மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் 'சூப்பர் 100' அரையிறுதியில், இந்தியாவின் துஷார் சுவீர், தான்வி சர்மா .
மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் 'சூப்பர் 100' அசாமின் கவுகாத்தியில், பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின்தான்வி சர்மா, சகவீராங்கனை தான்யாவை எதிர்கொண்டார்.
முதல் செட்டை தான்வி 21-17, இரண்டாவது செட்டை, 27-25 என தான்வி கைப்பற்றி,. முடிவில் தான்வி வெற்றி பெற்று, அரையிறுதிக்குள் நுழைந்தார்.
இந்தியாவின் அனுபமா, மற்றொரு காலிறுதியில், 21-19, 6-21, 12-21 என, சக வீராங்கனை அஷ்மிதாவிடம் தோல்வி அடைந்தார். மற்ற காலிறுதி போட்டிகளில் இந்தியாவின் இஷாராணி, தஸ்னிம்மிர் தோல்வியடைந்தனர்.
இந்தியாவின் துஷார் சுவீர், ஆண்கள்ஒற்றையர் காலிறுதியில் ,21-14, 21-11 என மலேசியாவின் முகமது யூசுப்பை வென்று, அரையிறுதிக்கு முன்னேறினார். இந்தியாவின் சங்கர், 15-21, 21-13, 22-20 என சகவீரர் சனீத் தயானந்தை வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் தருண் 11-21, 18-21 என மலேசியாவின் டிரையான்ஷாவிடம் தோல்வியடைந்தார்.
ஆண்கள் இரட்டையர் காலிறுதியில் இந்தியா வின் சாய் பிரதீக்,புருத்வி ஜோடி 22-20, 21-18 என மலேசியாவின் இஷெங், லிம் ஜியான் ஜோடியை வென்றது..
0
Leave a Reply