25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


மனித இனம் தனது வேலைகளை எளிதாக்க வசதியாக, மனிதனுக்கு உதவிய கழுதைகள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மனித இனம் தனது வேலைகளை எளிதாக்க வசதியாக, மனிதனுக்கு உதவிய கழுதைகள்.

 "காடுகளில் வேட்டையாடி உணவு தேடிய மனித இனம் தனது வேலைகளை எளிதாக்க வசதியாக மனிதனுக்கு உதவியாக சில விலங்குகளையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டான். அதில், மனிதனையும், மனிதனின் உடைமைகளையும் ஊர் ஊராக தூக்கி சுமந்த கழுதைகளின் வரலாறு மிகப்பழமையானது. கழுதைகள் மதிப்பு மிக்க ஒரு விலங்காக இருந்தன .பண்டைய காலத்து நாகரிகங்களில் குதிரைகளை பழக்கும் முன்பு, நாட்டின்ஆட்சியாளர்கள் கழுதைகள் மீது அமர்ந்து நகர் வலம் வந்தனர் .கழுதைகள் பூட்டிய வண்டிகளில் பயணித்தனர். கழுதைகள்இந்த உலகத்தில் எப்படி வந்தன என்று அதன் மரபணுவை விஞ்ஞானிகள் ஆராய்ச்சிசெய்தனர். 

கி.மு.3000-ம் ஆண்டில் இருந்தே கழுதைகள் மனிதனுடன் இருந்ததாக தொல்பொருள் ஆராய்ச்சிகள் மூலம் அறியப்படுகின்றன. இன்றைய கழுதைகள் ஆப்பிரிக்க கழுதையின் இரண்டு கிளை இனங்களில் ஒன்றான ஈக்வஸ் ஆப்ரிகானஸ்' என்ற குடும்பத்தை சேர்ந்த நுபியன் கழுதை வகை ஆகும் என கண்ட றிந்தனர்.. பண்டைய எகிப்திய மன்னருடன் புதைக்கப்பட்ட கழுதைகளின் எலும்புக்கூடு புதை படிமத்தில் இருந்து இது தெரியவந்தது. கழுதையின் உழைப்பு இன்றும் தொடர்வதற்கு ஆதாரமாக சகாரா பாலைவனம் வழியாக பயணிக்கும் நாடோடி மக்கள் இன்றும் கழுதைகளை பயன்படுத்தி வருகின்றனர்.

 கி.மு. 200-ம் ஆண்டு முதலே ரோமானியராணுவத்தால் ,ராணுவத்திற்கு மிக முக்கியமான வேலை செய்யும் விலங்குகளாக ,கனரக பீரங்கி வண்டிகளைஇழுக்க கழுதைகள்  பயன்படுத்தப்பட்டன. பேரரசர் அகஸ்டஸ் காலத்தில் ரோமானிய ராணுவத்தில் அரை மில்லியன் கழுதைகள் பணியாற்றின என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மலைப்பகுதி கிராமங்களில் சுமை இழுக்க கழுதைகள்  இன்றும் கூட அனைத்து நாட்டிலும் புழக்கத்தில் உள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News