25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >>


பிரதமரின் கௌரவ நிதித் தொகை(PMKISAN) பெற்று வரும் நில உடைமை பதிவு செய்யாத  விவசாயிகள் 19.12.2025 அன்று நடைபெறும் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்ட முகாம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பிரதமரின் கௌரவ நிதித் தொகை(PMKISAN) பெற்று வரும் நில உடைமை பதிவு செய்யாத  விவசாயிகள் 19.12.2025 அன்று நடைபெறும் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்ட முகாம்.

வேளாண்மை உழவர் நலத் துறையால் செயல்படுத்தப்படும் அனைத்து மத்திய, மாநில அரசு திட்டங்களுக்கும், விவசாயிகளுக்கான பிரதமரின் கௌரவ நிதித் தொகை(PMKISAN) பெறுவதற்கும் நில உடைமை பதிவு எண் கட்டாயமானதாகும்.தற்பொழுது, விவசாயிகளுக்கான பிரதமரின் கௌரவ நிதித் தொகை (PMKISAN) பெறும் விவசாயிகள், தங்கள் நில உடைமை விபரங்களை உடனடியாக பதிவு செய்யாவிட்டால் அடுத்த தவணை கிடைக்கப்பெறாது.எனவே, விவசாயிகளுக்கான பிரதமரின் கௌரவ நிதித் தொகை (PMKISAN) பெறுவதற்கு, நில உடைமைகளை பதிவு செய்யாத 10115 விவசாயிகள், உடனடியாக அருகில் உள்ள பொது சேவை மையங்களிலும் பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

                விருதுநகர் மாவட்டத்தில் 10115 விவசாயிகள் நில உடைமைகளை பதிவுகளை மேற்கொள்ளாமல் உள்ளனர். விவசாயிகளுக்கான பிரதமரின் கௌரவ நிதித் தொகை(PMKISAN) பெறுவதற்கு இதுவரை நில உடைமைகளை பதிவு செய்யாத விவசாயிகள் தங்கள் நில ஆவணங்களான பட்டா, ஆதார் மற்றும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண் கொண்டு நில உடைமைகளை விடுதலின்றி 19.12.2025 அன்று நடைபெறும் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நடைபெறவுள்ள சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது. விவசாயிகள் நில உடைமைகளை பதிவு செய்து அடையாள எண் பெற்றால் மட்டுமே மத்திய,மாநில அரசு திட்டங்களில் பயன்பெற இயலும்.விவசாயிகள் 19.12.2025 அன்று நடைபெறும் நில உடைமை பதிவுக்கான சிறப்பு முகாமில் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசு மானியத் திட்டங்களில் பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.என். ஓ.சுகபுத்ரா, I A S,.அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.  

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News