வத்திராயிருப்பு வட்டம், பிளவக்கள் பெரியாறு அணையில்தற்போதைய நீர் இருப்பு மற்றும் நீர் வரத்து குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்தும் தொடர்புடைய அரசு அலுவலர்களுடன் ஆய்வு.
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், பிளவக்கள் பெரியாறு அணையில் (21.10.2025) வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் முன்னிலையில் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து அணையின் தற்போதைய நீர் இருப்பு மற்றும் நீர் வரத்து குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்தும் தொடர்புடைய அரசு அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இராஜந்திரன் அவர்கள், சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான்,I A S, அவர்கள் ஆகியோர் உள்ளனர்.
0
Leave a Reply