சீனாவில் கொசுவை கொல்ல உருவாக்கப்பட்ட’ பாட்டான் மேட்சிக்ஸ் ‘ என்ற கருவி .
சீனாவில் உருவாக்கப்பட்ட' பாட்டான் மேட்சிக்ஸ்' என்ற கருவி,கொசுவை குறிவைத்துக் கொல்வதற்காகவே உரு வாக்கப்பட்டது. இந்தக் கருவி, லிடார் (MR) உணரிகள் மூலம். பறக்கும் கொசுவின் அளவு, துரம், மற்றும் திசை ஆகியவற்றை மூன்று மில்லி விநாடி களுக்குள் கண்டறியும். பிறகு ஒரு சிறப்பு லேசர் கற்றையை செலுத்தி, ஒரே நொடியில் 30 கொசுக்கள் வரை அழித்துவிடும்.இதில் இருக்கும் லேசர், மிகத் துல்லியமாக கொசுக்களை கட்டுப்படுத்துவதில் ஒரு புரட்சியை ஏற்படுத்த உள்ளது.
மனிதர்களுக்கு ஆபத் தில்லாதது என்ற தரச் சான்று பெற்ற இந்தக் கருவி, நீர்ப்புகாதபடி, வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே இதை வீட்டிற்குள் மட்டுமல்ல. வெளியேயும் நிறுவமுடியும். இதன் அடிப்படை மாடல், 3 மீட்டர் துாரம் வரையிலும், ப்ரோ மாடல் 6 மீட்டர் தூரம் வரையிலும் கொசுக்களை தாக்கும். இதன் விலை ரூ. 40,102 முதல் ரூ. 53,898 ரூபாய் வரை இருக்கும்.
மனிதர்கள் அல்லது செல்லப்பிராணிகளுக்கு அருகில் லேசர் பாய்வதைத் தடுக்க ஒரு ரேடார் பாதுகாப்பு அமைப்பு இதில் பொருத்தப்பட்டுள்ளது.ஆனாலும், இந்த லேசரின் சக்தி மற்றும் பாதுகாப்பு சான்றிதழ்கள் குறித்து சில விமர்சனங் கள் இருக்கவே செய்கின்றன. இந்தக் கருவி பாதுகாப்பானது என நிரூபிக்கப்பட்டால், கொசுக்களுக்கு எதிராக ஒரு புதிய ஆயுதம் நமக்குக் கிடைக்கும்.
0
Leave a Reply