25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


திருமணத்தை எளிமையாக பதிவிட்டு ரூ.10,000 கோடி நன்கொடை வழங்கிய கவுதம் அதானி   ..
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

திருமணத்தை எளிமையாக பதிவிட்டு ரூ.10,000 கோடி நன்கொடை வழங்கிய கவுதம் அதானி ..

 கவுதம் அதானி இளைய மகனும் ,அதானி ஏர்போர்ட்ஸ் இயக்குநருமான ஜீத் அதானி, வைர வியாபாரி ஜெய்மின் ஷா  மகள் திவாவுக்கும் ,அகமதாபாத்தில் கடந்த 7-ம் தேதி திருமணம் நடந்தது.

இது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதள வெளியிட்ட பக்கத்தில் கவுதம் அதானி, 'ஜீத் - திவா திருமணம் பாரம்பரிய முறைப் படி, ஜெயின் மற்றும் குஜராத்தி சமூகங்களின் கலாசாரத்தின்படி திருமண சடங்குகள் ,ஆமதாபாதில் நடந்து முடிந்தது.

இது ஒரு தனிப்பட்ட நிகழ்வு என்பதால் அனைவரையும் அழைக்க முடியவில்லை.'இதனால்,மன்னிப்பு கோருகிறேன். அனைவரின் உங்கள் அன்பும், ஆசீர்வாதமும் மணமக்களுக்கு வேண்டும் என, குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில், நன்கொடையாக வழங்கப்படும் இந்த பணம், சமூகத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் விலையில் மலிவு உலகத் தரம் வாய்ந்த மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லுாரிகள் அமைக்க செலவிடப்படும்.

'இது தவிர, மலிவு விலையில் உயர்மட்ட கே 12 பள்ளிகள் மற்றும் வேலைவாய்ப்புடன் மேம்பட்ட உலகளாவிய திறன் அகாடமிகளின் வலையமைப்பை அணுகுவதில் கவனம் செலுத்தப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 .திருமணத்தை முன்னிட்டு, பல்வேறு சமூகநலப் பணிகளுக்காக ரூ.10 ஆயிரம் கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார்மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள், திறன் மேம்பாட்டு மையங்கள் கட்டுவதற்காக ஆண்டுதோறும் திருமணமான 500 மாற்றுத் திறனாளி பெண்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி ஆகியவை அடங்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News