இருக்கண்குடி அருள்மிகு மாரியம்மன் கோவில் திருவிழாவினை முன்னிட்டு 14.08.2026 அன்று மட்டும் நென்மேனி கிராமத்தில் இயங்கும் மதுபான கடையை மூடுவதற்கு உத்தரவிடப்படுகிறது.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம் இருக்கண்குடி அருள்மிகு மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற உள்ளது. இதன்காரணமக நென்மேனி கிராமத்தில் இயங்கிவரும் டாஸ்மாக் கடை எண் 11978 -யை மட்டும் 14.08.2026 (வெள்ளிக்கிழமை) அன்று (ஒருநாள் மட்டும்) தற்காலிகமாக மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்து.
மேற்படி உத்தரவினை மீறி செயல்படும் டாஸ்மாக் நிறுவனப் பணியாளர்கள் மீது Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981 நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S ., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply