பூனை பாம்பை கண்டால் பயப்படாமல் அமைதியாக இருக்கும்.
பாம்புகளை ஒரு பொருட்டாகவே பூனைகள் மதிப்பது இல்லை, என்கிறார்கள் ஆய்வாளர்கள்.பொதுவாக, பூனையின் இரவு வேட்டை வாழ்க்கை பயங்கரமானது. தன்னிச்சையாக வளரும் பூனைகள் இரவு நேரங்களில் பெரும்பாலும் வீட்டில் உள்ள பல்லிகள், பறவைகள். கோழிகள் மற்றும் சில நேரங்களில் பாம்புகளை கூட வேட்டையாடும்.எந்த விலங்குகளும் பாம்புகளை கண்டால் மிரண்டு விலகி விடும். ஆனால், பூனை பாம்பை கண்டால் பயப்படாமல் அமைதியாக இருக்கும். கவனமாக பார்க்கும், ஒரு வேளை அச்சுறுத்தினால் பாம்பை விடாமல் தாக்கும்.
பூனைகள் பாம்புகளை விட ஏழு மடங்கு வேகமாக எதிர் தாக்குதல் நடத்துகின்றன. இந்த வேகம் தான் பாம்பு கடியில் இருந்து பூனைகள் தப்பிக்கவும், விரைவாக திருப்பி தாக்கவும் அவைகளுக்கு உதவுகிறது.பாம்புகள் எதிரியை ஒரு நேர்கோட்டில் வேகமாக தாக்குகின்றன. நஞ்சை பாய்ச்சும் ஒரு விரைவான நச்சுகடியை மட்டுமே நம்பி இயங்குகின்றன. மறுபுறம், பூனைகள் நெகிழ்வான உடலமைப்பு, கூர்மையான பார்வை, ஒலியை துல்லியமாக கேட்கும் காதுகள், எந்த திசையிலும் தாவி குதிக்கும் திறன், கூர்மையான நகங்கள் மற்றும் பற்கள், வேகமான பாய்ச்சல் என்று பல திறன்களை கொண்டது.
பூனைகள் தங்கள் நகங்களையும், பற்களையும் பயன்படுத்தி வேகமாகவும், பெரும்பாலும் பாம்பின் தலை அல்லது கழுத்தை குறி வைத்தும் தாக்கும். பாம்பின் கழுத்து பலமாக தாக்கப்பட்டால் கழுத்து எலும்பு உடைந்து போகும். இதனால், பாம்புகள் பூனைகளிடம் இருந்து தப்பிக்க வழி தேடி ஓடும் என்கிறது ஆய்வுகள்.
0
Leave a Reply