25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >>


இளமையான தோற்றம் பெற  மாதுளை பழ  JUICE
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இளமையான தோற்றம் பெற மாதுளை பழ JUICE

மாதுளை பழச்சாறை தினமும் குடித்து வந்தால், கொலஸ்டிரால் மற்றும் உயர் ரத்த அழுத்தம் குறையும். இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி,BPயை சீராக வைக்க உதவும்.கொலஸ்டிரால் மற்றும்BP குறையும்.மாதுளையில் ஆன்டிஆக்சிடன்ட் அதிகம் உள்ளது. இது சரும செல்களுக்கு மட்டுமில்லாமல், உடலில் செல்கள் பாதிப்பு, அழற்சியால் ஏற்படக் கூடியChronicdiseasesillness கூறப்படும் நாட்பட்ட நோய்களை குறைக்கும். உடல் செல்கள் புத்துணர்ச்சியாக இருக்கும் 

சர்க்கரை அளவை குறைக்க உதவும், மேலும், சர்க்கரை நோயாளிகளுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்த பானம். மாதுளையில் உள்ள சத்துக்கள்,antiinflammatory கொண்டுள்ளன. அதாவது, உடலில் உள்ள செல்கள் மற்றும் திசுக்களில் ஏற்படும் அழற்சி, சேதம் ஆகியவற்றை ரிப்பேர் செய்து, மூட்டு வலி, வீக்கம், வாதம் போன்றவற்றை ஏற்படாமல் தடுக்கும் பெண்களின் கருப்பை ஆரோக்கியத்தை பலப்படுத்தும், கருப்பை சார்ந்த குறைபாடுகளை சரி செய்யும் ஆற்றல் மாதுளையில் உள்ளது. எனவே, பெண்கள் தினமும் மாதுளை ஜூஸ் குடிப்பது, மாதவிடாய் முதல் பல பிரச்சனைகளை சுலபமாக சரி செய்ய உதவும்  

மாதுளையில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட் செல்களை ஆரோக்கியமாக வைப்பது, வெளித் தோற்றத்திலும் பிரதிபலிக்கும். தினமும் மாதுளை ஜூஸ் குடித்தால் சருமப் பொலிவு கிடைக்கும், வயதாகும் அறிகுறிகள் தாமதமாகும், இதனால் இளமையான தோற்றம் பெறலாம்.  நோய், ஊட்டச்சத்து குறைபாடு, பலவீனம், கெமிக்கல் சிகிச்சை போன்றவற்றால் முடி அதிகமாக கொட்டினால், தினமும் ஒரு கிளாஸ் மாதுளை ஜூஸ் குடித்தால், முடி உதிர்வு குறைந்து, முடி அடர்த்தியாக வளரத் துவங்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News