ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி.
ராஜபாளையம் மேற்குதொடர்ச்சி மலை அய்யனார் கோவில் விருதுநகர் மாவட்டம் ஆற்று பகுதியில்,உள்ள நீராவி முள்ளிக்கடவு, மாவரசி அம்மன் கோவில், பிராவடியார், மற்றும் கோட்டை மலை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்து மலையடிவாரத்தில் உள்ள அய்யனார் கோவில் ஆற்றில் தற்போது தண்ணீர்வரத்து அதிகரித்துள்ளது.
மலைப்பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவ தால் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பியது. அதேபோல 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவின் பேரில் நகராட்சி ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் மூலம் நகராட்சிக்கு சொந்தமான குடிநீர் தேக்கங்களும் நிரம்பின. ஆதலால் மருங்கூர் கண்மாய், ஆதியூர் கண்மாய், பிரண்டை கண்மாய், புளியங்குளம் கண்மாய் உள்ளிட்ட கண்மாய் குளம்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
0
Leave a Reply