எல்லாவற்றிலும் ,எங்கும் ரசித்து வாழ கற்றுக்கொள் .
காட்டு மூங்கில் துளைகளில் காற்று எழுப்பும் அழகு ஓசையைக் கேட்பதற்கு, ஓடும் ஆற்றின் சலசலப்புச் சத்தம் கேட்க ரசனை வேண்டும்.அன்றாட வாழ்வில், சாப்பிடுவது, காபி குடிப்பது, காதல் மிக்க தாம்பத்யம், குழந்தைகளுடன் விளையாட்டு என எல்லாவற்றிலும் வேகம் அல்லது அவசரம் இல்லாமல் ரசித்து வாழ்தலே இன்பம்.
குறிப்பிட்ட விஷயத்தின் மீது சுவை கொள்ளுதல் ரசனை எனப்படும். ரசனை கொண்ட ஒருவரே ரசிகன் அல்லது ரசிகை எனப்படுவார். ரசம் என்பதற்கு 'சாறு' சொல் சுவை, கலை உணர்வு எனப் பொருள்
குற்றால அருவியில் ஆனந்தமாக குளிப்பது.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலை நிதானமாக ரசிப்பது.
தஞ்சை கோபுர அழகை ரசிப்பது.
நெல்லையப்பர் கோயிலின் துாண்களின் வரும் பலவித சப்தங்கள்.
தென்காசி கோயில் வாசலில் நம்மை உள்ளே போக வைக்கும் வெளியே தள்ளும் தென்றல் காற்றை உணர்தல்.
மதுரை மீனாட்சியம்மனின் மாணிக்க மூக்குத்தியின் அழகு.
சிருங்கேரி சாரதாம்பாளின் ஆபரணங்களின் அழகு.
காஞ்சி காமாட்சியின் மடித்து உட்கார்ந்த நிலை அழகு.
காருகுறிச்சி நாதஸ்வரம், லால்குடி வயலின், பாலமுரளி கச்சேரி.
கட்டபொம்மனாக நடித்த சிவாஜியின் வீர வசனம்.
என எங்கும் ரசனைக்கு இடமுண்டு. அதற்கான நேரம், இடம், ரசிக்கக் கூடிய மனம் வேண்டும். அதுதான் கடவுள் தரும் கொடை. பாரதியார் அதையே 'ரசத்தில் தேர்ச்சி கொள்' என்கிறார்.
பாரதியாருக்கு சுற்றிலும் எத்தனை விதமான முட்டுக்கட்டைகள்?
போதிய வருமானம் இன்மை, குடும்பப் பிரச்னை, அரசின் கண்காணிப்பு, ஊரெங்கும் பித்தன் என்ற ஏளனம் எந்தளவிற்கு ரசனை இருந்தால் அவர், 'ரசத்திலே தேர்ச்சி கொள்' என எழுதிஇருப்பார்.
0
Leave a Reply