குளோபல் செஸ் தொடரில் இனியன் அசத்தல்; சாம்பியன் பட்டம் வென்று சாதனை.
மும்பையில் நடைபெற்ற குளோபல் செஸ் தொடரின் 9வது சீசனில் இந்திய கிராண்ட் மாஸ்டர் இனியன் சாம்பியன் பட்டத்தை வென்றார். 16 நாடுகளைச் சேர்ந்த 56 வீரர்கள் பங்கேற்ற இந்த தொடரில், 13 கிராண்ட் மாஸ்டர்கள் மற்றும் 33 சர்வதேச மாஸ்டர்கள் களமிறங்கினர்.
உலகின் முன்னணி வீரர்களான பெலாரஸின் அலெக்சி பெடெரோவ் மற்றும் ரஷ்யாவின் போரிஸ் செவ்சென்கோ ஆகியோரை வீழ்த்திய இனியன், 9 சுற்றுகள் முடிவில் 7.5 புள்ளிகள் (6 வெற்றி, 3 டிரா) பெற்று முதலிடம் பிடித்தார். ரஷ்யாவின் போரிஸ் செவ்சென்கோ இரண்டாவது இடத்தையும், இந்தியாவின் அஜய் சந்தோஷ் மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.
0
Leave a Reply