25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


மாம்பூக்கள் மா மரங்களில் பூக்க துவங்கியுள்ளதால் இந்த ஆண்டு நல்ல விளைச்சல் கிடைக்கும்என விவசாயிகள் எதிர்பார்ப்பு .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாம்பூக்கள் மா மரங்களில் பூக்க துவங்கியுள்ளதால் இந்த ஆண்டு நல்ல விளைச்சல் கிடைக்கும்என விவசாயிகள் எதிர்பார்ப்பு .

மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதி ஸ்ரீவில்லிபுத்துார் வத்திராயிருப்பு மாமரங்களில் பரவலாக மாம்பூக்கள் பூக்க துவங்கியுள்ளதால் இந்த ஆண்டு நல்ல விளைச்சல் கிடைக்கும் பூத்த பூக்கள் பாதிப்பின்றி விளைச்சலை எதிர்பார்க்கும் விவசாயிகள்  எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

பங்கனப்பள்ளி, கிளிமூக்கு, அல்போன்சா, சப்போட்டா போன்ற மா சாகுபடி ஸ்ரீவில்லிபுத்துார்தாலுகாவில் மம்சாபுரம், செண்பகத்தோப்பு, பந்தபாறை, திருவண்ணாமலை பகுதிகளிலும், வத்திராயிருப்பில் புதுப்பட்டி, கான்சாபுரம், அத்திகோயில், பிளவக்கல் அணை, தாணிப்பாறை பகுதிகளில் மா சாகுபடி ஏராளமான ஏக்கர் பரப்பளவில் ஆண்டுதோறும் அதிகளவில் நடந்து வருகிறது. 

அதிக குளிர் மற்றும் மழை, தேன் நோய் பாதிப்பினால்  கடந்த ஆண்டு மா விளைச்சல் சிறப்பாக இல்லாமல் விவசாயிகள் வருத்தம் அடைந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு மார்கழி கடைசியில் துவங்கி தற்போது மாமரங்களில் அதிக அளவில் பூக்கள் பூக்க துவங்கியுள்ளது.இன்னும் இரு வாரங்களில் காய் பிடித்து மே மாதம் முதல் மாம்பழ சீசன் துவங்கும் என விவசாயிகள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News