கருஞ்சீரகத்தை சாப்பிட்டு வந்தால் ஜீரண சக்தி அதிகரிக்கும்.
கருஞ்சீரகத்தை சேர்த்து பயன்படுத்தினால் வாயு பிரச்சினை தீரும்.சர்க்கரை நோயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் மருந்தாக கருஞ்சீரகம் உள்ளது.கருஞ்சீரகத்தை அடிக்கடி பயன்படுத்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நோய் குணமடையும்.வாதநோய், நரம்பு தளர்ச்சி,மன சோர்வு,முதுமையில் ஏற்படும் சோர்வு போன்றவற்றிற்கு கருஞ்சீரகம் சிறந்த மருந்து.
கருஞ்சீரகத்தை அடிக்கடி பயன்படுத்தி வந்தால் நுரையீரல் கல்லீரல் மண்ணீரல் கணையம் சிறுநீரகம் என ஐந்து ராஜ உறுப்புகளும் பலப்படும்.கருஞ்சீரகத்தை உடலுக்கு உட்கொள்ளும் மருந்துகள் மூலம் மட்டுமன்றி, உடலுக்கு அழகு தரும் வெளிப்பூச்சு மருந்தாகவும் பயன்படுகிறது.
கருஞ்சீரக எண்ணெயை, கை, கால் மூட்டுகளில் தடவுவதன் மூலம், நல்ல பலனை பெறலாம்.கருஞ்சீரக எண்ணெயை, முன் தலையில் சிறிது தடவிவர, கடுமையான தலைவலி உள்ளிட்ட பாதிப்புகளில் இருந்து நிவாரணம் பெறலாம், முடி உதிர்தல் குறையும்.கருஞ்சீரகத்தை சாப்பிட்டு வந்தால் ஜீரண சக்தி அதிகரிக்கும்.மலச்சிக்கலை போக்க வல்லது.
கருஞ்சீரகத்தை அடிக்கடி பயன்படுத்தி வந்தால் கண் நோய்களை குணமாக்கும்,பார்வை தெளிவடையும். கண் எரிச்சல் தீரும். கண்களின் பார்வைத்திறனை அதிகரிக்க செய்கிறது, ஒட்டுமொத்த கண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது
சர்க்கரை நோயாளிகள் கருஞ்சீரகத்தை எடுத்து கொள்ளும் போது இன்சுலின் சுரப்பை தூண்டி விட செய்கிறது. இரத்தத்தில் சர்க்கரை அளவை சரியான அளவில் வைத்திருக்கவும் உதவுகிறது.
கரப்பான், சொரியாசிஸ் உள்ளவர்கள் கருஞ்சீரகத்தைப் பொடியாக்கி தேய்த்துக் குளிக்கலாம். இதனால் நோயின் தீவிரம் குறையும்; அதனால் ஏற்பட்ட புண்களும் தழும்புகளும் மறையும்.
நீரிழிவு நோயாளிகள், கருஞ்சீரகத்தை சாப்பிட்டு வந்தால், அவர்களின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. நரம்புத் தளர்ச்சியை அடியோடு விரட்டி அடிக்கும் அற்புதமான மருந்தக கருஞ்சீரகம் உள்ளது.
கருஞ்சீரகத்தை அடிக்கடி பயன்படுத்தி வந்தால், உடல் சருமத்தில் ஏற்படும், சொறி, சிரங்கு, தேமல் போன்ற சரும வியாதிகளையும், சரிசெய்யும் தன்மை கொண்டது, தோல் நோய்கள் தீரும் மற்றும் சருமத்துக்குப் பளபளப்பூட்டக்கூடியதாகவும் விளங்குகிறது.
ஒரு சிறிய சிட்டிகை கருஞ்சீரகத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து காலையிலேயே குடிக்கவும், தினமும் எடுத்தால் மூட்டு வலி, உடல் வீக்கம் மற்றும் உடல் சோர்வு குறையும்.
அரை கரண்டி கருஞ்சீரகத்தை தேனுடன் கலந்து இரவு படுக்கும் முன் எடுத்தால் தூக்கம் மேம்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
உணவில் சமைக்கும் போது அரை கரண்டி அளவு கருஞ்சீரகத்தை சேர்த்து பயன்படுத்தினால் செரிமானம் சீராகி வயிறு வீக்கம், வாயுமற்றும் குடல் தொந்தரவு குறையும்.
0
Leave a Reply