25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


வெண் தொண்டை மீன்கொத்தி  பறவை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வெண் தொண்டை மீன்கொத்தி  பறவை.

வெண் தொண்டை மீன்கொத்தி, தனித்துவ அழகுள்ள பறவையினங்களில் ஒன்று .வயல்வெளி, காட்டுப்பகுதி என எங்கும் வசிக்கும். இவை பளபளக்கும் நீல இறகுகள் உடையது. பழுப்பு நிற மார்பு, வெண் தொண்டை மற்றும் செந்நிற அலகு சிறப்பான தோற்றம் தரும். நீல இறகு, தெளிந்த வானத்தையும், மார்பில் பழுப்பு நிறம் மண்ணை பிரதிபலிக்கிறது. இவை இயற்கையுடன் இணைப்பை வெளிப்படுத்தும்.

மீன்களோடு பூச்சி, பல்லி, தவளை, சிறு பாம்புகளை உண்ணும். மரக்கிளையில் அமர்ந்து, கூர்மை பார்வையுடன் கண்காணித்து, திடீரென நீரில் மூழ்கி மீனை பிடிக்கும். இதன் வேட்டைத் திறன் வியப்பு ஏற்படுத்தும். தனித்துவக் குரலில் பாடும். ஆண்டு முழுதும் இனப்பெருக்கம் செய்யும். மரம், மண் பொந்தில் கூடு கட்டி, ஏழு முட்டைகள் வரை இடும். இந்த பறவையினம் தெற்காசியா முதல் மத்திய கிழக்கு வரை பரவியுள்ளது. இந்தியாவில் பல்லுயிர் பெருக்க மகத்துவத்தை உணர வைக்கும் உயிரனங்களில் ஒன்றாக உள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *