25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


500 'ஸ்டார்ட்அப்'கள் ஓராண்டில் துவக்குவதை ஊக்குவிக்க  தமிழக அரசு திட்டம் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

500 'ஸ்டார்ட்அப்'கள் ஓராண்டில் துவக்குவதை ஊக்குவிக்க  தமிழக அரசு திட்டம் .

சென்னை, கோவை போன்ற பெருநகரங்கள் மட்டுமின்றி; அனைத்து நகரங்கள்,கிராமங்களிலும் தொழில் ஐடியா வைத்து உள்ளவர்களை கண்டறிந்து, ஸ்டார்ட்அப் நிறுவனம் துவக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதற்காக மாநிலம் முழுதும் இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை துவக்க, 'வெஞ்சர் பில்டர்' எனப்படும், ஸ்டார்ட்அப் நிறுவனங்களை உருவாக்கும் அமைப்புகளுக்கு ஆதரவளிக்கும் திட்டத்தை, ஸ்டார்ட்அப் டி.என்., நிறுவனம் துவக்கியுள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உருவாக்கும் அமைப்புகளுக்கு ஆதரவளிக்கும் திட்டத்தை, தமிழக அரசு துவக்கியுள்ளது. இதற்கு, 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது

20 புதியதொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் அமைப்புகள், இத்திட்டத்தின் கீழ், நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, நியமிக்கப்படும்.அவை, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நகரங்களில், தொழில் ஐடியா வைத்துள்ள நபர்களை சந்தித்து, தொழில் துவக்குவது முதல் அதன் வாயிலாக பொருட்களை உற்பத்தி செய்வது வரை உதவிகளை செய்ய வேண்டும்.ஒரு வெஞ்சர் பில்டர் களை ஊக்குவிக்கும் அமைப்புகள், நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, நியமிக்கப்படும்.ஒரு வெஞ்சர் பில்டர் நிறுவனம், ஒப்பந்தம் செய்ததில் இருந்து, 12 மாதங்களுக்குள், 25 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் துவக்க உதவி செய்ய வேண்டும். இம்முயற்சியின் வாயிலாக ஆண்டுக்கு, 500 ஸ்டார்ட்அப்கள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது. இதற்காக ஒரு வெஞ்சர் பில்டர் நிறுவனத்துக்கு 2.50 லட்சம் ரூபாய் வீதம் வழங்கப்படும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News