காபி வகைகளின் தாயகமாக காபியை உலகுக்கு அளித்த எத்தியோப்பியா.
காபி எத்தியோப்பியா நாட்டில் இருந்து வந்தது. ஆடு மேய்த்த ஒருவர். சில ஆடுகள் ஒரு செடியின் பழங்களை உண்ணும் போது. மிகவும் புத்துணர் வோடு இருந்ததை பார்த்து அவரும் அந்த செடியின் பழங்களை சாப்பிட்டார். தனக்கும் ஒரு வகை புத்துணர்வு உடலில் தோன்றியதை அனுபவித்துவிட்டு அதனை மற்ற அனைவருக்கும் தெரிவித்தார்.இப்படியாக எத்தியோப்பியா முழுவதும் கமகமக்கும் காபி பரவியது. காலை எழுந்தவுடன் ஒரு கப் காபி இல்லாமல் ஏராளமானோருக்கு நாள் தொடங்காது.
அருகில் உள்ள ஏமன் நாட்டிலும் காபி அறிமுகம் ஆகியது. குறிப்பாக ஏமன்நாட்டின் மோக்கா துறைமுகம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிகளில் இரவு முழுவதும்விழித்திருந்து தியானம் செய்தவர்கள் தொடர்ந்து புத்துணர்வுடன் இருக்கஅவ்வப்போது அவர்களுக்கு காபி பரிமாறப்பட் டது.
17-ம் நூற்றாண்டில், ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகளில் பரவி அங்கு முக்கியபானமாக மாறியது. ஐரோப்பிய மக்கள் சந்தித்து பேசும் இடங்கள், 'காபி ஹவுஸ்' என்ற பெயரில் பிரபலம் அடைந்தன.
ஆங்கிலேயர்கள் பல்வேறு நாடுகளுக்கு சென்று நாடு பிடித்து காலனிகளாக மாற்றியபோது ,அந்த நாடுகளிலும் காபியை பயிரிட செய்து அறிமுகம் செய்தனர். அந்த வகையில் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் காபி அறிமுகம் ஆகி, இன்று உலகின்அனைத்து நாடுகளிலும் காபி கோலோச்சி வருகிறது .. இவற்றில், குறிப்பிட்டமண்ணில் விளையும் சிடாமா,யிர்காசெபி, கிரேட் ரிப்ட், லிமு, ஹரார், ஜிம்மா, குஜி போன்றவை தனித்த சுவை, மணம் கொண்ட காபிகளாக அறியப்படுகின்றன.
0
Leave a Reply