25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


அயர்லாந்து நாட்டு ஹாக்கி போட்டியில் பங்கேற்பதற்காக நேற்று மதுரை விமான நிலையம்  வந்த வீரர்கள் மதுரையின் வரவேற்பை வியந்து ரசித்தனர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அயர்லாந்து நாட்டு ஹாக்கி போட்டியில் பங்கேற்பதற்காக நேற்று மதுரை விமான நிலையம்  வந்த வீரர்கள் மதுரையின் வரவேற்பை வியந்து ரசித்தனர்.

நேற்று அயர்லாந்து நாட்டு அணியினர், மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நவ., 28ல் துவங்க உள்ள ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டியில் பங்கேற்பதற்காக, மதுரை விமான நிலையம்  வந்தனர்.. மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் பிரவீன்குமார், விமான நிலையத்தில் வரவேற்றார்.  

வீரர்கள், அணியைச் சேர்ந்தவர்களுக்கு துாத்துக்குடியின் பெருமை சொல்லும் வகையில் சங்குபாசியும் வரவேற்கும் முகமாக சந்தனமாலையும் அணிவித்தார். தொடர்ந்து பரி வட்டத் துண்டை அணிவித்து கவுரவித்தார். மகளிர் சுயஉதவிக்குழுவினரின் ஆர்கானிக் சோப்பு உட்பட பல்வேறு பொருட்கள் அடங்கிய பரிசுப்பெட்டகம், போட்டிக்கான லோகோவை வீரர்களுக்கு வழங்கினார்.

விமான நிலைய வாசலில் பொய்க்கால் குதிரை ஆட்டம், கட்டைக்கால் ஆட்டம், கரகாட்ட குழுவினர் காத்திருந்தனர். வீரர்கள் வெளியே வந்ததும்,  தாரை தப்பட்டை முழங்க, பாரம்பரிய ஆட்டத்துடன் வீரர்களை வரவேற்றனர். உற்சாகமடைந்த வீரர்கள், சந்தோஷத்துடன் கூடவே நடனமாடி ,தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். .மதுரையின்வரவேற்பை வியந்து ரசித்தனர்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News