு மணி நேரம் வரை முகத்தில் வைத்து.பின்பு சாதாரண தண்ணீரால் முகத்தை கழுவ வேண்டும. இந்த முறையை வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை பயன்படுத்தலாம்.

சந்தனப்(sandalwooduses) பொடியை மஞ்சள் தூள், ஒரு துளி எலுமிச்சை சாறு மற்றும் பால் ஊற்றி கலந்து, சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும்.இதனால் முகமானது பொலிவோடு காணப்படும்.

சந்தனப் பொடியை (sandalwood uses) முல்தானி மெட்டி பவுடருடனும் சேர்த்து ஃபேஸ் பேக் போடலாம்.அதற்கு 1/2 டீஸ்பூன் முல்தானி மெட்டி மற்றும் 1/2 டீஸ்பூன் சந்தனப் பொடியை சேர்த்து, தயிர் ஊற்றி கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

பொதுவாக சந்தன ஃபேஸ் பேக்கில், சந்தனப் பொடியை ரோஸ் வாட்டரில் கலந்து, சருமத்திற்கு தடவி ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் நீங்கி, சருமம் பொலிவோடு காணப்படும்.சந்தன எண்ணெயை முல்தானி மெட்டி பவுடரில் சேர்த்து கலந்து, முகத்திற்கு பயன்படுத்தினால், சருமம் மென்மையாகவும் அழகாகவும் இருக்கும்.சந்தனப் பொடியில்(sandalwooduses) தக்காளியை அரைத்து கலந்து, வேண்டுமெனில் சிறிது முல்தானி மெட்டியையும் சேர்த்து கலந்து, முகத்திற்கு ஃபேஸ் பேக் போடலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News