25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >>


மாயா ராஜேஸ்வரன்  ரேவதி, செர்பியாவின் அனஸ்டா சியா சிவெட்கோவிச் ஜோடி, சாம்பியன்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாயா ராஜேஸ்வரன் ரேவதி, செர்பியாவின் அனஸ்டா சியா சிவெட்கோவிச் ஜோடி, சாம்பியன்.

 பெண்களுக்கான போர்ட் லாடர் டேல் ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர்  அமெரிக்காவின் புளோரிடாவில், (18 வயதுக்கு உட்பட்டோர்) ,இரட்டையர் பிரிவு பைனலில், 'நம்பர்-3' அந்தஸ்து பெற்ற இந்தியாவின் 16 வயது மாயா ரேவதி, செர்பியாவின் அனஸ்டா சியா சிவெட்கோவிச் ஜோடி, 'நம்பர்-5' அந்தஸ்து கொண்ட அமெரிக்காவின் தியா புரோடின், வெல்லஸ் நியூமன் ஜோடியை சந்தித்தது.

 முதல் செட்டை 3-6 ,2வது செட்டை 6-2 என கைப்பற்றியது. வெற்றியாளரை முடிவு செய்ய சூப்பர் டை பிரேக்கர்' நடந்தது.. முடிவில் மாயா ஜோடி 3-6, 6-2, 10-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் கோப்பை வென்றார்.

அமெரிக்காவின் அனிதா டுவிடம் ,ஒற்றையர் பிரிவில் பங்கேற்ற மாயா, முதல் சுற்றில் 0-6, 3-6 என   தோல்வியடைந்தார்.

சர்வதேச ஜூனியர் டென்னிஸ் தரவரிசையில் மாயா இரட்டையரில் கோப்பை வென்றதை அடுத்து,  38வது இடத்துக்கு முன்னேறினார்.

15 வயதான தமிழக டென்னிஸ் வீராங்கனை மாயா ராஜேஸ்வரன் ரேவதி தற்போது சர்வதேச அளவிலான போட்டிகளில் அபாரமாக செயல்பட்டு வருகிறார். டெல்லியில் நடைபெற்று வரும் ஐடிஎப் ஜே 300 டென்னிஸ் போட்டியில் மாயா தற்போது வெற்றி பெற்று, சாம்பியன் கோப்பை வென்றார்.களத்தில் ஆக்ரோஷமாக ஷாட்களை விளையாடி எதிரணி வீராங்கனைகளை மாயா அபாரமாக வீழ்த்தி வருகிறார். கோவையில் பிறந்து வளர்ந்து தற்போது ஸ்பெயினில் உள்ள ரஃபேல் நடால், டென்னிஸ் அகாடமிவில் மாயா பயிற்சி செய்து வருகிறார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News