25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


கோவிலின் காவலனாக யாளிகள்,
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கோவிலின் காவலனாக யாளிகள்,

டைனோசர் போன்ற ராட்சத விலங்குகள் இந்த மண்ணில் நடமாடி இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதே போல், நமது நாட்டில் யாளி என்ற ஒரு மிகப்பெரிய விலங்கு வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. கோவில்களில் காணப்படும் யாளி என்ற உயிரின சிலை இதற்கு ஆதாரமாக உள்ளது.

சிங்கமுகமும், யானையின் துதிக்கை மற்றும் வலுவான உடலுடன் காணப்படும் யாளி, இந்த நிலத்தில் வேறு எந்த விலங்குகளாலும் வெற்றி கொள்ள முடியாத ஒரு விலங்காக வலம் வந்ததாகவும், இவை தெய்வங்களின் வாகனமாக இருந்ததாகவும் மக்களிடம் நம்பிக்கை நிலவியது.இதன் காரணமாகவே, இந்த விலங்கு முற்கால அரசர்களால் போற்றப்பட்டு கோவில்களில் அவற்றுக்கு மிகப்பெரிய சிலைகள் அமைக்கப்பட்டன.

ராஜராஜ சோழன் கட்டிய பிரமாண்டமான தஞ்சை பெருவுடையார் கோவிலில் பல்வேறு வகையான யாளிகளை அடையாளம் காட்டும் வகையில் யாளி வரிசை என சிலைகள் உள்ளன.மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்பட பெருங்கோவில்களில் பெரிய அளவிலான யாளி சிலைகள் காணப்படுகின்றன.

இந்த யாளி சிலையின் முழங்காலுக்கு கீழேதான் யானை சிலைகள்அமைக்கப்பட்டுள்ளன. யானையை விட பல மடங்கு பெரிய அளவிலான உருவம் கொண்டவையாக யாளிகள் இருந்ததாக கதைகள் கூறுகின்றன.

பொதுவாக, இந்த யாளி என்ற ராட்சத உயிரினங்கள் என்பவை பண்டைய தமிழர் நாகரிகமான கடலில் மூழ்கிய லெமூரிய நாகரிகத்தில் வாழ்ந்த மிருகங்கள் என்று நம்பப்படுகிறது. சிம்மயாளி, மகர யாளி, யானை யாளி என்று இருந்ததாக கூறப்படுகிறது. இந்த யாளிகள் கோவில்களை பாதுகாப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள். இதன் காரணமாக, யாளி சிலைகளை வீடுகளிலும் வைக்கும் பழக்கம் இன்றும் உள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News