25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


வீரப் பெண்மணிக்காக அர்ப்பணிக்கப்பட்ட ராணி சதி மந்திரை .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வீரப் பெண்மணிக்காக அர்ப்பணிக்கப்பட்ட ராணி சதி மந்திரை .

 ராணி சதி கோவிலானது நாராயணி தேவி கோவில், தாதி மா கோவில் என்றும் அழைக்கப்படுகிறது . தாதி என்றால் பாட்டி என்று பொருள். இது இந்தியாவின் ராஜஸ்தானின் ஜுன்ஜுனு மாவட்டத்தில் தேவி சதிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோவிலாகும். இது 13 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் வாழ்ந்த ராஜஸ்தானி பெண்மணியான ராணி சதி தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்ட மிகப்பெரிய கோவிலாகும், இவர் தனது கணவர் இறந்த பிறகு தன்னையும் எரித்து தீக்குளித்தார். அதற்காக தான் அவருக்கு சதி தேவி என்ற பெயர் வந்தது. இந்தியாவில் சதி வழக்கத்தை முற்றிலும் தடை செய்த போதிலும், ராஜஸ்தானிலும் பிற இடங்களிலும் உள்ள அவருடைய பல கோயில்கள் அவருடைய வீரமான செயல்களை நினைவு கூறும் வகையில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.கம்பீரமான வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவிலின் படைப்பானது கண்களுக்கு விருந்தாகவும் அனைவரையும் கவரும் வகையிலும் இருக்கிறது.இந்த கோவில் பக்தர்களின் இதயங்களில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது, ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்களை இந்த கோவில் ஈர்க்கிறது, அவர்கள் ராணி சதி தாதியின் ஆசீர்வாதங்களைப் பெறவும் அவருக்கு மரியாதையை செலுத்தவும் வருகிறார்கள்.

ராணி சதி தாதி கோவில் பாரம்பரிய ராஜஸ்தானி வடிவமைப்பின் தலைசிறந்த படைப்பாகும், இதில் சிக்கலான ஓவியங்கள், அழகாக செதுக்கப்பட்ட தூண்கள் மற்றும் பிரமாண்டமான வளைவுகள் உள்ளன. கோயில் வளாகம் ஒரு பெரிய பகுதியை உள்ளடக்கியது, மைய சன்னதி ராணி சதி தாதிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அவர் ஒரு குறிப்பிடத்தக்க சிலை அல்லாத வடிவத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கிறார் - ஒரு திரிசூலம்... இது துர்கா தேவியுடன் அவரது தொடர்பைக் குறிக்கிறது.பிரதான சன்னதியைத் தவிர, இந்தக் கோவிலில் மற்ற தெய்வங்களுக்கும் பல சிறிய கோவில்கள் உள்ளன. அவை அந்த இடத்தின் ஆன்மீக ஒளியை மேம்படுத்துகின்றன. கோவில் வளாகமானது பசுமையான தோட்டங்களாலும், பளிங்குத் தரைகளாலும் மற்றும் ராணி சதி தாதியின் கதைகளையும் அவரது தெய்வீகப் பயணத்தையும் விளக்கும் அற்புதமான கலைப்படைப்புகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.இந்தக் கோவிலின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று, அதன் தனித்துவமான சிலை அல்லாத வழிபாடாகும். திரிசூலம் தெய்வத்தின் சக்தியை குறிக்கிறது, ராணி சதி தாதியின் உடல் வடிவத்தை விட ஆன்மீக ஆற்றலையும் சக்தியையும் இந்த திரிசூலமானது வலியுறுத்துகிறது.

ராணி சதி கதை மகாபாரதத்துடன் தொடர்புடையதாக புராணங்கள் கூறுகின்றன. மகாபாரதப் போரில் அபிமன்யு இறந்தபோது, அவர் மனைவி உத்திரா தனது உடலையும் அபிமன்யுவின் இறுதிச் சடங்கில் எரித்து கொண்டு சதி ஆக விரும்பினார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவர்கள் அந்த நேரத்தில் அவளுக்கு காட்சி கொடுத்து, நீ இப்போது கர்ப்பமாக இருக்கிறாய், ஆகவே இப்போது சதி செய்வது சரியில்லை என்றும் மேலும், உன்னுடைய சதி ஆக வேண்டும் என்ற விருப்பம் அடுத்த பிறவியில் கண்டிப்பாக நிறைவேறும் என்ற வரத்தையும் அவளுக்கு வழங்கினார்.கிருஷ்ணரின் அருள் வாக்குப் படி, அவள் அடுத்த பிறவியில் ராஜஸ்தானில் உள்ள டோக்வா கிராமத்தில் குர்சமாலின் மகளாகப் பிறந்தாள். அவளுக்கு நாராயணி என்று பெயரிடப்பட்டது.அதேபோல், அபிமன்யு ஹிசாரில் ஜலிராமின் மகனாகப் பிறந்து தந்தன் என்று பெயரிடப்பட்டான். தந்தனும் நாராயணியும் திருமணம் செய்துகொண்டு அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர்.

அபிமன்யுவிடம் ஒரு அழகான குதிரை இருந்தது. அதை ஹிசார் மன்னரின் மகன் நீண்ட காலமாகப் பார்த்துக்கொண்டிருந்தான்.மன்னரின் மகன் அந்த குதிரையை தனக்கு தர வேண்டும் என்று கேட்ட போது, தந்தன் தன் விலைமதிப்பற்ற குதிரையை ராஜாவின் மகனிடம் ஒப்படைக்க மறுத்துவிட்டான்.பின்னர் ராஜாவின் மகன் குதிரையை வலுக்கட்டாயமாக வாங்க முடிவு செய்து, தந்தனை சவால் விடுத்து போருக்கு அழைத்தான். தந்தன் தைரியமாக போரிட்டு, ராஜாவின் மகனைக் கொன்று விட்டான். இதனால் கோபமடைந்த ராஜா, போரில் நாராயணியின் முன்னால் தந்தனைக் கொன்று விட்டார். பெண் துணிச்சலுக்கும் சக்திக்கும் அடையாளமாக நாராயணி ராஜாவுடன் சண்டையிட்டு ராஜாவையே கொன்று விடுகிறாள். பின்னர் அவள் ராணாஜிக்கு (குதிரையின் பராமரிப்பாளர்) உடனடியாக தீக்குளிக்க ஏற்பாடு செய்யுமாறு கட்டளையிட்டாள். அவளது கணவரின் தகனத்துடன் அவளையும் சேர்த்து எரிக்குமாறும் ஆணையிட்டாள்.

தனது கணவருடன் சதி ஆக வேண்டும் என்ற தனது விருப்பத்தை நிறைவேற்றுவதில் ராணாஜி முக்கிய பங்கு வகித்த காரணத்தினால், வரலாற்றில் தன் பெயரோடு உன் பெயரையும் சேர்த்து வழிபடுவார்கள் என்று அவனுக்கு ஆசி வழங்கினாள். அன்றிலிருந்து நாராயணி ராணி சதி என்று அழைக்கப்படுகிறார்.விசுவாசம், தைரியம் மற்றும் சுய தியாகத்தின் உருவகமாகக் கருதப்படும் ராணி சதி தாதியின் கதை, பெண்களை ஆழமாகப் பாதிக்கிறது. மேலும் அவரது கோயில் அவர்களுக்கு ஆன்மீக அடைக்கலமாக மாறியுள்ளது.பெண்கள் தங்கள் கணவர்களின் ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுள், குழந்தைகளின் பாதுகாப்புக்காகவும் மற்றும் தங்களுடைய குடும்ப ஒற்றுமைக்காகவும் ராணி சதி தேவியை பிரார்த்தனை செய்கிறார்கள்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News