கட்டுமானத்தில் கடல் பாசி .
வெறுமனே மண்ணில் புதைக்கப்பட்டு வீணாகும் இந்தப் பாசிகளை பயனுள்ள வகையில் உபயோகம் செய்யப் பல விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர். 2022ல், இந்திய தொழில்நுட்பக் கழக (ஐ.ஐ.டி) விஞ்ஞானிகள் பாசிகளிலிருந்து சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை ஒலித்தடுப்புத் தகடுகளை உருவாக்கினர். தற்போது, 'ஜர்னல் ஆப் மெட்டீரியல்ஸ் இன் சிவில் இன்ஜினியரிங் என்ற ஆய்விதழில் வெளியான ஒரு புதிய ஆய்வு, இந்தக் கடல் பாசிகளைக் கொண்டு எதிர்காலத்தில் சுற்று சூழலுக்கு உகந்த கட்டுமானப் பொருட் களை உருவாக்கலாம் எனக் கூறுகிறது.
கடல் பாசியைக் களி மண்ணுடன் கலக்கும்போது அது இலகுவாகவும், சுற்றுச் சூழலுக்கு உகந்ததாகவும், வெப்பத்தை தடுக்கும் தன்மையுடனும் மாறுவதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இந்தப் பாசி கலந்த களிமண்ணை கான்கி ரீட்டில் பயன்படுத்தி, அதன் எடையைக் குறைக்கலாம்.அத்துடன் சிமென்ட் தயாரிப் பில் சுண்ணாம்புக்கல்லுக்கு மாற்றாகப் பாசி சாம்பலைப் பயன்படுத்தலாம் என்றும் கண்டறிந்துள்ளனர்.
துர்நாற்றம் வீசுகின்ற, விஷத்தன்மை கொண்ட இந்தப் பாசி அழுகும்போது, அமோனியா, மீத்தேன் போன்ற வாயுக்களை வெளியிடுகிறது. இதனால் கடல் வாழ் உயிரினங்களுக்குக் கேடு விளைகிறது. மீன்பிடித் தொழிலும், சுற்றுலாத் துறையும் பாதிக்கப்படுகின்றன.
இந்தப் புதிய கட்டுமானப் பொருட்கள் வழக்கமான கட்டுமானப் பொருட்களை விட சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பானவை என்று ஆய்வில்தெரியவந்துள்ளது. இந்த கண்டுபிடிப்பு, வெப்பமண்டல கடற்கரைகளில் கடல் பாசிகளால் ஏற்படும்பிரச்சனைக்கு ஒரு தீர்வாக அமையும்.
0
Leave a Reply