பிளாஸ்டிக் மறுசுழற்சியைக் குறைந்த செலவில் சுலபமாகச் செய்ய….
பல்வகை பிளாஸ்டிக்கு களும் கழிவுகளில் கலந்திருப்பதால்.அன்றாடம் உற்பத்தியாகும் பிளாஸ்டிக் கழிவுகளில் மிகக் குறைந்த சதவீதம் தான் மறுசுழற்சி செய்யப்படுகிறது. இவற்றைப்பிரிக்காமல் மறுசுழற்சி செய்வதில் பல சிக்கல்கள் உள்ளன . அமெரிக்காவின் இல்லினாய்ஸ் நார்த் வெஸ்ட் பல்கலை ஆராய்ச்சியாளர்கள் கழிவுகளைப் பிரிக்காமலேயே மறுசுழற்சி செய்யும் முறையை கண்டறிந்துள்ளனர்.
குப்பை போடும் பைகள், பிளாஸ்டிக் கவர்கள், தண்ணீர் பாட்டில்கள் ஆகியவைஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பாலியோ லிஃபின்பிளாஸ்டிக்கால்ஆனவை.நிக்கல் அடிப்படையிலானவினையூக்கிகொண்டுஇவற்றைத்எண்ணெய்யாகவும், மெழுகாகவும் மாற்றி எரிபொருளாகப் பயன்படுத் தலாம் என்றுஆய்வாளர்கள்கண்டறிந்துள்ளனர்.
பிளாஸ்டிக் மறுசுழற்சியைக் குறைந்த செலவில் சுலபமாகச் செய்ய, இந்த வினையூக்கி குறைந்த வெப்ப நிலையில் செயல்படும். இந்த வேதிவினைக்குக் குறைந்த அளவு ஹைட்ரஜன் வாயுவே போதுமானது. அடுத்த சில பத்தாண்டுகளில் பிளாஸ்டிக்கின் அளவு கணிசமாக அதிகரிக்கும் என்று கணிக்கப்படுகிறது. 2020ல் 46.4 கோடி டன்பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்பட்டது. 2050ல் இது 88.4 கோடி டன்னாக உயரும்.எனவே, இந்த ஆய்வுக்குழு கண்டறிந்த வினையூக்கி விரைவில் உலக அளவில் பிரபலமாகும் என்று எதிர்பார்க்கலாம்.
0
Leave a Reply